NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி 
    பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி

    பிரபலமான அவினாசி லிங்கேஸ்வரர் கோயிலில் திருட்டு முயற்சி 

    எழுதியவர் Nivetha P
    May 23, 2023
    05:38 pm

    செய்தி முன்னோட்டம்

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் மிகப்பிரசித்தி பெற்ற கோயில் லிங்கேஸ்வரர் கோயில் ஆகும்.

    இந்த கோயிலுக்கு உள்ளூர்மக்கள் மட்டுமல்லாமல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருவது வழக்கம்.

    இந்நிலையில் நேற்று(மே.,22)வழக்கம்போல் அர்ச்சகர்கள் பூஜைகளை முடித்துவிட்டு கோயிலினை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

    பின்னர் இன்று(மே.,23)காலை கோயிலினை திறந்து பார்த்தப்பொழுது கோயிலில் திருட்டு நடந்ததற்கான அறிகுறிகளை கண்டு அதிர்ச்சியடைந்த அர்ச்சகர்கள் உடனே அவினாசி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவயிடத்திற்கு வந்த காவல்துறை கோயிலினை சுற்றி ஆய்வுச்செய்தது.

    தொடர்ந்து, கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யார் என்று கண்டறிய சிசிடிவி காட்சிகளை ஆய்வுச்செய்தனர்.

    அதில் வாலிபர் ஒருவர் கலசத்தினை ஒவ்வொன்றாக உடைப்பதும், பின்னர் கருவறைக்குள் செல்லும் காட்சியும் பதிவாகியிருந்தது.

    அவரின் உருவத்தினை வைத்து காவல்துறையினர் அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

    திருட்டு 

    திருடுபோன பொருட்கள் குறித்த விவரங்கள் தெளிவாக இல்லை 

    மேலும் கோயிலில் காவல்துறை நடத்திய ஆய்வின் போது ராஜகோபுரத்தில் ஒரு வாலிபர் மறைந்திருந்தது தெரியவந்தது.

    அவர் ராஜகோபுரத்தில் திருடுவதற்காக எறியுள்ளார், இரவு நேரம் என்பதால் கீழே இறங்க முடியாமல் அங்கேயே பதுங்கி இருந்துள்ளார்.

    இவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ள நிலையில், உடன் வந்தோரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    அவினாசி லிங்கேஸ்வரர் உள்ள பிரதான கருவறையில் லிங்கத்தின் மேல் உள்ள அபிஷேக திரவியம் படும் வகையில் உள்ள தாராபாத்திரம் திருட முயற்சிக்கப்பட்டுள்ளது.

    அதனை கழற்ற முடியாத காரணத்தால், பிரதான கருவறையினை சுற்றியிருக்கும் நாயன்மார்களின் வஸ்திரங்கள், சிறு கலசங்கள், சுப்ரமணியர் சன்னதியில் இருந்த வேல், சேவல் கொடி ஆகியன திருடப்பட்டுள்ளது.

    விசாரணை முடிந்த பின்னரே திருடுபோன பொருட்கள் குறித்த முழு விவரங்கள் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பூர்
    கோவில்கள்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை சமூக வலைத்தளம்
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு

    கோவில்கள்

    தமிழகத்தில் 20 மாதங்களில் 444 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் - அறநிலையத்துறை அமைச்சர் தமிழ்நாடு
    பழனி முருகர் கோயில் தைப்பூசத் திருவிழா - தேரோட்டத்தை முன்னிட்டு குவியும் பக்தர்கள் தமிழ்நாடு
    தமிழக கோயில்களில் நடத்தப்படும் திருமணங்களுக்கான செலவினத்தொகை ரூ.50,000ஆக அதிகரிப்பு தமிழக அரசு
    பழனி முருகர் கோயில் உண்டியல் வசூல் - ரூ.7 கோடி வருவாய் திண்டுக்கல்

    காவல்துறை

    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman ஏஆர் ரஹ்மான்
    நடிகர் ஆர்.கே சுரேஷ் வங்கி கணக்கை முடக்கிய குற்றப்பிரிவு போலீசார்!  தமிழ்நாடு
    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தப்பட்டு கொலை  கோவை
    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு  சிபிசிஐடி

    காவல்துறை

    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  இந்தியா
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  தமிழ்நாடு
    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025