NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி 
    408 மின்மாற்றிகளும், 149 குடிநீர் அமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

    கனமழையை மாநில பேரிடராக அறிவித்தது இமாச்சல்: 5 நாட்களில் 77 பேர் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    Aug 19, 2023
    10:15 am

    செய்தி முன்னோட்டம்

    கனமழையால் ஏற்பட்ட பெரும் சேதத்தை மாநில பேரிடராக இமாச்சல பிரதேச அரசு நேற்று(ஆகஸ்ட் 18) அறிவித்தது.

    சம்மர் மலைப் பகுதியில் உள்ள சிவன் கோயிலின் இடிபாடுகளில் இருந்து மற்றொரு உடல் நேற்று மாலை கண்டெடுக்கப்பட்டது. இதனையடுத்து, இமாச்சல் மாநிலத்தில் கடந்த 5 நாட்களில் 77 இறப்புகள் பதிவாகியுள்ளன.

    அந்த சிவன் கோவில் இடிபாடுகளில் இன்னும் நான்கு பேர் புதைக்கப்பட்டிருக்காலம் என அஞ்சப்படுவதாக சிம்லா எஸ்பி சஞ்சீவ் குமார் காந்தி தெரிவித்துள்ளார்.

    இந்த கனமழையால் மனித உயிர் மற்றும் உடமைகளுக்கு ஏற்பட்ட சேதத்தை கருத்தில் கொண்டு இமாச்சல் மாநிலம் முழுவதும் "இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதி" என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இமாச்சலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருவதால், பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.

    ந்கத்

    இமாச்சலில் உள்ள 600 சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன

    மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவ மாநில அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் இமாச்சல் முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்துள்ளார்.

    ஜூன் 24 ஆம் தேதி இமாச்சல் பிரதேசத்தில் பருவமழை தொடங்கியதில் இருந்து, அம்மாநிலத்தில் பெய்யும் கனமழையால் இதுவரை 220 பேர் உயிரிழந்துள்ளனர். 11,637 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது.

    இமாச்சலில் உள்ள 600 சாலைகள் இன்னும் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 550 சாலைகள் அடுத்த மூன்று நாட்களில் திறக்கப்படும் என்று பொதுப்பணித் துறை(PWD) அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தெரிவித்துள்ளார்.

    408 மின்மாற்றிகளும், 149 குடிநீர் அமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

    இதற்கிடையில், இமாச்சல் பிரதேசத்தில் இன்னும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்
    கனமழை
    வெள்ளம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    கனமழை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை மாவட்ட செய்திகள்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    மிகக் கடுமையான புயலாக வலுப்பெற இருக்கும் மோக்கா புயல்: மேற்கு வங்கத்திற்கு எச்சரிக்கை இந்தியா
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025