NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம் 
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம் 

    எழுதியவர் Nivetha P
    Jul 22, 2023
    04:13 pm

    செய்தி முன்னோட்டம்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகப்பிரசித்திப்பெற்ற கோயில் தான் 108 வைணவ திவ்ய தேசங்களுள் ஒன்றான ஆண்டாள் கோயில்.

    இது ஆண்டாள்-பெரியாழ்வார் உள்ளிட்ட இருவர் எழுந்தருளிய ஸ்தலம் என்பதால் கூடுதல் சிறப்பாக கருதப்படுகிறது.

    அதன்படி இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் தேரோட்ட திருவிழா பெருமளவில் விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.

    இதனையொட்டி கடந்த 14ம்தேதி இந்த தேரோட்ட திருவிழாவானது கொடியேற்றத்துடன் துவங்கப்பட்ட நிலையில், அன்றைய தினம் இரவு ஸ்ரீ ஆண்டாள்-ஸ்ரீ ரெங்கமன்னார் ஆகியோரது பவனி 16 சக்கர வாகனத்தில் அரங்கேறியது.

    அதன்பின்னர் திருவிழாவின் 5ம் நாளில் 5 கருடசேவையும், 7ம்நாளான 20ம்தேதி சயன சேவையும் நடந்தது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    அதன் தொடர்ச்சியாக 9ம் நாளான இன்று(ஜூலை.,22)திருவிழாவின் உச்சகட்ட நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நடந்தது.

    தேரோட்டம் 

    இன்று காலை 8.50க்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது

    ஆடிப்பூரம் என்பது ஆண்டாள் பிறந்த நட்சத்திரமாகும். அன்றைய தினம் நடக்கும் இந்த தேரோட்டத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தால் தங்கள் வாழ்வில் எல்லா நலன்களையும் பெறலாம் என்றும்,

    திருமணம் ஆகாதோர், குழந்தை இல்லாமல் உள்ள தம்பதிகள் ஆகியோர் இந்த தேரினை வடம் பிடித்து இழுத்தால் நிச்சயம் நல்லது நடக்கும் என்பதும் ஐதீகம்.

    இந்த தேர்திருவிழாவினை காண தமிழகம் மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் ஆண்டுதோறும் வருகை தருவது வழக்கம்.

    96 அடி உயரம் கொண்ட இந்த தேர் இன்று காலை 8.50க்கு இந்த தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது.

    அப்போது 30க்கும் மேற்பட்டோர் ஒருவர் மீது ஒருவர் கீழே விழுந்ததையடுத்து, அருகில் இருந்த தீயணைப்பு துறையினர் அவர்களை பத்திரமாக மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    விருதுநகர்
    திருவிழா

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் தமிழ்நாடு
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று நீரிழிவு நோய்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது பியூஷ் கோயல்
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு

    திருவிழா

    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூச திருவிழா - நாளை கொடியேற்றத்துடன் துவக்கம் மாவட்ட செய்திகள்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025