NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு:  6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு
    இன்று மதியம் 12.20 மணியளவில் அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.

    சிக்கிமில் ஏற்பட்ட பெரும் பனிச்சரிவு: 6 சுற்றுலா பயணிகள் பலி, 150க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 04, 2023
    04:24 pm

    செய்தி முன்னோட்டம்

    சிக்கிமின் நாது லா மலைப்பாதையில் இன்று(ஏப் 4) ஏற்பட்ட பெரிய பனிச்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

    மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் பலர் பனிக்குள் சிக்கியுள்ளதாக அஞ்சப்படுகிறது.

    சீனாவின் எல்லையில் அமைந்துள்ள நாது லா கணவாய், ஒரு முக்கிய சுற்றுலா தலமாகும்.

    இன்று மதியம் 12.20 மணியளவில் அப்பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது.

    இதனால், 4 ஆண்கள், ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை உட்பட 6 பேர் அருகிலுள்ள இராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின் உயிரிழந்தனர்.

    மீட்புப் பணிகளை சிக்கிம் காவல்துறை, சிக்கிம் டிராவல் ஏஜென்ட்கள் சங்கம், சுற்றுலாத் துறை அதிகாரிகள், வாகன ஓட்டுநர்கள் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்தியா

    பனியில் சிக்கி தவிக்கும் 150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள்

    காங்டாக்கை நாதுலாவுடன் இணைக்கும் ஜவஹர்லால் நேரு சாலையின் 15வது மைலில் ஏற்பட்ட பனிச்சரிவால் 6 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்தனர் என்றும் 80க்கும் மேற்பட்டோர் பனியில் சிக்கியிருக்கலாம் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    150க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இன்னும் 15வது மைலுக்கு அப்பால் சிக்கித் தவிக்கின்றனர் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

    பனியின் கீழ் சிக்கிய 30 சுற்றுலாப் பயணிகள் மீட்கப்பட்டு காங்டாக்கில் உள்ள எஸ்டிஎன்எம் மருத்துவமனை மற்றும் சென்ட்ரல் ரெபரல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    செக்போஸ்ட் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சோனம் டென்சிங் பூட்டியா, "பாஸ்கள் 13வது மைலுக்கு மட்டுமே வழங்கப்படுகின்றன. ஆனால் சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி 15வது மைலுக்கு சென்றிருக்கிறார்கள். சம்பவம் 15வது மைலில் தான் நடந்ததுள்ளது." என்று கூறியுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சிக்கிம்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    இந்தியா

    நெதர்லாந்து சுற்றுலாப் பயணியை துன்புறுத்தி கத்தியால் குத்திய ரிசார்ட் ஊழியர் கோவா
    ஓடும் காரில் பெண்ணை பலாத்காரம் செய்த கும்பல்: பெங்களூரில் பரபரப்பு பெங்களூர்
    இந்தியாவிலேயே 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற முதல் மாநிலம் தமிழகம் தமிழ்நாடு
    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் மோடி

    சிக்கிம்

    சிக்கிமில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3ஆக பதிவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025