NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
    வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்

    ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரிய வேதாந்த நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 01, 2024
    08:10 am

    செய்தி முன்னோட்டம்

    தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கோரிய வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உச்ச நீதிமன்றம்.

    அதோடு, ஆலையை மூட உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பாராட்டும் தெரிவித்துள்ளனர் உச்ச நீதிமன்ற நீதிபதிகள்.

    தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் புகையால் சுற்றுவட்டார பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக அங்கிருந்த மக்கள் போராட்டம் நடத்தினர்.

    கடந்த 2018 மே 22-ஆம் தேதி, இந்த போராட்டம் வன்முறையாக வெடிக்க, போலீசார் சுட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலை மே 28-ஆம் தேதி மூடப்பட்டு, தமிழக அரசால் சீல் வைக்கப்பட்டது.

    மேல்முறையீடு

    உச்ச நீதிமன்ற உதவியை நாடிய வேதாந்தா

    மூடப்பட்ட ஆலையை திறக்கக்கோரி, ஸ்டெர்லைட் அலையை நடத்தி வரும் வேதாந்தா நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.

    இந்த வழக்கை விசாரித்த அமர்வு நீதிமன்றம், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் எனக்கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

    இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது வேதாந்தா நிறுவனம்.

    வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு,"தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தியுள்ள சுற்றுச்சூழல் மாசு மற்றும் தாமிரக்கழிவுகளை கையாண்ட விதம் மிகவும் கவலைக்குரியது. எனவே, ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்ற வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது".

    "இந்த வழக்கை திறம்படவிசாரித்த சென்னை உயர் நீதிமன்றநீதிபதிகளுக்கும் பாராட்டு தெரிவிக்கிறோம்'' என தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    உச்ச நீதிமன்றம்

    ஜம்மு காஷ்மீர் சிறப்பு தகுதி ரத்து: உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து காஷ்மீர் தலைவர்கள் கூறியது என்ன? ஜம்மு காஷ்மீர்
    மக்களவையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டதை எதிர்த்து, மஹுவா மொய்த்ரா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நாடாளுமன்றம்
    சட்டப்பிரிவு 370 தீர்ப்பு: உச்ச நீதிமன்றத் தீர்ப்பு ஜம்மு காஷ்மீருக்கு என்ன எதிர்காலத்தை வழங்கியுள்ளது? ஜம்மு காஷ்மீர்
    சட்டப்பிரிவு 370 ரத்து தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பாகிஸ்தானின் ரீ-ஆக்ஷன் என்ன?  பாகிஸ்தான்

    சென்னை உயர் நீதிமன்றம்

    உடல் உறுப்பு தானம் பெறுவதற்கு தமிழகத்தில் 6,785 பேர் காத்திருப்பு: சுகாதாரத்துறை செயலாளர் தகவல் தமிழ்நாடு
    செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு ஒத்திவைப்பு - சென்னை உயர்நீதிமன்றம் செந்தில் பாலாஜி
    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு  தமிழக அரசு
    'லியோ' படத்தின் சிறப்பு காட்சிக்கான அனுமதி மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம் லியோ
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025