NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்
    இந்தியா

    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்

    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்
    எழுதியவர் Nivetha P
    Mar 18, 2023, 06:13 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்
    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம்

    சென்னை தி.நகரில் ஜி.என்.செட்டி சாலையில் உள்ள பழம்பெரும் நடிகை காஞ்சனா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கிரவுண்ட் நிலம் தானமாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் திருப்பதி தேவஸ்தானம் ரூ.ஃ கோடி ரூபாய் செலவில் பத்மாவதி தாயார் கோயிலினை மிக பிரமாண்டமாக கட்டியுள்ளது. நாட்டிலேயே சென்னையில் தான் முதன் முறையாக பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் கும்பாபிஷேகத்திற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்னதாக திருப்பதியில் வடிக்கப்பட்ட பத்மாவதி தாயார் சிலை, துவார பாலகர்கள் வனமாலி, பலாக்கினி சிலைகள், மூலவிக்ரகங்கள் மற்றும் கலசங்கள் ஆகியவை திருப்பதியில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளது. கடந்த 12ம்தேதி இச்சிலைகள் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பூஜைகள், ஹோமங்கள் முதலியன செய்யப்பட்டு வந்துள்ளது.

    கோயில் கர்ப்பக்கிரகத்தில் பத்மாவதி தயார் சிலை கடந்த 16ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது

    மூலவர் சிலைகள் நெல்லில் வைத்து தண்ணீர் மற்றும் 2 ஆயிரம் லிட்டர் பால் ஆகியவை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கோயில் கர்ப்பக்கிரகத்தில் பத்மாவதி தயார் சிலை கடந்த 16ம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது. அனைத்து பணிகளும் நிறைவடைந்த நிலையில் நேற்று(மார்ச்.,17) அதிகாலை 4 மணி முதல் கும்பாபிஷேக பணிகள் தொடங்கியுள்ளது. 7.35 மணிக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. கோயிலின் விமான கோபுரத்திலும், ராஜகோபுரத்திலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டது, 'கோவிந்தா கோவிந்தா' என முழக்கமிட்ட படி கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்த நிலையில், அவர்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    சென்னை
    திருப்பதி

    சமீபத்திய

    உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் : இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உலக கோப்பை
    இந்தியாவில் 349 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் XBB1.16 கொரோனா வகை இந்தியா
    தேநீரைப் பற்றி நீங்கள் இவ்வளவு நாளும் நம்பி கொண்டிருந்த கட்டுக்கதைகள் என்னவென்று தெரியுமா? உணவு குறிப்புகள்
    முதல் வாரத்திலேயே கல்லாக்கட்டிய Oppo Find N2 Flip ஸ்மார்ட்போன்- Sold Out! ஸ்மார்ட்போன்

    சென்னை

    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு கொரோனா
    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது காவல்துறை

    திருப்பதி

    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள் ஆந்திரா
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் தமிழ்நாடு
    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் ஆந்திரா
    திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023