NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம் 

    "இது இந்துக்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பு": ராகுல் காந்தியின் கருத்துக்கு பிரதமர் மோடி மீண்டும் கண்டனம் 

    எழுதியவர் Sindhuja SM
    Mar 19, 2024
    05:48 pm

    செய்தி முன்னோட்டம்

    காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி தலைவர்கள் இந்து தர்மத்தை "வேண்டுமென்றே அவமதிப்பதாக" இன்று குற்றம் சாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, மதத்திற்கு எதிரான அவர்களின் ஒவ்வொரு கருத்தும் "நன்கு சிந்திக்கப்பட்டவை" என்று விமர்சித்துள்ளார்.

    சேலத்தில் இன்று நடைபெற்ற பேரணியில் பேசிய பிரதமர் மோடி, வரும் மக்களவை தேர்தலில் தமிழக மக்கள் ஒவ்வொரு வாக்கையும் பாஜக - தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அளிக்க முடிவு செய்துள்ளனர் என்று கூறினார்.

    "இண்டியா கூட்டணியினர் இந்து மதத்தை மீண்டும் மீண்டும், வேண்டுமென்றே அவமதிக்கிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இந்து மதத்திற்கு எதிராக அவர்கள் வெளியிடும் ஒவ்வொரு அறிக்கையும் மிக நன்றாக சிந்திக்கப்பட்டவை!" என்று பிரதமர் மோடி இன்று கூறினார்.

    இந்தியா 

    'வேறு எந்த மதத்தையும் எதிர்க்கட்சிகள் அவமதிப்பதில்லை": பிரதமர் மோடி 

    மேலும் பேசிய அவர், மற்ற மதங்களை இண்டியா கூட்டணியினர் விமர்சிப்பதில்லை என்றும் தெரிவித்தார்.

    "திமுக மற்றும் காங்கிரஸின் இண்டியா கூட்டணி வேறு எந்த மதத்தையும் அவமதிப்பதில்லை. எந்த ஒரு மதத்திற்கும் எதிராக ஒரு வார்த்தை கூட பேசுவதில்லை. ஆனால், இந்து மதம் என்று வந்தால், ​​அதை அவமானப்படுத்துவற்கு கிடைக்கும் ஒரு வாய்ப்பையும் அவர்கள் விடுவதில்லை." என்று மேலும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

    ராகுல் காந்தி 'சக்தி' கருத்துக்கு பிரதமர் மோடி இன்று மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    "தேர்தல் பிரச்சாரத்தின் முதல் பேரணியின் போதே அவர்கள் 'சக்தி'யை அழிப்பது குறித்து பேசுகிறார்கள். 'சக்தி'க்கு எதிராக போராடுவது பற்றி அறிக்கைகளை வெளியிடுகிறார்கள்." என்று பிரதமர் இன்று கூறியுள்ளார்.

    இந்தியா 

    ராகுல் காந்தி 'சக்தி' குறித்து பேசியது என்ன?

    மும்பையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்(EVM) தான் இந்த நாட்டின் சக்தி என்றும், அவை இல்லாமல் பிரதமர் மோடியால் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்றும் கூறினார்.

    "ஒரு சக்திக்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். அது என்ன சக்தி தெரியுமா? ராஜாவின்(பிரதமர் மோடி) ஆன்மாவே EVM என்ற சக்தியில் தான் உள்ளது." என்று பிரதமரை ராகுல் காந்தி அப்போது விமர்சித்தார்.

    EVM மட்டுமல்லாமல், அமலாக்கத்துறை, CBI, மற்றும் வருமான வரித்துறை உள்ளிட்ட நாட்டின் ஒவ்வொரு நிறுவனமும் பிரதமரின் கைக்குள் இருப்பதாக நேற்று ராகுல் காந்தி பிரதமர் மோடியை விமர்சித்திருந்தார்.

    இந்நிலையில், ராகுல் காந்தி இந்து மதத்தின் 'சக்தி'யை எதிர்த்து பேசுவதாக பிரதமர் மோடி ராகுல் காந்திக்குகண்டனம் தெரிவித்து வருகிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    பிரதமர் மோடி
    ராகுல் காந்தி
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    மத்திய அரசின் தலையீட்டை தொடர்ந்து பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட ஆப்களை மீண்டும் சேர்க்க கூகுள் முடிவு  கூகுள்
    'கைப்பாவைகள் அல்ல நாங்கள்': இந்திய ஊடகங்களுக்கு தைவான் பேட்டியளிக்க கூடாது என்று கூறிய சீனாவுக்கு தைவான் பதில்  தைவான்
    பாக் கப்பலில் இருந்து அணுசக்தி சரக்குகளை கைப்பற்றிய இந்தியா: பாகிஸ்தான் கண்டனம்  பாகிஸ்தான்
    கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஒரு மாலின் இரும்பு கூரை சரிந்து விழுந்ததால் 2 பேர் பலி நொய்டா

    பிரதமர் மோடி

    அபுதாபியின் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி அபுதாபி
    "அடுத்த 100 நாட்களுக்கு நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்": பிரதமர் மோடி  இந்தியா
    குலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அடிக்கல்: 28-ஆம் தேதி தூத்துக்குடி வருகிறார் பிரதமர் மோடி பிரதமர்
    பிரபல வானொலி தொகுப்பாளர் அமீன் சயானி 91 வயதில் காலமானார் இந்தியா

    ராகுல் காந்தி

     ஜி20 மாநாடு - டெல்லி குடிசை பகுதிகளை திரையிட்டு மறைத்ததற்கு ராகுல் காந்தி கண்டனம்  இந்தியா
    ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக மாறிய ராகுல் காந்தி டெல்லி
    டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இந்தியா
    சட்டமானது மகளிர் இடஒதுக்கீடு மசோதா; ஒப்புதல் அளித்த ஜனாதிபதி திரெளபதி முர்மு நாடாளுமன்றம்

    எதிர்க்கட்சிகள்

    மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு  திரௌபதி முர்மு
    குடியரசு தலைவரை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர்கள்: என்ன விவாதிக்கப்பட்டது? நாடாளுமன்றம்
    INDIA எதிர்க்கட்சி கூட்டணியின் மூன்றாவது கூட்டத்திற்கான தேதி அறிவிப்பு  காங்கிரஸ்
    'INDIAவே இந்தியாவை விட்டு வெளியேறு': எதிர்க்கட்சிகளை கடுமையாக சாடிய பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025