NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் 
    அரசு முறை பயணமாக வரும் 21ம் தேதி இலங்கை அதிபர் இந்தியா வருகை

    பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர் 

    எழுதியவர் Nivetha P
    Jul 10, 2023
    11:30 am

    செய்தி முன்னோட்டம்

    இலங்கை அதிபரான ரணில் விக்ரமசிங்கே வரும் 21ம் தேதி அரசு முறை பயணமாக இந்தியாவிற்கு வருகை தரவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இலங்கை நாட்டில் கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் நேர்ந்த மக்கள் எழுச்சி காரணமாக அப்போதைய அதிபரான கோத்தபய ராஜபக்சே தனது பதவியினை ராஜினாமா செய்தார்.

    அதனை தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இலங்கை நாட்டின் அதிபராக பதவியேற்றார்.

    அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கிட்டத்தட்ட ஒரு ஆண்டு காலம் முடிந்த நிலையில், ரணில் விக்ரமசிங்கே இந்தியாவிற்கு மேற்கொள்ளவுள்ள முதல் பயணம் இது என்பது குறிப்பிடவேண்டியவை.

    இதன்படி, 2 நாள் பயணமாக இந்தியா வரும் ரணில் பிரதமர் மோடி அவர்களை நேரில் சந்தித்து பேசவுள்ளார் என்று கூறப்படுகிறது.

    அதிபர் 

    இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளல் 

    இப்பயணத்தில் ரணில் விக்ரமசிங்கே அவர்களுடன், எரிசக்தித்துறை அமைச்சர் காஞ்சன விஜயசேகரா, வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோர் உடன் வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

    இலங்கை அதிபரின் இந்திய பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள இந்திய வெளியுறவு செயலாளரான வினய் மோகன் குவாத்ரா, அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளார் என்றும் செய்திகள் தெரிவிக்கிறது.

    இந்த வருகைக்கு முன்னர், இலங்கையில் இந்தியா செயல்படுத்தப்படும் எரிசக்தி, கடலோர பாதுகாப்பு போன்ற திட்டங்களை இறுதி செய்வார் என்று தெரிகிறது.

    கடந்தாண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு சிக்கி தவித்த இலங்கை, இந்திய அரசிடம் பலக்கோடி ரூபாய் கடனுதவியினை கேட்டு பெற்றது.

    தற்போது இலங்கை நாட்டின் பொருளாதார நிலை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இலங்கை
    இந்தியா
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! விமான சேவைகள்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை இலங்கைத் தமிழர்கள்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    இந்தியா

    தெலுங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பஞ்சாப் மாநிலங்களுக்கு பாஜக தலைவர்கள் நியமனம் பாஜக
    'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    தனிநபர் கடன் சேவையையும் வழங்கத் தொடங்கிய ஃபிளிப்கார்ட் ஃப்ளிப்கார்ட்
    இந்தியாவின் ஆண்டின் சிறந்த கால்பந்து வீரராக லல்லியன்சுவாலா சாங்டே தேர்வு கால்பந்து

    பிரதமர் மோடி

    அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி  இந்தியா
    குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து  இந்தியா
    அமெரிக்க பயணத்தின் போது எலான் மஸ்க் உள்ளிட்ட முக்கிய நபர்களைச் சந்திக்கும் பிரதமர் எலான் மஸ்க்
    ஆதிபுருஷ் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு கடிதம்  பிரபாஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025