NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்

    எழுதியவர் Nivetha P
    Feb 16, 2023
    07:43 pm
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்

    நாடு முழுவதும் மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் முதலியன சிறப்பாக நடக்கும். எல்லா சிவன் கோயில்களிலும் 'சிவாய நம' என்னும் மந்திரம் மட்டுமே ஒலிக்கும். ஆனால் நாம் அன்றையதினம் குமரிக்கு சென்றால் அங்குள்ள 12 சிவன் கோயில்களில் மட்டும் 'கோவிந்தா' 'கோபாலா' என்ற நாராயணின் நாமம் தான் ஒலிக்கும் என்பது நம்முள் பலருக்கு தெரியாது. இது ஏனென்றால் சிவனும் நாராயணனும் ஒன்று தான், வேறில்லை என்பதை உணர்த்ததான் என்றும் கூறப்படுகிறது. இதற்கு புராணகதைகளும் உள்ளதாக கூறுகிறார்கள். கன்னியாகுமரியில் உள்ள திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்காடு, திருநந்திக்கரை, கல்குளம், திருமலை, பொன்மனை, பன்றிப்பாகம், திருவிடைக்காடு, திருப்பன்றிக்கோடு, மேலாங்காடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களில் தான் இந்த சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    2/2

    2023ம் ஆண்டின் சிவாலய ஓட்டம் நாளை(பிப்.,17) துவக்கம்

    சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து ஓடியோடி இந்த தரிசனத்தை பக்தர்கள் மேற்கொள்கிறார்கள். இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்கள் காவி நிறத்தில் ஆடை அணிந்து, கையில் ஒரு பனை விசிறியும், மற்றொரு கையில் சின்ன பண முடிப்பும் வைத்து கொள்வார்களாம். இந்த பொருட்களை சுமந்து கொண்டு தான் அவர்கள் ஓடி ஓடி சிவனை தரிசனம் செய்கின்றனர். இப்படி ஓடி செல்லும் பக்தர்கள் கோயிலில் உள்ள குளத்தில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம் ஆகும். மேலும் பக்தர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சாமிக்கு விசிறிவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது. அதன் படி, இந்தாண்டுக்கான சிவாலய ஓட்டம் நாளை(பிப்.,17) துவங்கவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கன்னியாகுமாரி
    மாவட்ட செய்திகள்
    இந்தியா

    கன்னியாகுமாரி

    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை மாவட்ட செய்திகள்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    கன்னியாகுமரியில் சிவாலய ஓட்டத்தின் 2ம் நாளில் குவிந்த பக்தர்கள் மாவட்ட செய்திகள்

    மாவட்ட செய்திகள்

    அமைச்சர் தொகுதியில் கண்மாயை காணவில்லை: ஆட்சியரிடம் புகார் அளித்த மக்கள் தமிழ்நாடு
    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை திருநெல்வேலி
    மாயனூர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த 4 மாணவிகள் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி அறிவிப்பு தமிழ்நாடு
    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் விருதுநகர்

    இந்தியா

    அதிக வட்டி தரும் முக்கியமான தபால் சேமிப்பு திட்டங்கள்! இங்கே சேமிப்பு திட்டங்கள்
    கோவாவில் குடும்பத்துடன் படகு சவாரி செய்த இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கின் குடும்பத்தார் கோவா
    வைரல் வீடியோ: குஜராத்தில் வாக்கிங் போன சிங்கங்கள் குஜராத்
    காதலர் தினத்தன்று ஒரு அழகான காதல் கதைக் கூறிய IFS அதிகாரி வைரல் செய்தி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023