NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம் 
    கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம்

    கார் ட்ரைவர் வங்கி கணக்கில் ரூ.9,000 கோடி - டிஎம்பி வங்கி விளக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Sep 21, 2023
    07:07 pm

    செய்தி முன்னோட்டம்

    பழனியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்காக சென்னை வந்து, தனது நண்பர் அறையில் தங்கி வாடகை கார் ஒட்டி வந்துள்ளார்.

    இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இவரது வங்கி கணக்கிற்கு கடந்த 9ம் தேதி மாலை 3 மணியளவில் ரூ.9,000 கோடி க்ரெடிட் ஆகியுள்ளது.

    முதலில் இதற்கான மெசேஜை பார்த்த அவர், தனது அக்கவுண்டில் வெறும் ரூ.15தான் இருந்தது என்றும், இது மோசடி மெசேஜாக இருக்கும் என்றும் எண்ணியுள்ளார்.

    வங்கி 

    தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.9,000 கோடி 

    ஆனால் பின்னர் மொபைல் போனில் தனது வங்கி ஆப்பில் அவர் செக் செய்து பார்த்ததில் அந்த மெசேஜ் உண்மையானது என்று தெரியவந்துள்ளது.

    எனினும் இதனை பரிசோதிக்க தனது நண்பருக்கு ரூ.21,000 பணம் அனுப்பி பார்த்துள்ளார்.

    இந்த பணப்பரிமாற்றம் செய்த சில நிமிடங்களிலேயே அவரது அக்கவுண்டில் இருந்த அனைத்து பணமும் வங்கி திரும்பப்பெற்றுள்ளது.

    அதன்பின்னர் தூத்துக்குடியிலுள்ள டிஎம்பி வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து ராஜ்குமாரை அழைத்து தவறுதலாக அவரது அக்கவுண்டில் ரூ.9,000 கோடி டெபாசிட் செய்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும், வங்கி கணக்கில் ஷேர் செய்த பணத்தினை செலவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்திய அவர்கள், சென்னையில் உள்ள டிஎம்பி வங்கிக்கு நேரில் வருமாறு அழைத்துள்ளனர்.

    சமரசம் 

    காவல்நிலையம் செல்லாமல் சமரசம் பேசிய வங்கி 

    அதன்பின்னர் நேரில் சென்ற அவர், இவ்வளவு பெரிய தொகை எனது அக்கவுண்டிற்கு வந்துள்ளதால் பின்னாடி தனக்கு பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

    அதனால் இதுகுறித்து காவல்நிலையத்தில் தகவல் ஒன்றை தெரிவிக்கப்போவதாக கூறியுள்ளார்.

    இதனை தொடர்ந்து சென்னை திநகர் வங்கி கிளை சார்பில் ஓர் வழக்கறிஞரும், ராஜ்குமார் சார்பில் ஓர் வழக்கறிஞரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது.

    அதன்படி பண பரிமாற்றம் செய்த அந்த ரூ.21,000 ராஜ்குமார் திருப்பி செலுத்த வேண்டாம்.

    அதற்கு பதிலாக அவருக்கு வங்கி சார்பில் வாகனக் கடன் அளிக்கப்படும் என்று சமரசம் பேசப்பட்டுள்ளது என்று தெரிகிறது.

    விளக்கம் 

    வங்கி சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கம் 

    இந்த விவகாரம் குறித்து பெருமளவில் பேச்சுக்கள் உலா வர துவங்கியதால் தற்போது வங்கி சார்பில் ஓர் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    அதாவது, இது எழுத்தர் பிழை. வங்கிக் கணக்கு எழுத வேண்டிய இடத்தில் பணத் தொகையையும், பணத்தின் தொகை குறித்த விவரங்கள் நிரப்ப வேண்டிய இடத்தில், வங்கி கணக்கையும் எழுதியதால் தான் இந்த குளறுபடி நடந்துள்ளது என்று வங்கி கூறியுள்ளது.

    நடவடிக்கை 

    யார் மீதும் நடவடிக்கை எடுக்கவில்லை என தகவல் 

    மேலும், எழுத்தரின் இந்த பிழையால் வங்கிக்கு எந்த இழப்பீடும் ஏற்படவில்லை என்றும் வங்கி சார்பில் கூறப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, இது கிளரிக்கள் பிழை அதாவது எழுத்தர் பிழை என்பதால் யார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் டிஎம்.பி வங்கி தூத்துக்குடி தலைமை அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பணம் டெபாசிட் செய்த 30 நிமிடங்களிலேயே மீண்டும் வங்கி கணக்கிற்கு அந்த பணம் வந்து விட்டது என்று வங்கி அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    வங்கிக் கணக்கு
    சென்னை
    கார்

    சமீபத்திய

    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக
    வணிக எல்பிஜி சிலிண்டர் விலை ரூ.24 குறைப்பு; பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு எரிவாயு சிலிண்டர்
    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ

    வங்கிக் கணக்கு

    ஜனவரி 1 முதல் புதிதாக அமல்படுத்தப்படும் சில விதிகள்; விவரங்கள் உள்ளே கார்
    இந்தியாவின் பாதுகாப்பான வங்கிகளின் பட்டியலை வெளியிட்டது ரிசர்வ் வங்கி இந்தியா
    நாடு முழுவதும் 30, 31ம் தேதி வங்கிகள் ஸ்டிரைக்? ஊழியர்களின் கோரிக்கை என்ன? இந்தியா
    சத்தமில்லாமல் கூகுள் பே, போன்பே-விற்கு கட்டணம் வசூலிக்கும் வங்கிகள்; முழு விபரம்! தொழில்நுட்பம்

    சென்னை

    என்.எல்.சி.ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை - மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு மத்திய அரசு
    நூதன முறையில் ஊசி மூலம் ரத்தத்தை வெளியேற்றி சென்னை அரசு மருத்துவர் தற்கொலை  கொரோனா
    சென்னையிலிருந்து கேரளா சென்ற தனியார் பேருந்து விபத்து - இருவர்  உயிரிழப்பு கேரளா
    தீபாவளி பண்டிகை - சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை  பண்டிகை

    கார்

    இந்தியாவில் வெளியானது மாருதியின் ஃப்ளாக்ஷிப் மாடலான 'இன்விக்டோ' மாருதி
    நெக்ஸா லைன்-அப் மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்திருக்கும் மாருதி மாருதி
    திருப்பதியில் இருந்து விஜயவாடா சென்று கொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு  திருப்பதி
    ரூ.30,000 வரை சலுகை விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மஹிந்திரா தார் மஹிந்திரா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025