NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்
    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்

    குமரியில் மகா சிவராத்திரியன்று நடக்கும் சிவாலய ஓட்டம் - 12 சிவாலயங்கள்

    எழுதியவர் Nivetha P
    Feb 16, 2023
    07:43 pm

    செய்தி முன்னோட்டம்

    நாடு முழுவதும் மகாசிவராத்திரியன்று சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் முதலியன சிறப்பாக நடக்கும்.

    எல்லா சிவன் கோயில்களிலும் 'சிவாய நம' என்னும் மந்திரம் மட்டுமே ஒலிக்கும்.

    ஆனால் நாம் அன்றையதினம் குமரிக்கு சென்றால் அங்குள்ள 12 சிவன் கோயில்களில் மட்டும் 'கோவிந்தா' 'கோபாலா' என்ற நாராயணின் நாமம் தான் ஒலிக்கும் என்பது நம்முள் பலருக்கு தெரியாது.

    இது ஏனென்றால் சிவனும் நாராயணனும் ஒன்று தான், வேறில்லை என்பதை உணர்த்ததான் என்றும் கூறப்படுகிறது.

    இதற்கு புராணகதைகளும் உள்ளதாக கூறுகிறார்கள்.

    கன்னியாகுமரியில் உள்ள திக்குறிச்சி, திற்பரப்பு, திருவிதாங்காடு, திருநந்திக்கரை, கல்குளம், திருமலை, பொன்மனை, பன்றிப்பாகம், திருவிடைக்காடு, திருப்பன்றிக்கோடு, மேலாங்காடு, திருநட்டாலம் ஆகிய 12 சிவாலயங்களில் தான் இந்த சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    காவிநிற ஆடையணியும் பக்தர்கள்

    2023ம் ஆண்டின் சிவாலய ஓட்டம் நாளை(பிப்.,17) துவக்கம்

    சிவராத்திரிக்கு முந்தைய தினத்தில் இருந்து ஓடியோடி இந்த தரிசனத்தை பக்தர்கள் மேற்கொள்கிறார்கள்.

    இந்த சிவாலய ஓட்ட வழிபாட்டில் ஈடுபடும் பக்தர்கள் காவி நிறத்தில் ஆடை அணிந்து, கையில் ஒரு பனை விசிறியும், மற்றொரு கையில் சின்ன பண முடிப்பும் வைத்து கொள்வார்களாம்.

    இந்த பொருட்களை சுமந்து கொண்டு தான் அவர்கள் ஓடி ஓடி சிவனை தரிசனம் செய்கின்றனர்.

    இப்படி ஓடி செல்லும் பக்தர்கள் கோயிலில் உள்ள குளத்தில் நீராடிவிட்டு சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.

    மேலும் பக்தர்கள் தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சாமிக்கு விசிறிவிட வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

    அதன் படி, இந்தாண்டுக்கான சிவாலய ஓட்டம் நாளை(பிப்.,17) துவங்கவுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கன்னியாகுமரி
    மாவட்ட செய்திகள்
    இந்தியா

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்
    பெங்களூரு ஸ்டார்ட் அப் நிறுவனம் இந்திய சாலைகளுக்கான AI autopilot அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது பெங்களூர்

    கன்னியாகுமரி

    உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிப்பட்டார் நாஞ்சில் சம்பத் மு.க.ஸ்டாலின்
    விவேகானந்தர் பாறை-திருவள்ளுவர் சிலை இடையே கண்ணாடி பாலம் தமிழ்நாடு
    தமிழகத்தில் உரிய உரிமம் இல்லாமல் இறைச்சி கடை நடத்தக்கூடாது-உயர்நீதிமன்ற மதுரை கிளை தமிழ்நாடு

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு

    இந்தியா

    பிபிசி அலுவலகத்தில் வருமான வரித்துறை ஆய்வு: பொங்கி எழும் எதிர்க்கட்சியினர் மோடி
    விற்பனைக்கு வந்த OnePlus 11 5ஜி - வாங்க 5 முக்கிய காரணங்கள் என்ன? தொழில்நுட்பம்
    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா அமித்ஷா
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை மும்பை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025