NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்
    இந்தியா

    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்

    எழுதியவர் Nivetha P
    April 07, 2023 | 07:44 pm 1 நிமிட வாசிப்பு
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்
    தமிழக அரசு விருந்தினர் மாளிகையில் ரூ.32.68 லட்ச லஞ்ச பணம் பறிமுதல்

    தமிழ்நாடு மாநிலம், ராமநாதபுர மாவட்ட ஆட்சியர் கட்டிட வளாகத்தில் பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் கட்டுமான பிரிவு உள்ளது. இந்த அலுவலகத்தில் செயற்பொறியாளராக பணிபுரியும் கண்ணன் என்பவர் அந்த வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதனையடுத்து இங்கு லஞ்ச பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், நேற்று(ஏப்ரல்.,6) இரவு ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் டி.எஸ்.பி.ராமசந்திரன் தலைமையில் ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர்களுடன் அரசு விருந்தினர் மாளிகையில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப்'பில் இருந்தும் பணம் பறிமுதல்

    இந்த சோதனையில் செயற்பொறியாளராக பணிபுரியும் கண்ணன் தங்கியிருந்த அறை மற்றும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜீப் ஆகியவற்றில் இருந்து கணக்கில் வராத பணம் கட்டுக்கட்டாக சிக்கியது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. அதன்படி ரூ.32 லட்சத்து 68 ஆயிரத்தி 570 ரூபாய் பணம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து செயற்பொறியாளர் கண்ணன், தொழில்நுட்ப வரைவாளர் குமரேசன், ஜீப் ட்ரைவர் முனுசாமி ஆகியோர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தற்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    ராமநாதபுரம்

    தமிழ்நாடு

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிரதமர் மோடி வருகையையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு பிரதமர் மோடி
    கோவையில் எந்தவொரு திட்டத்தினையும் செயல்படுத்தாத தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கோவை
    தமிழகத்தில் மீண்டும் லாக்டவுன் வருமா என்னும் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் மா.சுப்ரமணியம் கொரோனா
    தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை இந்தியா

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் கடற்கரை
    ராமநாதபுர பரமக்குடி பள்ளி மாணவி கூட்டு பலாத்கார வழக்கு சிபிசிஐடி'க்கு மாற்றம் மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது மாவட்ட செய்திகள்
    ராமநாதபுரத்தில் தலித் நபர் மீது சிறுநீர் கழித்த 11 பேர் மீது வழக்கு பதிவு மாவட்ட செய்திகள்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023