NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
    குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
    இந்தியா

    குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது

    எழுதியவர் Sindhuja SM
    April 04, 2023 | 07:38 pm 1 நிமிட வாசிப்பு
    குடிநீரில் லித்தியம் அதிகம் இருந்தால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது
    குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால் கூட குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படலாம்.

    கர்ப்பிணி பெண்கள் குடிப்பதற்குப் பயன்படுத்தப்படும் வீட்டுக் குழாய் நீரில் அதிக அளவு லித்தியம் இருந்தால், அது குழந்தையின் நரம்பியல் வளர்ச்சிக்கு தேவையான ஒரு முக்கியமான மூலக்கூறை பாதிக்கலாம் என்கின்றனர் விஞ்ஞானிகள். இது குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். எதிர்காலத்தில், லித்தியம் பேட்டரியின் பயன்பாடு மற்றும் நிலத்தடி நீர் மாசு போன்ற காரணிகளால் தண்ணீரில் லித்தியம் அளவு அதிகரிக்கக்கூடும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். அமெரிக்காவின் கலிபோர்னியா லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தின்(UCLA) ஹெல்த் விஞ்ஞானிகள், டென்மார்க்கின் தரவுகளின் அடிப்படையில் தங்கள் ஆய்வின் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். அதனால், இந்த முடிவுகள் பிற இடங்களுக்கும் மக்கள் தொகைக்கும் ஏற்றவாறு மாறுபடும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

    கர்ப்பிணி பெண்கள் லித்தியம் உட்கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகள்

    ஜர்னல் ஆஃப் அமெரிக்கன் மெடிக்கல் அசோசியேஷன் (JAMA) பீடியாட்ரிக்ஸில் அவர்கள் தங்கள் முடிவுகளை வெளியிட்டுள்ளனர். "வளரும் மனித மூளையை பாதிக்கக்கூடிய எந்தவொரு குடிநீர் மாசுபாடும் தீவிர ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்று UCLA ஹெல்த் நரம்பியல் பேராசிரியர் பீட் ரிட்ஸ் கூறியுள்ளார். லித்தியத்தின் கூறுகள் மனதை சமநிலைப்படுத்த உதவுவதால், மனச்சோர்வு மற்றும் பைபோலார் கோளாறுகளுக்கான சிகிச்சையில் லித்தியம் நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், கர்ப்பிணி பெண்கள் லித்தியம் உட்கொள்வதால் கருச்சிதைவு, இதய கோளாறு, குறைபாடுகளுடன் குழந்தை பிறப்பது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    அமெரிக்கா
    உலகம்
    உலக செய்திகள்

    அமெரிக்கா

    ஆர்ட்டெமிஸ்- 2 விண்வெளிக்கு செல்லும் 4 வீரர்களை அறிவித்த நாசா! நாசா
    டிக்டாக் செயலிக்கு தடைவிதித்த ஆஸ்திரேலியா அரசு - இப்படி ஒரு காரணமா? தொழில்நுட்பம்
    சென்னையில் தயாரித்த கண் மருந்தில் புதிய கிருமி: எச்சரிக்கை விடுக்கும் அமெரிக்கா இந்தியா
    நீதிமன்றத்தில் ஆஜராக நியூயார்க் சென்றிருக்கும் டொனால்டு டிரம்ப் உலக செய்திகள்

    உலகம்

    உலகில் ஆறில் ஒருவரை பாதிக்கும் மலட்டுத்தன்மை: உலக சுகாதார மையம் அறிக்கை உலக சுகாதார நிறுவனம்
    மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் தொடரிலிருந்து விலகுவதாக ரஃபேல் நடால் அறிவிப்பு விளையாட்டு
    ஒலிம்பிக் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரருக்கு 2 ஆண்டுகள் தடை விளையாட்டு
    லண்டன் கல்லூரியில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் நடந்ததாக இந்திய மாணவர் குற்றம் சாட்டு லண்டன்

    உலக செய்திகள்

    இத்தாலியின் சாட்ஜிபிடி தடை விவகாரம்: மற்ற நாடுகளும் தடையில் இறங்கியுள்ளது சாட்ஜிபிடி
    விபத்துக்களை ஏற்படுத்தும் வாடகை இ-ஸ்கூட்டர்கள் - தடைவிதிக்க பாரிஸ் வாக்களிப்பு! எலக்ட்ரிக் வாகனங்கள்
    மெக்டொனால்டு அலுவலகங்கள் மூடல்! பணிநீக்க அறிவிப்பை வெளியிடுகிறது: அறிக்கை ஆட்குறைப்பு
    உலகளவில் தாவர பூஞ்சையால் பாதிக்கப்பட்ட முதல் இந்தியர் இந்தியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023