NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு
    கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

    கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு

    எழுதியவர் Nivetha P
    Jan 04, 2024
    12:40 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கோயம்பேடு பகுதியில் இருந்து இயக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் அனைத்தும் வண்டலூர் பகுதியினை அடுத்துள்ள கேளம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    அதன்படி, கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அதிநவீன புதிய பேருந்து நிலையத்தினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30ம் தேதி திறந்து வைத்தார்.

    தற்போது இப்பேருந்து நிலையம் மக்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ள பட்சத்தில், சென்னையின் பல்வேறு பகுதியில் இருந்து இந்த பேருந்து நிலையம் செல்ல ஏதுவாக கூடுதலான இணைப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தது.

    இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கூடுதல் மாநகர பேருந்துகள் இயக்கப்படுவதாக கூறப்படுகிறது.

    பேருந்து 

     3 நடைமேடைகள் கொண்டு கட்டப்படவுள்ள ரயில் நிலையம் 

    இதற்கிடையே முன்னதாக, தாம்பரம்-செங்கல்பட்டு இடையேயான வழித்தடத்தில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகேயே புறநகர் ரயில் நிலையம் அமைக்க வேண்டுமென பலதரப்பிலிருந்து கோரப்பட்டது.

    இதன் காரணமாக கடந்த அக்டோபர் மாதம் கிளாம்பாக்கம் அருகே, வண்டலூர்-ஊரப்பாக்கம் இடையே புதிய ரயில் நிலையம் அமைக்க தெற்கு ரயில்வே டெண்டர் கோரியதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த ரயில் நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம்(சி.எம்.டி.ஏ.)சார்பில் ரூ.20 கோடி நிதி முதற்கட்டமாக தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    இந்நிதியை தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைத்துள்ள சி.எம்.டி.ஏ. இதற்கான கட்டுமானப்பணிகளை இந்தாண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

    இதன்படி இந்த ரயில் நிலையத்தில் 3 நடைமேடைகள் அமைக்கப்பட்டு மின்சார ரயில்கள் நின்று செல்லும் வண்ணம் கட்டப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    ரயில் நிலையம்
    மு.க ஸ்டாலின்
    தெற்கு ரயில்வே

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு  தமிழ்நாடு
    நடிகை கௌதமி கொடுத்த நில மோசடி வழக்கில் 6 பேர் கைது - மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிரடி  கைது
    21வது சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வடிவேலு பெற்றார் வடிவேலு
    திரிஷாவுக்கு எதிராக நஷ்ட ஈடு கேட்டு வழக்குப்பதிய அனுமதி கோரிய வழக்கு: நடிகர் மன்சூர் அலிக்கானுக்கு அபராதம் மன்சூர் அலிகான்

    ரயில் நிலையம்

    செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இறந்து கிடந்த நபர்- 5 மணி நேரமாக சடலம் அகற்றப்படாத அவலம் செங்கல்பட்டு
    உத்தரப்பிரதேசம் விரைவு ரயிலில் தீ விபத்து - 19 பேர் காயம் உத்தரப்பிரதேசம்
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  சென்னை
    தெரிந்து கொள்ளுங்கள்- ஏன் ஏசி பெட்டிகள் எப்போதும் ரயிலின் நடுவில் இருக்கிறது? ரயில்கள்

    மு.க ஸ்டாலின்

    'நீர் வழிபடூஉம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார் ஈரோடு மாவட்ட எழுத்தாளர்  ஈரோடு
    மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி ஸ்டாலின்
    2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை  செந்தில் பாலாஜி
    மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை சென்னை

    தெற்கு ரயில்வே

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு தமிழ்நாடு
    254 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் அமைப்பு; தெற்கு ரயில்வே அறிவிப்பு! ரயில்கள்
    இந்திய ரயில் தபால், வீடு தேடி பார்சல் பெற்றுக்கொள்ளும் சேவை இந்திய ரயில்வே
    வந்தே பாரத் ரயில் புதிய வகையில் தயாரிக்கப்படும்! தெற்கு ரயில்வே அறிவிப்பு வந்தே பாரத்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025