NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் 
    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

    தமிழகத்தில் முன்கூட்டியே பள்ளிகளை திறந்தால் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் 

    எழுதியவர் Nivetha P
    Jun 01, 2023
    02:32 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலத்தில் இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறையானது விடப்பட்டுள்ளது.

    முன்னதாக விடுமுறை முடிந்து 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பள்ளிகள் ஜூன் 1ம்தேதி திறக்கப்படும்.

    அதே போல், 1 முதல் 5ம்வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    ஆனால் இந்தாண்டு வெயிலின் தாக்கம் வரலாறு காணாத அளவு வாட்டி வதைத்து வருகிறது.

    மதியவேளையில் மக்கள் வெளியே வருவதை முடிந்தளவு தவிர்க்கவும் என்று அரசு சார்பில் அண்மையில் அறிவுறுத்தல்கள் வெளியானது.

    இதனையடுத்து, சுட்டெரிக்கும் வெயில் காரணமாக மாணவர்கள் நலன்கருதி, பல்வேறு தரப்பினரின் கோரிக்கைகளை ஏற்று தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஜூன் 7ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    பள்ளி

    உத்தரவினை மீறி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை 

    இந்நிலையில் அரசு உத்தரவினை மீறி, சென்னை ராமாபுரம் தனியார் பள்ளி இன்று(ஜூன்.,1) திறக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியானது.

    இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளதாவது, கோடை வெயில் அதிகமாக இருப்பதன் காரணமாகவே பள்ளிகளை திறக்கும் தேதியானது ஜூன் 7ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளோம்.

    இதற்கு முன்கூட்டி பள்ளிகள் திறக்கப்பட கூடாது.

    இதனை மீறி தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டால் குறிப்பிட்ட அந்த பள்ளிகள் மீது அதிகாரிகள் விசாரணை நடத்தி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    மேலும் அவர், சிபிஎஸ்சி பள்ளிகள் வேண்டுமானால் 10ம் வகுப்புக்கு மேல் திறக்கலாம்.

    ஆனால் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் திறக்கப்பட்டால் கடும் நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தமிழ்நாடு

    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை புதுச்சேரி
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்  சென்னை உயர் நீதிமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025