NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு 
    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு

    டிஸ்சார்ஜ் ஆனார் செந்தில் பாலாஜி - மீண்டும் புழல் சிறையில் அடைப்பு 

    எழுதியவர் Nivetha P
    Oct 09, 2023
    06:03 pm

    செய்தி முன்னோட்டம்

    சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த ஜூலை 17ம் தேதி காவேரி மருத்துவமனையில் இருந்து புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    அவரிடம் விசாரணைகளை மேற்கொண்ட அமலாக்கத்துறை, கடந்த ஆகஸ்ட் 12ம்தேதி சுமார் 3,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

    இதற்கிடையில், சென்னை முதன்மை நீதிமன்றம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை அக்டோபர் 13ஆம் தேதி வரை நீடித்தது.

    அதன்படி அவருக்கு, 7வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.

    இந்நிலையில், புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு மீண்டும் நெஞ்சு வலி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு நேற்று(அக்.,9) மாலை நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

    அனுமதி 

    படுக்கையில் இருந்து கீழே விழுந்த செந்தில் பாலாஜி 

    இதனால் அவருக்கு உடனடியாக சிறையிலுள்ள மருத்துவமனை வளாகத்தில் வைத்து இசிஜி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    அதன் முடிவில் அவருக்கு வழக்கத்திற்கு மாறாக இதயத்துடிப்பு அதிகமாக இருந்தது தெரியவந்துள்ளது.

    இதன் காரணமாக சிறை வளாகத்திலுள்ள மருத்துவமனை மருத்துவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு பரிந்துரைத்துள்ளனர்.

    இதனிடையே சிறையிலிருந்த செந்தில் பாலாஜி இன்று(அக்.,9)அதிகாலை 4.30 மணியளவில் படுக்கையில் இருந்து கீழே விழுந்துள்ளார்.

    இதுகுறித்து அறிந்த சிறைத்துறை அதிகாரிகள் உடனே மருத்துவர்களை அணுகி அவரின் உடல்நிலையை கண்காணித்துள்ளனர்.

    அதன் பின் அவரை பலத்த பாதுகாப்புடன் காலை 6.45மணியளவில் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இன்று பிற்பகல் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செந்தில் பாலாஜி
    கைது
    மருத்துவமனை
    சிறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    செந்தில் பாலாஜி

    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செயற்கை சுவாசம் - காவேரி மருத்துவமனை  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேலும் 20 நாட்களுக்கு சிகிச்சை - காவேரி மருத்துவமனை  தமிழ்நாடு
    செந்தில் பாலாஜி வழக்கு: ஜூன் 12 வரை காவல் நீடித்து உயர் நீதிமன்றம் உத்தரவு  சென்னை உயர் நீதிமன்றம்
    செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி: நள்ளிரவில் அடுத்ததடுத்து நடைபெற்ற திருப்பங்கள்  ஆளுநர் மாளிகை

    கைது

    நர்ஸ் வேடமிட்டு விஷ ஊசிப்போட்டு மனைவியை கொலை செய்ய முயற்சித்த முன்னாள் காதலி - க்ரைம் ஸ்டோரி  கேரளா
    செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் - உச்சநீதிமன்றம் அதிரடி உச்ச நீதிமன்றம்
    செந்தில் பாலாஜியை ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் வைத்து அமலாக்கத்துறை விசாரிக்க அனுமதி செந்தில் பாலாஜி
    மாணவிகளை மசாஜ் செய்ய வற்புறுத்தி அத்துமீறிய தலைமை ஆசிரியர் போக்சோவில் கைது-க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி

    மருத்துவமனை

    ஒரே நாளில் 6 முறை இதயத்துடிப்பு நின்றுபோன மாணவர்: காப்பாற்றிய மருத்துவர்கள் இங்கிலாந்து

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025