NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்
    இந்தியா

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்
    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2023, 06:07 pm 1 நிமிட வாசிப்பு
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்
    ராகுல் காந்தி மற்றும் உமர் அப்துல்லா காஷ்மீர் போலீஸ் குறித்த குற்றசாட்டுகளை முன்வைத்ததை அடுத்து காவல்துறை ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

    ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, அதை முற்றிலுமாக மறுத்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ட்விட்டரில், "1 கிமீ யாத்திரை நடத்திய பிறகு நடைப்பயணத்தை நிறுத்துவது குறித்து, ஆர்கனைஸர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஆலோசிக்கவில்லை. பாதுகாப்புக் குறைபாடு எதுவும் கிடையாது. நாங்கள் அசைக்கமுடியாத பாதுகாப்பை வழங்கி இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளது. நேற்று(ஜன 27) ராகுல் காந்தி மற்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீர் போலீஸ் குறித்த குற்றசாட்டுகளை முன்வைத்ததை அடுத்து காவல்துறை ட்விட்டரில் பதிலளித்துள்ளது. ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக பாதுகாப்பு குறைபாடுகள் குற்றம் சாட்டப்பட்டன.

    ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் ட்விட்டர் பதிவில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது

    யாத்திரை செல்லும் பாதையில் ஆர்கனைஸர்களால் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சோதனை செய்யப்பட்ட கூட்டத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பனிஹாலில் இருந்து பெரும் கூட்டம் நடைபயணத்தில் சேருவதைப் பற்றி ஆர்கனைஸர்கள் மற்றும் மேலாளர்கள் தெரியப்படுத்தவில்லை. 15 CAPFகள் மற்றும் 10 ஜேகேபியின் வீரர்கள் உட்பட முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 1 கிமீ யாத்திரை நடத்திய பிறகு நடைப்பயணத்தை நிறுத்துவது குறித்து ஆர்கனைஸர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஆலோசிக்கவில்லை. மீதமுள்ள யாத்திரை அமைதியாக தொடர்ந்தது. பாதுகாப்புக் குறைபாடு எதுவும் கிடையாது. நாங்கள் அசைக்கமுடியாத பாதுகாப்பை வழங்கி இருக்கிறோம். என்று தெரிவித்திருக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    காவல்துறை
    ஜம்மு காஷ்மீர்
    காங்கிரஸ்
    ராகுல் காந்தி

    சமீபத்திய

    ரோஹிணி தியேட்டர் விவகாரம்: இன்றும் தொடர்கிறதா தீண்டாமை கொடுமை?தியேட்டர் உரிமையாளர்கள் அளித்த விளக்கம் திரைப்பட வெளியீடு
    ITR தாக்கல்: நீங்கள் தவிர்க்க வேண்டிய தவறுகள் என்னென்ன? தொழில்நுட்பம்
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தமிழ்நாடு
    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்

    காவல்துறை

    திருநெல்வேலியில் விசாரணைக்கு அழைத்துவந்தவர்களின் பற்களை பிடுங்கிய போலீஸ் அதிகாரி பணியிடை நீக்கம் திருநெல்வேலி
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது சென்னை
    உத்திரபிரதேசத்தில் கள்ள காதலனுக்காக தன் இரு குழந்தைகளை கொன்ற தாய் கைது உத்தரப்பிரதேசம்
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை கோவை

    ஜம்மு காஷ்மீர்

    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் இந்தியா
    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு இந்தியா
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி வைரல் செய்தி
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது பிரதமர் மோடி

    காங்கிரஸ்

    காங்கிரஸ் எம்எல்ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலம் தேறி வருவதாக அறிக்கை ஈரோடு
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு இந்தியா
    எம்பி பங்களாவை காலி செய்ய இருக்கும் ராகுல் காந்தி: வெளியேற்ற நோட்டீசுக்கு பதில் ராகுல் காந்தி

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    ராகுல் காந்தியின் வழக்கை அமெரிக்கா கவனித்து வருகிறது: அமெரிக்க அதிகாரி இந்தியா
    ராகுல் காந்தியின் தகுதி நீக்க எதிரொலி - அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் டெல்லி
    ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸின் 2வது நாள் போராட்டம் இந்தியா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023