NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்
    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்

    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்

    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023
    06:13 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை தி.நகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலம் தானமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

    அந்த இடத்தில் திருப்பதி தேவஸ்தானம் ரூ.ஃ கோடி ரூபாய் செலவில் பத்மாவதி தாயார் கோயிலினை மிக பிரமாண்டமாக கட்டியுள்ளது.

    நாட்டிலேயே சென்னையில் தான் முதன் முறையாக பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோயில் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    இதற்கு முன்னதாக திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் சிலை, துவார பாலகர்கள் வனமாலி, பலாக்கினி சிலைகள், மூலவிக்ரகங்கள் மற்றும் கலசங்கள் ஆகியவை திருப்பதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 12ம்தேதி இச்சிலைகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள், ஹோமங்கள் முதலியன செய்யப்பட்டு வந்துள்ளது.

    'கோவிந்தா கோவிந்தா' என முழக்கம்

    கோயில் கர்ப்பக்கிரகத்தில் பத்மாவதி தயார் சிலை கடந்த 16ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது

    மூலவர் சிலைகள் நெல்லில் வைத்து தண்ணீர் மற்றும் 2 ஆயிரம் லிட்டர் பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

    இதனையடுத்து கோயில் கர்ப்பக்கிரகத்தில் பத்மாவதி தயார் சிலை கடந்த 16ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

    அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நேற்று(மார்ச்.,17) அதிகாலை 4 மணி முதல் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளது.

    7.35 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது.

    கோயிலின் விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது,

    'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட படி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த நிலையில், அவர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    திருப்பதி

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    சென்னை

    ஆட்டிசம் குறைபாடு: குழந்தையை சேர்க்க மறுத்த பள்ளிக்கு கண்டனம் சென்னை உயர் நீதிமன்றம்
    சென்னை பிரியாணி கடைகளில் ஆட்டு கறியோடு பூனை கறி கலந்து விற்பனை தமிழ்நாடு செய்தி
    சென்னையில் நம்பர் பிளேட் விதிமீறல்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் பணி துவக்கம் போக்குவரத்து காவல்துறை
    லைட்மேன்களுக்கு உதவ, சென்னையில், வரும் மார்ச் 19-ம் தேதி இசை கச்சேரி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏஆர் ரஹ்மான்

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025