NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சதய விழா ஸ்பெஷல்: அண்ணன் அதித்த கரிகாலனின் கொலையாளிகளை கண்டறிந்து நீதி வழங்கிய ராஜ ராஜ சோழர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சதய விழா ஸ்பெஷல்: அண்ணன் அதித்த கரிகாலனின் கொலையாளிகளை கண்டறிந்து நீதி வழங்கிய ராஜ ராஜ சோழர்
    ராஜராஜ சோழருக்கு இந்த மாதம் சதயவிழா கொண்டாடப்படவுள்ளது

    சதய விழா ஸ்பெஷல்: அண்ணன் அதித்த கரிகாலனின் கொலையாளிகளை கண்டறிந்து நீதி வழங்கிய ராஜ ராஜ சோழர்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 05, 2024
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    பொன்னியின் செல்வாராம், ராஜராஜ சோழருக்கு இந்த மாதம் சதயவிழா கொண்டாடப்படவுள்ளது. அதாவது அவருடைய பிறந்தநாள் விழா.

    இந்த நாளில், ராஜராஜ சோழரின் பெருமைகளை பேசும் பல கட்டுரைகளை நாங்கள் வழங்கி வருகிறோம்.

    அந்த வகையில், ராஜராஜ சோழன் சிறந்த ஆட்சியாளர் என்பதையும் தாண்டி, அவர் அன்பான சகோதரன் என்பதற்கு சான்றாக ஒரு நிகழ்வையும் இங்கே பார்க்கலாம்.

    பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவருக்கும், வரலாற்று ஆர்வலருக்கும் அறிந்த ஒரு செய்தி, பொன்னியின் செல்வரின் மூத்த சகோதரர் இளவரசர் ஆதித்த கரிகாலன் என்பதே.

    ஆதித்தன் முடிசூட்டு இளவரசனாக பதவியேற்ற சில மாதங்களிலேயே சதியால் கொலை செய்யப்பட்டார்.

    சதி

    சதியால் கொல்லப்பட்ட ஆதித்த கரிகாலன்

    புதுக்கோட்டை அருகே உள்ள சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலன் வீரத்துடன் போர் புரிந்து, வீரபாண்டியன் தலைகொண்டதாகவும், அந்த தலையை கொய்து தஞ்சை நுழைவு வாயிலில் பொதுவெளியில் வைத்ததாகவும் திருவாலங்காட்டுப் பட்டயங்கள் கூறுகின்றன.

    இந்த கொலைக்கு பழிவாங்க, பாண்டியன் ஆபத்துதவிகள் சோழ ராஜ்யத்தில் ஊடுருவி ஆதித்தனை கொலை செய்தனர்.

    உடையார்குடி கல்வெட்டில் இவ்விளவரசனைக் கொன்றோர் யார் என்பதை உணர்துகிறது.

    அவர்கள் சோமன், ரவிதாசனான பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரனான இருமுடிச்சோழ பிரமாதிராஜன், மலையனூரானான ரேவதாசக் கிரமவித்தன் என்பவர்கள்.

    அவர்கள் நால்வரும் உடன்பிறந்தோர் என்பதும் அக்கல்வெட்டில் அறியமுடிகிறது.

    அவர்களுள் இருவர், 'பிரமாதிராஜன்' என்ற உயர் பட்டங்களை பெற்றிருப்பதால் அவர்கள் அரசாங்க பதவியில் இருந்த அந்தணர் எனவும் கூறப்படுகிறது.

    நீதி

    கொலைக்கு நீதி வழங்கிய அருள்மொழி தேவர்

    சுந்தர சோழருக்கு பின்னர் அரியணை ஏறிய உத்தம சோழர் இந்த வழக்கினை விசாரித்தாரா என்பது குறித்து தெரியவில்லை.

    எனினும், மன்னார்குடிக்கு அருகிலுள்ள உடையார்குடி சிவன் கோவில் கருவறையின் மேற்குப் புறத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒரு சாசனத்தில் ஆதித்த கரிகாலன் கொலைக்கு தொடர்புடையவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலங்களை, விற்பனை செய்ய அனுமதி அளிக்கிறது.

    இது ராஜராஜ சோழன் ஆட்சிக்கு வந்த இரண்டாவது ஆண்டில் பொறிக்கப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

    இதன் மூலம் அண்ணனின் கொலைக்கு காரணமானவர்களை அவர் தண்டித்ததாக தெரியவருகிறது.

