NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்
    ஜோடோ யாத்திரை-ராகுல் காந்தியின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்

    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்

    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023
    06:16 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நாட்டின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்று அறிவித்து அதனை மேற்கொண்டு வருகிறார்.

    தற்போது காஷ்மீரில் நடந்து வரும் இந்த யாத்திரை குடியரசு தின விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று (ஜன.,27) பனிஹல் என்ற இடத்தில் இருந்து மீண்டும் துவங்கியுள்ளது.

    இதில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தியவாறு ராகுல் காந்தியோடு நடைபயனம் மேற்கொண்டனர்.

    காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் ராகுல் காந்தி போல் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்துகொண்டு இதில் பங்கேற்றார்.

    இவர்கள் காசிக்குண்ட் என்னும் இடத்தை அடைந்த பொழுது ராகுல்காந்தியின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கில் இருந்து காஷ்மீர் காவல்துறையினரை காணவில்லை.

    பாதுகாப்பு கோரி

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்

    இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், தொடர்ந்து நடக்க முயன்ற ராகுல் காந்தியை அவரது பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை.

    இதனையடுத்து அவர் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு, இரவு தங்க முடிவெடுத்த அனந்தநாக் மாவட்டம், கானாபாலுக்கு சென்றடைந்தார்.

    நேற்று 11 கி.மீ., நடக்க திட்டமிட்டிருந்த நிலையில் வெறும் அரை கி.மீ., தூரத்திலேயே பாதுகாப்பு குளறுபடி காரணமாக யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து இன்று காலை அவந்திபோரா என்னும் பகுதியில் இருந்து மீண்டும் யாத்திரை துவங்கப்பட்டது.

    இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் நடைபயண யாத்திரைக்கான பாதுகாப்பு விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜுனே கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமித்ஷா

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    இந்தியா

    மீண்டும் எகிறிய தங்கம் விலை - இன்றைய நாளின் விலை விபரங்கள்; தங்கம் வெள்ளி விலை
    நள்ளிரவில் பெண் ஐஏஎஸ் அதிகாரி வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த தாசில்தார் சஸ்பெண்ட் இந்தியா
    டியோ ஸ்கூட்டருக்கு போட்டியாக அறிமுகமாகும் ஹீரோவின் புதிய ஸ்கூட்டர்! ஆட்டோமொபைல் நிறுவனங்கள்
    ஹூண்டாய் ஆரா ஃபேஸ்லிஃப்ட் 2023 - விலை இவ்வளவு கம்மியா? ஆட்டோமொபைல் நிறுவனங்கள்

    அமித்ஷா

    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025