NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்

    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்

    எழுதியவர் Nivetha P
    Apr 07, 2023
    07:44 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம், ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கட்டிட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் கட்டுமான பிரிவு உள்ளது.

    இந்த அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரியும் கண்ணன் என்பவர் அந்த வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதனையடுத்து இங்கு லஞ்ச பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

    அதன் பேரில், நேற்று(ஏப்ரல்.,6) இரவு ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டி.எஸ்.பி.ராமசந்திரன் தலைமையில் ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர்களுடன் அரசு விருந்தினர் மாளிகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    தொடர் விசாரணை

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப்'பில் இருந்தும் பணம் பறிமுதல்

    இந்த சோதனையில் செயற்பொறியாளராக பணிபுரியும் கண்ணன் தங்கியிருந்த அறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப் ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதன்படி ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்தி 570 ரூபாய் பணம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து செயற்பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப வரைவாளர் குமரேசன், ஜீப் ட்ரைவர் முனுசாமி ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இது குறித்து தற்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ராமநாதபுரம்

    சமீபத்திய

    அதிமுகவின் மாநிலங்களவை வேட்பாளர்கள் அறிவிப்பு; யார் யாருக்கு வாய்ப்பு? அதிமுக
    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு

    சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல் சென்னை
    கோடை காலம் காரணமாக ஊட்டி தாவரவியல் பூங்காவில் படப்பிடிப்புக்கு தடை ஊட்டி
    தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை அறிக்கை
    இன்று முதல் கீழடி அருங்காட்சியகத்திற்குள் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிப்பு வைரல் செய்தி

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு தமிழ்நாடு செய்தி
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது தமிழ்நாடு
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் தமிழ்நாடு
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025