NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
    பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

    பொன்முடி சொத்துகுவிப்பு வழக்கில், லஞ்ச ஒழிப்பு துறைக்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 29, 2024
    02:14 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னதாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், சிறை தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடி, மேல்முறையீடு செய்து சிறை செல்வதிலிருந்து விலக்கு பெற்றார்.

    இதற்கிடையே, வழக்கின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி அபய்.எஸ்.ஓஹா, பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மனு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை மார்ச் 4ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    விசாரணையின் போது, பொன்முடி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, "பொன்முடி அமைச்சராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருந்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் அவரது தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும்" என்று கோரிக்கை வைத்தார்.

    மேல்முறையீடு

    தண்டனையை நிறுத்தி வைக்க நீதிபதி மறுப்பு 

    மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி, "தண்டனையை நிறுத்தி வைக்கப் போவதில்லை. முதலில் லஞ்ச ஒழிப்புத் துறை இதுதொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யட்டும். அதன்பிறகு பார்த்துக் கொள்ளலாம்" என்றும் தெரிவித்தார்.

    இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய லஞ்சஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையையும் மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.

    கடந்த 2006 - 2011 திமுக ஆட்சி காலத்தில், உயர்கல்வி மற்றும் கனிம வளத் துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார் பொன்முடி.

    அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.76 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 2011ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொன்முடி
    உச்ச நீதிமன்றம்
    சிறை
    திமுக

    சமீபத்திய

    சமந்தா-ராஜ் நிதிமோரு டேட்டிங் வதந்திகளுக்கிடையே வைரலாகும் ஷ்யாமலி டே யார்? சமந்தா ரூத் பிரபு
    வக்ஃப் வாரிய சட்டத் திருத்தத்தில் இடைக்கால உத்தரவு குறித்து மே 20இல் பரிசீலனை; உச்ச நீதிமன்றம் அறிவிப்பு வக்ஃப் வாரியம்
    இந்தியாவிடம் பாகிஸ்தான் வீழ்ந்தது உண்மைதான்; தி நியூயார்க் டைம்ஸைத் தொடர்ந்து வாஷிங்டன் போஸ்டும் ஒப்புதல் ஆபரேஷன் சிந்தூர்
    காவலில் இருந்த இந்திய ராணுவ வீரரை மனரீதியாக கொடுமைப்படுத்திய பாகிஸ்தான் பாகிஸ்தான் ராணுவம்

    பொன்முடி

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார் முன்னாள் அமைச்சர் பொன்முடி  மு.க ஸ்டாலின்
    'பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியமில்லை' - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு சென்னை உயர் நீதிமன்றம்
    சொத்துகுவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு சரணடைவதில் இருந்து விலக்கு: உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்

    உச்ச நீதிமன்றம்

    3 ஆண்டுகளாக ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்?-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி  ஆர்.என்.ரவி
    துணை வேந்தருக்கான பணி நியமன கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்  ஆர்.என்.ரவி
    'தவறான விளம்பரங்களை வெளியிட்டால் 1 கோடி ரூபாய் அபராதம்': பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்  இந்தியா
    சட்டம் பேசுவோம்: அரசியலமைப்புச் சட்டம் ஆளுநர்களுக்கு என்ன அதிகாரத்தை வழங்குகிறது? தமிழகம்

    சிறை

    புழல் சிறையில் செந்தில் பாலாஜி; வைரலாகும் அவரின் சாப்பாடு மெனு  செந்தில் பாலாஜி
    முதல் மற்றும் இரண்டாம் நிலை சிறை காவலர்களுக்கு மிகை நேர பணிக்கான ஊதியம் உயர்வு  காவல்துறை
    பாரதியாரின் 103வது நினைவுநாள் - கடலூர் மத்திய சிறையிலுள்ள சிலைக்கு போலீசார் மரியாதை கடலூர்
    இன்று வாச்சாத்தி வன்கொடுமை வழக்கின் மேல்முறையீடு மீதான தீர்ப்பு - ஓர் அலசல்  தமிழ்நாடு

    திமுக

    தமிழக காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம்  காங்கிரஸ்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி
    ஆளுநரின் முடிவுக்கு எதிராக இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம்  தமிழகம்
    'ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி': சிறப்பு சட்டசபை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025