NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
    அவர்களிடம் இருந்த 4 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

    தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

    எழுதியவர் Sindhuja SM
    Jun 22, 2023
    10:59 am

    செய்தி முன்னோட்டம்

    நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று இரவு கைது செய்திருக்கிறது.

    மீன் பிடி தடைக்கலாம் கடந்த வாரம் முடிவடைந்த நிலையில், இந்த ஒரு வாரமாக மீனவர்கள் தொடர்ந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்று கொண்டிருக்கின்றனர்.

    இந்நிலையில், நேற்று நெடுந்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றிருந்த மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படை அவர்களை கைது செய்திருக்கிறது.

    முதலில் 21 பேர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது மேலும் 4 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது.

    மேலும், அவர்களிடம் இருந்த 4 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

    இந்த 25 மீனவர்களும் புதுக்கோட்டை, நாகை மற்றும் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

    சி ஜே

    இரண்டு நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்ட 9 தமிழக மீனவர்கள் 

    ஜூன் 19ஆம் தேதி 9 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, அதற்கு அடுத்த நாள் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அப்போது, நெடுந்தீவுக்கு 9 மீனவர்களுடன் சென்ற அந்தோணி என்பவரது மீன் பிடி படகு பழுது காரணமாக இலங்கை கடல் எல்லைக்குள் சென்றது.

    அந்தநேரம் பார்த்து அப்பகுதிக்கு வந்த இலங்கை கடற்படை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்து, காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றது.

    அதற்கு பின்னர், அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    இந்த வழக்கை விசாரித்த இலங்கை நீதிபதி, படகு பழுதான விஷயத்தை அறிந்த பிறகு அந்த 9 மீனவர்களையும் ஜூன் 20ஆம் தேதி விடுவித்தனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழகம்
    இலங்கை
    கடற்படை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    தமிழ்நாடு

    "இது மிரட்டல் அல்ல; எச்சரிக்கை!": தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட வீடியோ  முதல் அமைச்சர்
    'திமுக ஃபைல்ஸ்' அவதூறு வழக்கு: பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சம்மன்  தமிழகம்
    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியின் இலாகா மாற்றம் திமுக
    நீட் தேர்வு: மாநிலத்தில் 2ஆம் இடத்தை பிடித்த கட்டிடத் தொழிலாளியின் மகள் நீட் தேர்வு

    தமிழகம்

    தமிழகத்தில் முதல் முறையாக கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடத்த மத்திய அரசு ஒப்புதல்! இந்தியா
    8 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்  தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    கலைஞரின் பிறந்த நாளை முன்னிட்டு 'பராசக்தி' படம் மறுவெளியீடு!  கருணாநிதி

    இலங்கை

    சென்னை- யாழ்ப்பாணம் விமான சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடக்கம்! கோவிட்
    திருச்சியில் இலங்கையை சேர்ந்த 9 பேர் கைது! இந்தியா
    ராஜபக்சே சகோதரர்களுக்கு கனடா விதித்த தடை உலகம்
    போலீசாருக்கு எதிராக போராட்டம்: தண்ணீர் பீரங்கி தாக்குதலில் ஷாம்பூ போட்டு குளித்த இலங்கை தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025