    இருப்பினும் கொலையாளிகள் சதிக்கு பின்னர், சோழ தேசத்தில் தங்க இருக்க மாட்டார்கள் எனவும், அதனால் அவர்களது சொத்துக்கள் மற்றும் அவர்களின் பந்துக்களின் சொத்துக்கள் அனைத்துமே பறிமுதல் செய்துள்ளார்.

    செப்பேடு 

    செப்பேட்டில் காணப்படும் வரிகள் 

    "பாண்டியனைத் தலைகொண்ட கரிகால சோழனைக் கொன்று துரோகிகளான சோமன்... றம்பி ரவிதாசனான பஞ்சவன் பிரம்மாதிராஜனும் இவன் றம்பி பரமேஸ்வரன் ஆன இருமுடிச் சோழ பிரம்மாதிராஜனும் இவர்கள் உடப்பிறந்த மலையனூரானும் இவர்கள் தம்பிமாரும் இவர்கள் மக்களிடும் இவர் பிரமாணிமார் பெற்றாளும் இ........ராமத்தம் பேரப்பன் மாரிடும் இவர்கள் மக்களிடம் இவர்களுக்குப் பிள்ளை குடுத்த மாமன்மாரிடும் தாயோடுடப் பிறந்த மாமன் மாமன்மாரிடும் இவர்கள் உடபிறந்த பெண்களை வேட்டாரினவும் இவர்கள் மக்களை வேட்டாரினவும் ஆக இவ்வனைவர் (முடமை)யும் நம் ஆணைக்குரியவாறு கொட்டயூர் பிரம்ம ஸ்ரீராஜனும் புள்ளமங்கலத்து சந்திரசேகர பட்டனையும் பெறத்தந்தோம்" என்கிறது இந்தக் கல்வெட்டின் ஒரு பகுதி.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பொன்னியின் செல்வன்
    பிறந்தநாள்
    பிறந்தநாள் ஸ்பெஷல்

    சமீபத்திய

    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    அமெரிக்காவே செய்யும் போது, உங்களுக்கு என்ன?- தீவிரவாதிகளை பாக்., ஒப்படைக்க வேண்டும் என இந்திய தூதர் வலியுறுத்தல் இந்தியா
    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்

    பொன்னியின் செல்வன்

    தெலுங்கில் நாயகியாக அறிமுகமாகும் சாரா அர்ஜுன் திரைப்பட அறிவிப்பு
    2023 Year Roundup- முதல் நாளில் அதிக வசூல் செய்த டாப் 5 தமிழ் படங்கள் லியோ
    தொடர்ந்து 'தக் லைஃப்' படத்தில் இணையும் பொன்னியின் செல்வன் நட்சத்திரங்கள் இயக்குனர் மணிரத்னம்
    சிறந்த பின்னணி இசைக்காக தேசிய விருது; ஏழாவது முறையாக விருது பெறும் ஏஆர் ரஹ்மான் ஏஆர் ரஹ்மான்

    பிறந்தநாள்

    இந்திய கிரிக்கெட் அணியின் எதிர்கால கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பிறந்த தினம் இன்று ஹர்திக் பாண்டியா
    இந்திய ஹாக்கி அணியின் ஜாம்பவான் பல்பீர் சிங் சீனியரின் 100வது பிறந்த தினம் இன்று இந்திய ஹாக்கி அணி
    #பூஜாஹெக்டே 33- 'பீஸ்ட்' நடிகை பற்றி உங்களுக்கு தெரியாத ஆறு விஷயங்கள் திரைப்படம்
    'ராக்ஸ்டார்' அனிருத் பிறந்தநாள்: அவர் திரையில் தோன்றி பாடிய பாடல்கள்  அனிருத்

    பிறந்தநாள் ஸ்பெஷல்

    ஹாரி பாட்டர் பிறந்தநாள்; ஹாரி பாட்டரைப் பற்றி உங்களுக்குத் தெரியாத 5 விஷயங்கள் பிறந்தநாள்
    'புஷ்பா 2 ' திரைப்படத்தில் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு  நடிகர்
    இயக்குனர் ஷங்கர் பிறந்தநாளை கொண்டாடிய 'இந்தியன் 2' படக்குழு இயக்குனர்
    கேப்டன் விஜயகாந்தால், தனுஷ் குடும்பத்தினர் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பம்  விஜயகாந்த்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025