NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை 
    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை

    சேலம் பெரியார் பல்கலைக்கழக முறைகேடு வழக்கில் 5 பேராசிரியர்களிடம் விசாரணை 

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2024
    04:06 pm

    செய்தி முன்னோட்டம்

    சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகரான இளங்கோவன், பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகாரளித்திருந்தார்.

    அதில் போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டதாகவும், அரசு செலவுகளில் அலுவலர்களை பயன்படுத்தியதாகவும், தனியே நிறுவனங்கள் துவங்கியதாகவும் கூறப்பட்டிருந்தது.

    மேலும் அவர் சாதிப்பெயரை குறிப்பிட்டு பல்கலைக்கழக சங்கத்தினர் சிலரை திட்டியதாகவும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

    அதன் அடிப்படையில், காவல்துறை ஜெகநாதனை வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தது.

    அதனையடுத்து அவர் கடந்த டிச.,27ம் தேதி காலை சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அங்கு அவருக்கு 7 நாட்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதுடன், அந்த ஒருவார காலமும் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

    விசாரணை 

    தனி தனியே இவர்களிடம் உதவி ஆணையாளர் விசாரணை நடத்தினார்

    இதனிடையே, இந்த வழக்கு தொடர்பாக கருப்பூர் காவல் நிலையம் சார்பில் சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்பட 5 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

    அதன்படி பேராசிரியர் சுப்ரமணிய பாரதி, நரேஷ் குமார், ஜெயக்குமார், ஜெயராமன் மற்றும் ஊழியரான தந்தீஸ்வரன் உள்ளிட்டோர் விசாரணைக்காக இன்று(ஜன.,4) காலை நேரில் ஆஜராகியுள்ளனர்.

    சூரமங்கலம் உதவி ஆணையாளர் தலைமையில் இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    மேலும், தனியார் நிறுவனங்கள் துவங்கப்பட்டது குறித்த ஆவணங்கள் இவர்களிடம் உள்ளதா? என்பது குறித்து தனி தனியே இவர்களிடம் உதவி ஆணையாளர் விசாரணை நடத்தினார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சேலம்
    கைது
    சம்மன்
    காவல்துறை

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    சேலம்

    சேலத்தில் சக மாணவியை கர்ப்பமாக்கிய 10ம் வகுப்பு மாணவன் - அதிர்ச்சியடைந்த பெற்றோர் பள்ளி மாணவர்கள்
    பஞ்சாப் ராணுவ நிலைய துப்பாக்கி சூடு: இறந்தவர்களில் இருவர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்  இந்தியா
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  அரசு மருத்துவமனை

    கைது

    லட்சக்கணக்கில் மதிப்புடைய புடவைகளை திருடி சென்ற பெண்கள் - விஜயவாடா விரையும் காவல்துறை  சென்னை
    4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த சப் இன்ஸ்பெக்டர் - ராஜஸ்தானில் அதிர்ச்சி ராஜஸ்தான்
    கேரளாவின் முதல் டீப் ஃபேக் டெக்னாலஜி வழக்குப்பதிவு, ஒருவர் கைது - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி
    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு  சென்னை

    சம்மன்

    சொத்து குவிப்பு வழக்கு - அதிமுக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சம்மன்  அதிமுக
    செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜி
    அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பியை கைது செய்யவில்லை: அமலாக்கத்துறை அறிக்கை செந்தில் பாலாஜி
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்

    காவல்துறை

    உக்கரைனில் கிராம கவுன்சிலர் கூட்டத்தில் கையெறி குண்டுகளை வீசிய கவுன்சிலர், 26 பேர் காயம் உக்ரைன்
    எம்.எஸ்.தோனி தொடர்ந்த அவதூறு வழக்கு - ஐபிஎஸ் அதிகாரிக்கு சிறை தண்டனை  எம்எஸ் தோனி
    நாடாளுமன்ற அத்துமீறல்: நாட்டில் பதட்டத்தை உருவாக்க திட்டமிட்டிருந்த குற்றவாளிகள்  நாடாளுமன்றம்
    நாடாளுமன்ற அத்துமீறுல்: பாஜக எம்பி பிரதாப் சிம்ஹாவுக்கு டெல்லி போலீஸ் நோட்டீஸ் பாஜக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025