NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்

    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 29, 2023
    03:37 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டம்-அணைக்கட்டு பகுதி அத்திமரத்துக்கொல்லை என்னும் மலைக்கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தையினை பாம்பு கடித்துள்ளது.

    குழந்தையை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் சாலை வசதி சரிவர இல்லாததால் பாதி வழியிலேயே உடல் முழுவதும் விஷம் பரவி குழந்தை உயிரிழந்தது.

    தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அவசர ஊர்தியில் குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது.

    அப்போதும் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட 10கிமீ.,தொலைவிற்கு பெற்றோர்கள் குழந்தையின் உடலை சுமந்து நடந்தே சென்றுள்ளனர்.

    இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குழந்தை பலியானது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் அல்லேரி மலைக்கிராமத்திற்கு சென்றார்.

    ஆய்வு 

    வனத்துறை மற்றும் கிராம ஊரக வளர்ச்சி துறை இணைந்து ஆய்வு 

    அப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனை தொடர்ந்து, அவர் அல்லேரி மலை கிராமத்திற்கு என தனியாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றும், சாலை வசதிகள் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    இதன் பேரில், தற்பொழுது சாலை பணிகள் அமைக்கும் பணியானது உடனே துவங்கப்பட்டு நடந்து வருகிறது.

    அப்பகுதி வனத்துறை மற்றும் கிராம ஊரக வளர்ச்சி துறை இணைந்து தார் சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை

    சமீபத்திய

    இனியும் வெளிநாடுகளிடம் பிச்சை எடுக்க முடியாது; ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான்
    கருக்கலைப்பு மாத்திரையைக் கண்டுபிடித்த எட்டியென்-எமிலி பவுலியூ 98 வயதில் காலமானார் பிரான்ஸ்
    ஐபிஎல் 2025 எம்ஐvsபிபிகேஎஸ்: டாஸ் வென்றது பிபிகேஎஸ்; மும்பை இந்தியன்ஸ் முதலில் பேட்டிங் ஐபிஎல் 2025
    ரஷ்ய விமான தளங்களை குறிவைத்து உக்ரைன் ட்ரோன் தாக்குதல்; விமானங்களுக்கு சேதம் என தகவல் உக்ரைன்

    தமிழ்நாடு

    பால் பொருட்களை தொடர்ந்து, குடிநீர் விற்பனையில் இறங்குகிறது ஆவின்  தமிழக அரசு
    அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம் புதுச்சேரி
    'மக்களவை தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை': அண்ணாமலை அதிரடி அறிவிப்பு  பாஜக
    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் ஸ்விகி ஊழியர்கள் வேலைநிறுத்தம்  போராட்டம்

    அரசு மருத்துவமனை

    தமிழக அரசு மருத்துவமனைகளில் நாளை முதல் முகக்கவசம் கட்டாயம் - மா.சுப்ரமணியம் கொரோனா
    நாமக்கல் மாவட்டம் விஷ ஊசிப்போட்டு 300 பேர் கொலை?-அரசு மருத்துவமனையில் விசாரணை  தமிழ்நாடு
    தூத்துக்குடியில் கிராம நிர்வாக அதிகாரி படுகொலை - 4 தனிப்படை அமைப்பு  தூத்துக்குடி
    சேலம் அரசு மருத்துவமனை ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்திய அதிகாரிகள்  சேலம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025