NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று
    இந்தியா

    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று

    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று
    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023, 07:19 pm 0 நிமிட வாசிப்பு
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று
    சதுரகிரி மலையில் உள்ள சிறப்புமிக்க மருத்துவ குணமிக்க நாவல் நீரூற்று

    விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சதுரகிரி மலை புகழ்பெற்ற ஆன்மீக மலையாகும். இந்த மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள நாவல் மரத்தடியில் இயற்கையாக உருவாகும் நீரூற்றை நம்மால் காண முடியும். நாவல் மரத்தின் அடியில் இருந்து வருவதால் இதனை நாவல் நீரூற்று என்று கூறுகிறார்கள். இந்த மலையில் பல நோய்களை தீர்க்கும் அபூர்வ மூலிகைகள் நிறைந்துள்ள நிலையில், இந்த நாவல் நீரூற்று நீருக்கு சர்க்கரை நோயை குணப்படுத்தும் மருத்துவ தன்மை உள்ளது என்று நம்பப்படுகிறது. சர்வேதேச அளவில் இந்த நோய்கான மருந்துகள் விற்பனைக்கு உள்ள நிலையில் இந்த ஊற்று நீர் எவ்வாறு குணப்படுத்தக்கூடும் என்று பலருக்கும் ஒருபக்கம் கேள்விகளும் எழுகிறது என்பது குறிப்பிடவேண்டியவை.

    சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பாட்டில்களில் எடுத்து செல்கிறார்கள்

    சித்த மருத்துவத்தில் பொதுவாக சர்க்கரை நோய்க்கு நாவல் பழங்கள் பயன்படுத்தப்படும். அந்த வகையில் இந்த நீரானது நாவல் மரத்தின் அடியில் உருவாகி, மரத்தின் வேர்கள், இலைகள் பட்டு வருவதால் இந்த மருத்துவ குணத்தினை பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் சதுரகிரி மலையேறி சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் இந்த நீரினை தொடர்ந்து குடித்தால் சர்க்கரை நோயில் இருந்து நிரந்தரமாக குணமடையலாம் என்பதால் பாட்டில்களில் இந்த நீரினை எடுத்து செல்கிறார்கள். பார்ப்பதற்கு கண்ணாடி போல் தெளிவாக காணப்படும் இந்த நீரினை கையில் அள்ளி குடித்தால் அவ்வளவு இனிப்பான சுவையில் இருக்கிறது என்பது இதன் கூடுதல் சிறப்பாகும்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    நீரிழிவு நோய்
    விருதுநகர்

    நீரிழிவு நோய்

    மருத்துவம்: கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்ட நபர்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்படலாம் கோவிட்
    கொரோனா தாக்குதலால் அதிகரிக்கும் நீரழிவு நோய்: அதிர்ச்சி தரும் ஆராய்ச்சி தகவல் கொரோனா
    மீண்டும் மே மாதம் உச்சம் தொடும் கொரோனா: ஆய்வில் தகவல் கொரோனா

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் - நம் முன்னோர்கள் விட்டு சென்ற ஆயிரக்கணக்கான பொக்கிஷங்கள் மாவட்ட செய்திகள்
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது தமிழ்நாடு
    மூலிகை பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.15க்கு வழங்குவேன் - ராமர் பிள்ளை  தமிழ்நாடு
    சதுரகிரி கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி  தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023