சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரத போராட்டத்தை முடிக்க மத்திய அரசு தந்த உறுதிமொழிகள் இவைதான்
செய்தி முன்னோட்டம்
நீட் தேர்வு தாள் கசிவு விவகாரம் மற்றும் தேர்வு துறை சீர்திருத்தங்கள் தொடர்பாக குரல் கொடுத்து வந்த பிரபல சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், மத்திய அரசிடமிருந்து எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றதைத் தொடர்ந்து தனது 26 நாள் சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை அதிகாரப்பூர்வமாக நிறைவு செய்துள்ளார். குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் மத்திய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் ஜிதேந்திர சிங் ஆகியோர் முன்னிலையில் அவர் பழச்சாறு அருந்தி உண்ணாநிலையை முடித்துக் கொண்டார்.
உறுதிமொழிகள்
மத்திய அரசின் எழுத்துப்பூர்வ உறுதிமொழிகள்
தேர்வு முறைகேடுகள் மற்றும் நீட் வினாத்தாள் கசிவு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மேலும், ஜூலை 20 அன்று 'நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி' சென்ற மாணவர்கள் மற்றும் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவித வழக்குப்பதிவும் செய்யப்படாது என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
நீட் வினாத்தாள் கசிவு காரணத்தால் தற்கொலை செய்துகொண்ட மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்குவது குறித்தும் அரசு சாதகமாக பரிசீலித்து வருகிறது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
END OF HUNGER... BEGINNING OF ACCOUNTABILITY...!
— Sonam Wangchuk (@Wangchuk66) July 24, 2026
Sonam Wangchuk ends his fast after 26 days upon getting assurance from the government and members of parliament of all political parties that the issue of accountability in the failing examination system will be discussed on the… pic.twitter.com/0C9YX5VlsL
26 நாள் போராட்டம்
26 நாள் போராட்டமும் பேச்சுவார்த்தையும்
இரண்டு நாட்களாக நடைபெற்ற கடுமையான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே இந்த எழுத்துப்பூர்வ வாக்குறுதி கிடைத்துள்ளதாக வாங்சுக் தெரிவித்துள்ளார்.
சுமார் 65 நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று, வன்முறையைத் தவிர்க்கும் பொருட்டு அவர் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளார்.
உண்ணாவிரதத்தின் போது 11 கிலோ வரை எடை குறைந்த சோனம் வாங்சுக், விரைவில் உடல்நலம் பெற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட போதிலும், CJP தனது போராட்டத்தைத் தொடரும் என அறிவித்துள்ளது.