Page Loader
அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனமா? முக்கிய தலைவர்கள் வாழ்த்தின் பின்னணி
அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனம் என தகவல்

அண்ணாமலை பாஜகவின் தேசிய பொதுச்செயலாளராக நியமனமா? முக்கிய தலைவர்கள் வாழ்த்தின் பின்னணி

எழுதியவர் Sekar Chinnappan
Jun 28, 2025
09:06 am

செய்தி முன்னோட்டம்

பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் தமிழக தலைவர் அண்ணாமலை தேசிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்பதற்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளங்களில் பாஜகவின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அண்ணாமலை இந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு பாஜக தலைவர் பதவியில் இருந்து விலகினார். இதையடுத்து 2026 தேர்தல் தயாரிப்புகளுக்கு முன்னதாக மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் பாஜகவின் புதிய மாநில தலைவராக பொறுப்பேற்றார். அப்போதிருந்து, அண்ணாமலையின் ஆக்ரோஷமான அடிமட்ட பிரச்சாரங்கள் மற்றும் தென் மாநிலங்களில் கட்சி ஊழியர்களை உற்சாகப்படுத்தும் அவரது திறனை அங்கீகரிக்கும் விதமாக, தேசிய அளவில் அவருக்கு கட்சியில் குறிப்பிடத்தக்க பொறுப்பு வழங்கப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் பரவலாக எதிர்பார்த்தனர்.

பொதுச் செயலாளர் பதவி

தேசிய பொதுச்செயலாளர் பதவி

தொண்டர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, அண்ணாமலை தேசிய அளவில் முக்கிய பொறுப்பை விரைவில் ஏற்பார் என சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், மைசூர் நாடாளுமன்ற தொகுதி எம்பியும், மைசூர் மன்னர் குடும்ப வாரிசுமான யதுவீர் உடையாரும், முன்னாள் ராஜ்யசபா எம்பி தருண் விஜயும் அண்ணாமலை தேசிய பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர். இருப்பினும், கட்சியின் மத்திய தலைமை அண்ணாமலைக்கு புதிய பொறுப்பை உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வ அறிக்கையை இன்னும் வெளியிடவில்லை. விவாதங்கள் நடந்து வருவதாகவும், எந்தவொரு முடிவும் பாஜகவின் மத்திய அலுவலகம் மூலம் முறையாகத் தெரிவிக்கப்படும் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post