NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?

    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்?

    எழுதியவர் Srinath r
    Dec 15, 2023
    06:21 pm

    செய்தி முன்னோட்டம்

    கார்த்திகை மாதம் தொடங்கியது முதலே ஐயப்ப பக்தர்கள் 41 தினங்கள் விரதமிருந்து, மாலை அணிந்து, மண்டல மற்றும் மகர பூஜை நாட்களில் சபரிமலைக்கு செல்வது வழக்கம்.

    கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் லட்சக்கணக்கானோர் அங்கு கூடி வருகின்றனர்.

    இதனால் மக்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய 20 மணி நேரம் வரை ஆவதாக கூறப்படுகிறது. மேலும் சிலர் தரிசனம் செய்ய முடியாமல் திரும்பி வருவதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், சபரிமலையில் உண்மையாகவே பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளதா, இல்லை எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரளா அரசு தோல்வி அடைந்து விட்டதா?

    உண்மையில் சபரிமலையில் என்ன நடக்கிறது?

    2nd card

    சபரிமலையில் பின்பற்றப்படும் திருப்பதி முறை

    திருப்பதி கோவிலில் பின்பற்றுவது போல, 'டைனமிக் க்யூ' முறை, சபரிமலையிலும் கேரளா அரசால் இந்த ஆண்டு முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

    மரகூட்டத்தில் இருந்து சன்னிதானம் வரையில், டைனமிக் க்யூ வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

    மேலும் தரிசன நேரத்தில் மாற்றம், வாகனங்களுக்கு கோவிலில் இருந்து குறிப்பிட்ட தூரத்திற்கு மேல் அனுமதி மறுப்பு, உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    இருப்பினும், டைனமிக் க்யூ முறையின் மூலம், தரிசனத்திற்கான நேரம் அதிகரித்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் அரசு தோல்வி அடைந்துள்ளதாக பக்தர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

    3rd card

    சபரிமலையின் தற்போதைய நிலை குறித்து பக்தர்கள் என்ன சொல்கிறார்கள்?

    சபரிமலையில் உள்ள கூட்ட நெரிசல் குறித்து தரிசனம் முடித்து வந்த சில பக்தர்கள் பிபிசி தமிழிடம், கேரளா அரசின் இந்த புதிய விதிமுறைகள் சிக்கல்களை உண்டாக்கி, தரிசன நேரத்தை அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

    நிலக்கல் பகுதியில் இருந்து சொந்த வாகனத்தில் பம்பைக்கு செல்வதை கேரளா அரசு தடை செய்துள்ளதாலும், இரவு 10 மணிக்கு மேல் கேரள அரசு பேருந்துகள் பம்பைக்கு இயக்கப்படுவதில்லை என்பதாலும், பத்து மணி நேரத்திற்கு மேல் வீணாவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    டைனமிக் க்யூ முறையில் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால், அதில் 20 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டி உள்ளதாக, மற்றொரு பக்தர் தெரிவித்ததாக பிபிசி தமிழ் கூறுகிறது.

    4th card

    அரசியலாக்கப்படும் சபரிமலை விவகாரம்?

    கேரளா அரசின் இந்த புதிய நடைமுறைகளால் சபரிமலையில் கூட்டம் அதிகரித்துள்ளதாக பக்தர்கள் தெரிவித்துள்ள நிலையில், கேரள எதிர்க்கட்சிகளும் அரசையே குற்றம் சாட்டுகின்றனர்.

    டிசம்பர் 10ம் தேதி, வரிசையில் நின்றபோது உயிரிழந்த சேலத்தைச் சேர்ந்த சிறுமியும், தொலைந்து போன தந்தையை தேடி அழும் சிறுவனின் வீடியோவும் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு, அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகிறது.

    மேலும் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக, இந்த விவகாரத்தில் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

    வழக்கமாக அனைத்து துறைகளையும் கூட்டி நடத்தப்படும் ஆலோசனை கூட்டம், இந்த ஆண்டு நடத்தப்படவில்லை என காங்கிரஸ் கூறுகிறது.

    இந்துக்களுக்கு எதிரான அரசு, பக்தர்களை வஞ்சிப்பதாக கேரள பாஜக, அரசின் மீது குற்றம்சாட்டியுள்ளது.

    5th card

    அரசு தரப்பு விளக்கம் என்ன?

    எதிர்க்கட்சிகள் மற்றும் பக்தர்களின் புகார்கள் குறித்து பேசியுள்ள கேரள அறநிலையத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்,

    நாள் ஒன்றுக்கு ஒரு லட்சம் பக்தர்கள் வரை, பாதுகாப்பாக தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

    சபரிமலை குறித்த பொய்யான வீடியோக்களை பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பரப்பி, அரசியல் செய்வதாக குற்றம் சாட்டிய அமைச்சர்,

    சபரிமலையில் அரசின் புதிய தோல்வி அடையவில்லை எனவும், அங்கு அனைத்தும் சரியாக உள்ளது என கூறியிருந்தார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சபரிமலை
    கொரோனா
    கேரளா
    திருப்பதி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  தமிழ்நாடு
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  குடிநீர்
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் கர்நாடகா

    கொரோனா

    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம்  இந்தியா
    'மறுசீரமைப்பு' திவால் நடவடிக்கைக்கு கோரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க ஸ்டார்ட்அப்பான வீவொர்க்  வணிகம்
    இந்தியா மற்றும் உலகளவில் இன்றைய கொரோனா நிலவரம் இந்தியா

    கேரளா

    'தேச விரோத செயலில் சபை ஈடுபட்டது': கேரள தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளியின் பகீர் வாக்குமூலம்  குண்டுவெடிப்பு
    கேரளா தொடர் குண்டுவெடிப்பு: பலி எண்ணிக்கை 3ஆக உயர்வு; 50க்கும் மேல் படுகாயம் குண்டுவெடிப்பு
    கலவரத்தை தூண்டும் கருத்துக்களை கூறியதாக மத்திய அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்தது கேரள காவல்துறை  குண்டுவெடிப்பு
    கேரளா குண்டுவெடிப்பு சம்பவம் - தமிழக பாதுகாப்பினை உறுதி செய்ய வலியுறுத்தும் உளவுத்துறை குண்டுவெடிப்பு

    திருப்பதி

    திருப்பதி செல்வதற்கு கொரோனா சான்றிதழ் கட்டாயமா? கொரோனா
    70 லட்சம் மதிப்புள்ள வீட்டை ஏழுமலையானுக்கு கொடுத்த பக்தை! இந்தியா
    பக்தர்கள் அதிகம் செல்லும் கோவில் - ஆன்மீக பயணங்கள் குறித்த ஓயோ ஆய்வு இந்தியா
    திருப்பதி கோயில் 6 மாதங்கள் மூடப்படுவதாக இணையத்தில் பரவிய செய்தி - விளக்கம் அளித்துள்ள திருப்பதி தேவஸ்தானம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025