NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு
    ரயில்வே பாதுகாப்பு படையினால் மீட்கப்பட்ட 231 பேர்

    வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மீட்பு

    எழுதியவர் Sindhuja SM
    Feb 16, 2023
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    2022ஆம் ஆண்டில் மட்டும் வீட்டில் இருந்து வெளியேறிய 231 குழந்தைகள் மதுரை கோட்ட ரயில்வேக்கு உட்பட்ட ரயில் நிலையங்களில் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

    மீட்கப்பட்ட குழந்தைகளின் விவரங்கள்:

    மதுரை சந்திப்பில்- 176 பேர்(153 சிறுவர்கள், 23 சிறுமிகள்)

    ராமேஸ்வரம்- 21 பேர்(17 சிறுவர்கள், 4 சிறுமிகள்)

    திருநெல்வேலி- 9 பேர் (5 சிறுவர்கள் , 4 சிறுமிகள்)

    செங்கோட்டை- 9 பேர்(8 சிறுவர்கள், 1 சிறுமி)

    திண்டுக்கல்- 6 பேர்(4 சிறுவர்கள், 2 சிறுமிகள்)

    தூத்துக்குடி- 6 சிறுவர்கள்

    விருதுநகர்-4 பேர் (3 சிறுவர்கள், 1 சிறுமி)

    மீட்கப்பட்ட முதல் 24 மணி நேரத்திற்கு குழந்தைகள் ரயில் நிலைய வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு, குழந்தைகள் நலக் குழுக்களிடம்(CWC) ஒப்படைக்கப்பட்டனர்.

    மதுரை

    குழந்தை உதவி மையங்கள் இயங்கும் இடங்கள்

    24 மணி நேரத்தில், குழந்தைகளின் பெற்றோரைக் கண்டுபிடித்து குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க ரயில்வே பாதுகாப்பு படை முயற்சிக்கும்.

    குழந்தைகள் CWCயிடம் ஒப்படைக்கப்பட்டதும், ஏதாவது பாதுகாப்புப் பிரச்சினைகளால் அவர்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியேறினார்களா என்பதை அந்த குழு ஆய்வு செய்து, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அந்த குழந்தைகளுக்கு சிறந்த பராமரிப்பு மற்றும் பாதுகாப்பை வழங்குவதற்காக ரயில்வே அமைச்சகம் டிசம்பர் 2021இல் நிலையான இயக்க நடைமுறையை(SOP) திருத்தியது.

    SOPக்கு இணங்க, இந்திய இரயில்வேயில் 143 ரயில் நிலையங்களில் குழந்தை உதவி மையங்கள்(CHDs) செயல்பட்டு வருகின்றன.

    மதுரை கோட்டத்தில், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் ராமேஸ்வரம் ஆகிய இடங்களில் CHDகள் உள்ளன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    ரயில்கள்
    இந்திய ரயில்வே

    சமீபத்திய

    ஆசியாவில் புதிய COVID-19 அலை பரவுகிறது? ஹாங்காங்கிலும் சிங்கப்பூரிலும் அதிகரிக்கும் பாதிப்புகள் கோவிட் 19
    சைபர் கிரைம்களில் இருந்து பயனர்களை பாதுகாக்க ஏஐ மூலம் இயங்கும் புதிய வசதியை அறிமுகம் செய்தது ஏர்டெல் ஏர்டெல்
    போர் நிறுத்தத்திற்கு இடையே பாகிஸ்தான் மீது ராஜதந்திர தாக்குதலை தீவிரப்படுத்தும் இந்தியா இந்தியா
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் விதைகளை இலவசமாக வழங்கும் இளம் விவசாயி மாவட்ட செய்திகள்
    சென்னையில் 65 வழித்தடங்களில் மட்டுமே தாழ்த்தள பேருந்துகள் இயக்க வாய்ப்பு - தமிழக அரசு சென்னை
    தமிழ்நாடு-தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆதாரை இணைப்பதில் சிக்கல் ஆதார் புதுப்பிப்பு
    கருணாநிதி நினைவிடத்தில் ரூ.80 லட்ச செலவில் அருங்காட்சியகம்-கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதி கருணாநிதி

    ரயில்கள்

    சுமூகமான ரயில் பயணத்திற்கு இந்த விதிகளை பின்பற்றவும்: IRCTC அறிவிப்பு பயணம்
    ரயிலில் அனுப்பப்படும் பார்ஸல்கள் இனி உங்கள் இல்லம் தேடி வரப்போகிறது பயனர் பாதுகாப்பு
    புதிய பொலிவுடன் பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் புதுப்பிப்பு
    பாம்பன் ரயில் தூக்குப்பாலத்தில் கோளாறு காரணமாக ராமேஸ்வரம் செல்லும் ரயில்கள் நிறுத்தம் தமிழ்நாடு செய்தி

    இந்திய ரயில்வே

    இந்தியாவிலேயே மிக நீளமான ஒரு சுரங்கப்பாதை ஜம்மு காஷ்மீரில்! இந்தியா
    இந்திய ரயில்வேயின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? 30 மில்லியன் பயனர்களின் தரவு நிலை என்ன? பயனர் பாதுகாப்பு
    பொங்கல் சிறப்பு ரயில்களின் பட்டியல் இதோ! பொங்கல் திருநாள்
    புக் செய்த ட்ரெயின் டிக்கெட்டின் தேதியை மாற்ற வேண்டுமா? விவரம் உள்ளே ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025