NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல்
    சபரிமலையில் அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்(படம்: தினத்தந்தி)

    சபரிமலையில் முதியவர்கள், சிறுவர்களுக்கு தனிவரிசை அமல்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 19, 2022
    03:05 pm

    செய்தி முன்னோட்டம்

    சபரிமலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

    இதனால், கூட்டம் அலை மோதி கொண்டிருக்கிறது. கடந்த 32 நாட்களில் மட்டும் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்திருக்கின்றனர்.

    மண்டல பூஜை முடிவதற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் சூழ்நிலையில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து கொண்டே இருக்கிறது.

    இந்த அளவு சரிமலைக்கு கூட்டம் வருவது இதுவே முதல் முறை. இதற்காக சமீபத்தில் பக்தர்கள் எண்ணிக்கைக் குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்காமல் செல்வதற்கு முதியவர்களுக்கும் சிறுவர்களுக்கும் தனி வரிசை அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

    கூட்ட நெரிசல்

    கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்கள்!

    பக்தர்கள் எந்த சிரமும் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய திருவாங்கூர் தேவஸ்தானம் பல நடவடிக்கைளை சமீபத்தில் எடுத்து வருகிறது.

    அதிக கூட்டத்தால் பக்தர்கள் தத்தளித்ததால் முன்பதிவு ஆட்கள் குறைப்பு அமல்படுத்தப்பட்டது.

    அதன்படி, ஒரு நாளுக்கு 90 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்.

    அண்மையில், கூட்டம் அதிகமாக இருப்பதால் சிறுவர்களும் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் முதியவர்களும் வரிசையில் நிற்கமுடியாமல் சிரமப்படுவதாக ஒரு புகார் எழுந்தது.

    இதனையடுத்து, தேவஸ்தான அமைச்சர் கெ.ராதாகிருஷ்ணன் தலைமையில் ஒரு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு பின், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு தனிவரிசை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

    இந்நிலையில், இன்றிலிருந்து சபரிமலைக்கு வரும் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ஒரு தனி வரிசை அமல்படுத்தப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தமிழ்நாடு

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    இந்தியா

    புர்காவுடன் நடனமாடிய 5 இஸ்லாமிய மாணவர்கள்: சஸ்பெண்ட் செய்த நிர்வாகம்! இந்தியா
    ராணுவ அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கு தற்காலிக தடை? உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா
    4 ஆண்டு ஹானர்ஸ் பட்டம் அறிமுகம்: இளங்கலையில் அதிரடி மாற்றங்கள்! இந்தியா
    உலக அழகி போட்டியில் சாதித்த தமிழக பெண்! தமிழ்நாடு

    தமிழ்நாடு

    தமிழகத்தை உலுக்கும் மாண்டஸ் புயல்! வெதர்மேன்
    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? சென்னை
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் சென்னை
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025