NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம்
    மாதவிடாயின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலியின் அளவு, மாரடைப்பின் போது ஒரு நபர் அனுபவிக்கும் வலிக்கு சமம்: பொதுநல மனு

    மாதவிடாய் விடுப்பிற்கான பொதுநல மனு நிராகரிப்பு: உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 24, 2023
    06:38 pm

    செய்தி முன்னோட்டம்

    பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு பல்வேறு நாடுகளிலும் வழங்க தொடங்கி இருக்கும் நிலையில், இந்தியாவிலும் அதற்கான ஒரு பொதுநல மனு உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டிருந்தது.

    கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களில் மாதவிடாய் விடுப்பு தொடர்பான விதிகளை உருவாக்க அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட இந்த பொதுநல மனுவை(PIL) ஏற்க உச்சநீதிமன்றம் இன்று(பிப் 24) மறுத்துவிட்டது.

    மாதவிடாய் விடுப்பு கண்டிப்பாக வழங்க வேண்டும் என்று வேலை வழங்குபவர்களுக்கு ஆணையிட்டால், அது பெண்களை பணியமர்த்துவதில் இருந்து அவர்களை தடுக்கும் என்று தலைமை நீதிபதி D.Y.சந்திரசூட் கூறியுள்ளார்.

    எனினும், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தில் இது குறித்து மனுதாரர்கள் மனு தாக்கல் செய்யலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    இந்தியா

    மாதவிடாய்க்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்கும் தனியார் நிறுவனங்கள்

    மாதவிடாயின் போது ஒரு பெண் அனுபவிக்கும் வலியின் அளவு, மாரடைப்பின் போது ஒரு நபர் அனுபவிக்கும் வலிக்கு சமம் என்று லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. இதை மேற்கோள்காட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

    மேலும், சோமாடோ, பைஜூஸ் போன்ற இந்திய நிறுவனங்கள் மாதவிடாய்க்கு சம்பளத்துடன் விடுப்பு வழங்குகிறது என்ற தகவலும் இந்த மனுவில் கூறப்பட்டிருந்து.

    இன்று விசாரணைக்கு வந்த இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இது கொள்கை சார்ந்த விஷயம் என்பதால் இதை தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தள்ளுபடி செய்துவிட்டனர்.

    மேலும், சட்டப்பிரிவு 14இன் படி அனைவருக்கும் சம உரிமை வழங்க வேண்டும் என்ற சட்டத்தையும் இது மீறுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    இந்தியா

    சமீபத்திய

    சசிகுமார்- சிம்ரனின் டூரிஸ்ட் பேமிலி OTT வெளியீட்டு விவரங்கள் இதோ! ஜியோஹாட்ஸ்டார்
    IPL 2025: ஒரு அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற 3 அணிகள் ஐபிஎல் 2025
    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்

    உச்ச நீதிமன்றம்

    பிபிசி ஆவணப்பட தடை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நரேந்திர மோடி
    ஈரோடு இடைத்தேர்தல்-இரட்டை இலை சின்னம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியீடு தேர்தல் ஆணையம்
    டெல்லி-உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 5 நீதிபதிகள் முறையாக இன்று பதவியேற்பு டெல்லி
    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகும் விக்டோரியா கவுரி-நியமனத்திற்கு எதிரான வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்றம்

    இந்தியா

    2023 யமஹா: புதிய அம்சங்களுடன் ஃபசினோ மற்றும் ரே ZR மாடல்கள் வெளியீடு யமஹா
    தங்கம் விலை இன்று குறைவு - இன்றைய விலை விபரம் தங்கம் வெள்ளி விலை
    இணையத்தில் கசிந்த புதிய மோட்டோரோலா ரேசர் 2023 மோட்டோரோலா
    சாதிய பாகுபாட்டை தடை செய்த அமெரிக்காவின் முதல் நகரம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025