NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்
    இந்தியா

    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்

    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்
    எழுதியவர் Nivetha P
    Jan 28, 2023, 06:16 pm 1 நிமிட வாசிப்பு
    ஜோடோ யாத்திரை-பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்
    ஜோடோ யாத்திரை-ராகுல் காந்தியின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறு காங்கிரஸ் கடிதம்

    இந்திய நாட்டின் ஒற்றுமைக்கான நடைப்பயணத்தை அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை என்று அறிவித்து அதனை மேற்கொண்டு வருகிறார். தற்போது காஷ்மீரில் நடந்து வரும் இந்த யாத்திரை குடியரசு தின விடுமுறை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட நிலையில், நேற்று (ஜன.,27) பனிஹல் என்ற இடத்தில் இருந்து மீண்டும் துவங்கியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் தேசிய கொடி ஏந்தியவாறு ராகுல் காந்தியோடு நடைபயனம் மேற்கொண்டனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் ராகுல் காந்தி போல் வெள்ளை நிற டி-ஷர்ட் அணிந்துகொண்டு இதில் பங்கேற்றார். இவர்கள் காசிக்குண்ட் என்னும் இடத்தை அடைந்த பொழுது ராகுல்காந்தியின் வெளிப்புற பாதுகாப்பு அடுக்கில் இருந்து காஷ்மீர் காவல்துறையினரை காணவில்லை.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு காங்கிரஸ் தலைவர் கடிதம்

    இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், தொடர்ந்து நடக்க முயன்ற ராகுல் காந்தியை அவரது பாதுகாப்பு படையினர் அனுமதிக்கவில்லை. இதனையடுத்து அவர் அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டு, இரவு தங்க முடிவெடுத்த அனந்தநாக் மாவட்டம், கானாபாலுக்கு சென்றடைந்தார். நேற்று 11 கி.மீ., நடக்க திட்டமிட்டிருந்த நிலையில் வெறும் அரை கி.மீ., தூரத்திலேயே பாதுகாப்பு குளறுபடி காரணமாக யாத்திரை பாதியில் நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று காலை அவந்திபோரா என்னும் பகுதியில் இருந்து மீண்டும் யாத்திரை துவங்கப்பட்டது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் நடைபயண யாத்திரைக்கான பாதுகாப்பு விஷயத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலையிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லகார்ஜுனே கார்கே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    அமித்ஷா

    சமீபத்திய

    மதுரை யாதவா கல்லூரியில் கல்வி உதவித்தொகை குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு மதுரை
    2022-23 வரி சேமிப்பு முதலீடு திட்டம் - NPS எப்படி உதவும் தெரியுமா? ஓய்வூதியம்
    பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி டெல்லி
    தூத்துக்குடியில் ரூ.200க்கு பதிலாக வெறும் ரூ.20 அளித்த ஏடிஎம் - வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி தூத்துக்குடி

    இந்தியா

    ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    Splendor-க்கு போட்டியாக களமிறங்கிய ஹோண்டாவின் புதிய பைக் - என்ன ஸ்பெஷல்? ஹோண்டா
    ஜார்கண்ட் மாநிலத்தில் பி.எஸ்.என்.எல். டவரை திருட முயன்ற 6 நபர்கள் கைது மாநிலங்கள்
    கூகுளின் சிறந்த விருதை பெற்றும் ஊழியர் பணிநீக்கம்! கண்ணீர் விட்ட ஊழியர் கூகுள்

    அமித்ஷா

    அதானி குழும பிரச்சனைகளைப் பற்றி பேசிய அமித்ஷா இந்தியா
    அயோத்தி ராமர் கோவில் திறக்கும் தேதியை அறிவித்தார் அமித்ஷா! மோடி
    பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம்: என்ன நடந்தது? தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023