NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்
    ராகுல் காந்தி மற்றும் உமர் அப்துல்லா காஷ்மீர் போலீஸ் குறித்த குற்றசாட்டுகளை முன்வைத்ததை அடுத்து காவல்துறை ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார்

    எழுதியவர் Sindhuja SM
    Jan 28, 2023
    06:07 pm

    செய்தி முன்னோட்டம்

    ராகுல் காந்தி தலைமையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற்பட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்டியதை அடுத்து, ஜம்மு-காஷ்மீர் காவல்துறை, அதை முற்றிலுமாக மறுத்துள்ளது.

    ஜம்மு-காஷ்மீர் காவல்துறை ட்விட்டரில், "1 கிமீ யாத்திரை நடத்திய பிறகு நடைப்பயணத்தை நிறுத்துவது குறித்து, ஆர்கனைஸர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஆலோசிக்கவில்லை. பாதுகாப்புக் குறைபாடு எதுவும் கிடையாது. நாங்கள் அசைக்கமுடியாத பாதுகாப்பை வழங்கி இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளது.

    நேற்று(ஜன 27) ராகுல் காந்தி மற்றும் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, காஷ்மீர் போலீஸ் குறித்த குற்றசாட்டுகளை முன்வைத்ததை அடுத்து காவல்துறை ட்விட்டரில் பதிலளித்துள்ளது.

    ராகுல் காந்தியின் பாதயாத்திரை நேற்று பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக பாதுகாப்பு குறைபாடுகள் குற்றம் சாட்டப்பட்டன.

    ஜம்மு-காஷ்மீர்

    ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் ட்விட்டர் பதிவில் பின்வருமாறு கூறப்பட்டிருக்கிறது

    யாத்திரை செல்லும் பாதையில் ஆர்கனைஸர்களால் அடையாளம் காணப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மற்றும் சோதனை செய்யப்பட்ட கூட்டத்தினர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். பனிஹாலில் இருந்து பெரும் கூட்டம் நடைபயணத்தில் சேருவதைப் பற்றி ஆர்கனைஸர்கள் மற்றும் மேலாளர்கள் தெரியப்படுத்தவில்லை.

    15 CAPFகள் மற்றும் 10 ஜேகேபியின் வீரர்கள் உட்பட முழு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    1 கிமீ யாத்திரை நடத்திய பிறகு நடைப்பயணத்தை நிறுத்துவது குறித்து ஆர்கனைஸர்கள் ஜம்மு காஷ்மீர் காவல்துறையிடம் ஆலோசிக்கவில்லை. மீதமுள்ள யாத்திரை அமைதியாக தொடர்ந்தது. பாதுகாப்புக் குறைபாடு எதுவும் கிடையாது. நாங்கள் அசைக்கமுடியாத பாதுகாப்பை வழங்கி இருக்கிறோம். என்று தெரிவித்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காவல்துறை

    சமீபத்திய

    நடிகர் விஷால் திருமணம் செய்யவிருக்கும் நடிகை இவர்தான்! இணையத்தில் வைரலாகும் தகவல் விஷால்
    அணுசக்தி துறையில் தனியார் நிறுவனங்களின் நுழைவை எளிதாக்க கொள்கைகளை மறுசீரமைக்க மத்திய அரசு ஆலோசனை  அணுசக்தி
    இந்தியா விநியோகத்தைக் குறைத்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் அணை கட்டுமானத்தை சீனா துரிதப்படுத்துகிறது பாகிஸ்தான்
    கவாசாகி எலிமினேட்டருக்கு போட்டியாக ரெபெல் 500 க்ரூஸரை இந்தியாவில் அறிமுகம் செய்தது ஹோண்டா ஹோண்டா

    காவல்துறை

    தடைசெய்யப்பட்ட அமைப்பிற்கு நிதியுதவி: கேரளாவை புரட்டிப்போடும் NIA இந்தியா
    டெல்லியில் காரில் இழுத்து செல்லப்பட்டு பலியான இளம்பெண் தனியாக பயணிக்கவில்லை - காவல்துறை தகவல் இந்தியா
    விஸ்வரூபம் எடுக்கும் டெல்லி அஞ்சலி சிங் விபத்து வழக்கு - ரோந்து பணியில் வாகனங்கள் இந்தியா
    விளைவுகள் குறித்து அறியாமல் மற்றொரு பள்ளி மாணவன் விடுத்த வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் தீவிர விசாரணை இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025