NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது 
    வருமான வரித்துறை வரலாற்றில் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

    காங்கிரஸ் எம்பியுடன் தொடர்புடைய வருமான வரி சோதனையில் ரூ.300 கோடி சிக்கியது 

    எழுதியவர் Sindhuja SM
    Dec 10, 2023
    01:43 pm

    செய்தி முன்னோட்டம்

    கடந்த புதன்கிழமை முதல், வரி ஏய்ப்பு சந்தேகத்தின் பேரில், பௌத் டிஸ்டில்லரி பிரைவேட் லிமிடெட்(BDPL) என்ற மதுபான நிறுவனத்துடன் தொடர்புடைய பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

    காங்கிரஸின் ராஜ்யசபா எம்பி தீரஜ் சாஹுவின் குடும்ப உறுப்பினர்கள் தான் ஒடிசாவை தளமாகக் கொண்ட இந்த பெரிய மதுபான உற்பத்தி தொழிலை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    எம்பி தீரஜ் சாஹுவின் மகன் ரித்தேஷ் சாஹு தான் BDPLஇன் நிர்வாக இயக்குநராக உள்ளார்.

    அவரது மூத்த சகோதரர், உதய் சங்கர் பிரசாத், BDPL நிறுவனத்தின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில், ஒடிசா,ஜார்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    திலகவ்க்ன்

    கைப்பற்றப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்ட வாய்ப்பு 

    இதுவரை 300 கோடி ரூபாய் எண்ணப்பட்டுள்ளது.

    மேலும், பணத்தை எண்ணும் பணி தொடர்ந்து நடந்து வரும் நிலையில், BDPL நிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகை ரூ.350 கோடியை தாண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வருமான வரித்துறை வரலாற்றில் இவ்வளவு பணம் பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.

    கைப்பற்றப்பட்ட பணத்தை எண்ணும் பணியில் இதுவரை 30க்கும் மேற்பட்ட வங்கி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

    பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பிற வங்கிகளின் ஊழியர்களும் இந்த பணத்தை எண்ணும் பணியில் சேருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

    பணத்தை எண்ணும் பணியை துரிதப்படுத்த 40 பெரிய மற்றும் சிறிய நோட்டு எண்ணும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    ஒடிசா
    மேற்கு வங்காளம்
    வருமான வரித்துறை

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    காங்கிரஸ்

    முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் ஐபோன்களை அரசாங்கம் 'ஹேக்கிங்' செய்ய முயன்றதாக புகார்: முழு விவரம்  எதிர்க்கட்சிகள்
    '150 நாடுகளுக்கு இந்த எச்சரிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளன': ஹேக்கிங் குற்றச்சாட்டை மறுத்தது மத்திய அரசு  பாஜக
    பெகாசஸ் ஸ்பைவேர் வழக்கு: 2021இல் முக்கிய அரசியல் தலைவர்களின் மொபைல்கள் 'ஹேக்' செய்யப்பட்ட விவகாரம் எதிர்க்கட்சிகள்
    காங்கிரஸில் இணைகிறார் முன்னாள் டிஜிபி ரவி டெல்லி

    ஒடிசா

    ஒடிசா: விபத்து நடந்த தண்டவாளத்தில் சிதறிக்கிடந்த காதல் கவிதைகள் இந்தியா
    ஒடிசாவில் மீண்டும் ஒரு ரயில் தடம் புரண்டது  இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 48 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட நபர் இந்தியா
    ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கரம் நீட்டிய பேடிஎம் நிறுவனர்! இந்தியா

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி
    ஜனாதிபதி திரௌபதி முர்முவை நடனமாடி வரவேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ்
    ராம நவமி கலவரம் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்: உள்துறை அமைச்சகம் இந்தியா
    ராம நவமி பிரச்சனை: அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுரை இந்தியா

    வருமான வரித்துறை

    கரூரில் 8 நாட்களாக நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை முடிவு  தமிழ்நாடு
    அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை  சென்னை
    செந்தில் பாலாஜியை விடாமல் துரத்தும் சோதனை: கரூரில் வருமானவரித்துறை மீண்டும் சோதனை செந்தில் பாலாஜி
    வருமான வரி செலுத்துபவர்களுக்கு வருமான வரித்துறை வெளியிட்ட AIS செயலியைப் பற்றித் தெரியுமா? இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025