NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்
    மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து தினசரி கண்காணிப்பதற்காக ஆப் உருவாக்கப்படவுள்ளது

    பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும் - அமைச்சர் அன்பில் மகேஷ்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 22, 2024
    05:09 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் இரண்டாவது மாநில கூட்டம் நடைபெற்றது.

    இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பிரச்னைகளையும், கருத்துகளையும் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

    பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ்,"எங்கெல்லாம் கட்டிடங்கள் இடிக்கப்பட வேண்டுமோ, பொதுப்பணித் துறை செயலர் மூலமாக ஆலோசனை மேற்கொண்டு இருக்கின்றோம். பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக ஒரு ஆப் உருவாக்கச் சொல்லியிருக்கிறோம். மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து தினசரி கண்காணிப்பதற்காக ஆப் உருவாக்கப்படவுள்ளது" என தெரிவித்தார்.

    அறிவுறுத்தல்

    "தவறுகளை மூடி மறைக்காதீர்கள்":பள்ளி நிர்வாகத்துக்கு அறிவுறுத்தல்

    பள்ளி மாணவி பாலியல் விவகாரம் குறித்த கேள்விக்கு,"கிருஷ்ணகிரி விவகாரத்தில் ஏற்கனவே துறை சார்ந்து அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த அறிக்கை காவல்துறையிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் நடக்காத வண்ணம் எங்களுடைய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளோம்" என்றார்.

    "பள்ளி நிர்வாகத்தினர் நடைபெறக்கூடிய தவறுகளை மூடி மறைக்காதீர்கள். உடனடியாக எடுக்கும் நடவடிக்கைகள் மட்டுமே பெற்றவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்கும். தனியார், அரசு என அனைத்து பள்ளிகளிலும் எந்த தவறு தெரியவந்தாலும் உடனடியாக எங்கள் கவனத்திற்கோ, எஸ்.எம்.சி அல்லது பி.டி.ஏ அமைப்புக்கு தகவல் கொண்டு சென்று தவறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளோம். இதனால் பள்ளி பெயர் கெட்டுப் போகாது." என்றார்.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #JustNow | "மாணவிகள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பெரிய தண்டனை வழங்க வேண்டும்..”

    -பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்#SunNews | #SchoolStudents | #POCSO | #AnbilMahesh pic.twitter.com/rVHJq43cKs

    — Sun News (@sunnewstamil) August 22, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அன்பில் மகேஷ்
    பாலியல் தொல்லை
    பாலியல் வன்கொடுமை
    சென்னை

    சமீபத்திய

    சென்னையில் போக்குவரத்து அபராதங்களுக்கு புதிய கட்டுப்பாடு: 5 விதிமீறல்களுக்கு மட்டும் அபராதம் சென்னை
    பஹல்காம் தாக்குதலுக்கு முன்பு பாகிஸ்தான் அதிகாரியை தொடர்பு கொண்டதாக ஒப்புக்கொண்ட 'ஸ்பை யூடியூபர்' ஜோதி மல்ஹோத்ரா  பஹல்காம்
    வெயிலில் அதிகம் செல்வதால் ஏற்படும் sunburn-ஐ இயற்கையாகவே சரி செய்ய உதவும் கற்றாழை! சரும பராமரிப்பு
    இப்போது நீங்கள் கூகிள் சர்ச்சிலேயே ஆடைகளை ட்ரை செய்து பார்க்கலாம் கூகிள் தேடல்

    அன்பில் மகேஷ்

    அரசு பொது தேர்வு அட்டவணை ஓரிரு நாளில் வெளியாகும்:  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பள்ளிக்கல்வித்துறை
    10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொது தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ் தேர்வு
    பள்ளி பாடப் புத்தகங்கள் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் பள்ளிக்கல்வித்துறை

    பாலியல் தொல்லை

    "28.9 % சதவிகித குழந்தைகள் பாலியல் தொல்லையை அனுபவிக்கின்றனர்": யுவன் கொந்தளிப்பு  யுவன் ஷங்கர் ராஜா
    பாலியல் தொல்லைகளை தடுக்க தனியார் பள்ளி பேருந்துகளில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு  பள்ளிகள்
    பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தேடப்பட்டு வந்த திண்டுக்கல் பாஜக செயலாளர் கைது பாஜக
    கல்லூரி பெண்களை தவறாக வழிநடத்திய வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனத்தீர்ப்பு ஸ்ரீவில்லிபுத்தூர்

    பாலியல் வன்கொடுமை

    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு
    பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக நடிகை ஈஷா குப்தா மனம் திறந்துள்ளார்  பொழுதுபோக்கு
     'பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை' - முதல்வர் எச்சரிக்கை  தமிழ்நாடு
    வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீட்டு மனுவினை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்  தமிழ்நாடு

    சென்னை

    சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் உயர்வு  தங்கம் வெள்ளி விலை
    ஆபரண தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்தது  தங்கம் வெள்ளி விலை
    மாசு காற்றால் ஆண்டுதோறும் 33,000 இந்தியர்கள் உயிரிழப்பதாக அறிக்கை  காற்று மாசுபாடு
    மாயாவதி கட்சியின் தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட வழக்கில் 8 பேர் கைது  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025