NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 
    இந்தியா

    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 

    எழுதியவர் Nivetha P
    May 29, 2023 | 03:37 pm 1 நிமிட வாசிப்பு
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம் 
    வேலூரில் பாம்பு கடித்து குழந்தை உயிரிழப்பு - சாலையமைக்கும் பணிகள் துவக்கம்

    தமிழ்நாடு மாநிலம் வேலூர் மாவட்டம்-அணைக்கட்டு பகுதி அத்திமரத்துக்கொல்லை என்னும் மலைக்கிராமத்தில் ஒன்றரை வயது குழந்தையினை பாம்பு கடித்துள்ளது. குழந்தையை அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் சாலை வசதி சரிவர இல்லாததால் பாதி வழியிலேயே உடல் முழுவதும் விஷம் பரவி குழந்தை உயிரிழந்தது. தொடர்ந்து, பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்ல அவசர ஊர்தியில் குழந்தையின் உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அப்போதும் சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட 10கிமீ.,தொலைவிற்கு பெற்றோர்கள் குழந்தையின் உடலை சுமந்து நடந்தே சென்றுள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குழந்தை பலியானது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் பெ.குமரவேல் பாண்டியன் அல்லேரி மலைக்கிராமத்திற்கு சென்றார்.

    வனத்துறை மற்றும் கிராம ஊரக வளர்ச்சி துறை இணைந்து ஆய்வு 

    அப்பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், உயிரிழந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனை தொடர்ந்து, அவர் அல்லேரி மலை கிராமத்திற்கு என தனியாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றும், சாலை வசதிகள் செய்து தரப்படும் என்றும் உறுதியளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. இதன் பேரில், தற்பொழுது சாலை பணிகள் அமைக்கும் பணியானது உடனே துவங்கப்பட்டு நடந்து வருகிறது. அப்பகுதி வனத்துறை மற்றும் கிராம ஊரக வளர்ச்சி துறை இணைந்து தார் சாலைகள் அமைக்கும் பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  ஆர்ப்பாட்டம்
    வருமான வரிசோதனை விவகாரம் - 2 திமுக கவுன்சிலர்கள் உள்பட 10 பேர் கைது  திமுக
    தமிழ் ஆதீன குருமார்களுக்கு அமோக கவனிப்பு: மத்திய அரசு என்னென்ன செய்தது பாஜக
    '10ஆம் வகுப்பில் தோல்வியடைந்தேன்': திருப்பூர் மாவட்ட ஆட்சியரின் ஊக்கமளிக்கும் கதை  திருப்பூர்

    அரசு மருத்துவமனை

    மாவட்ட மருத்துவமனைகளை மேம்படுத்துவதற்கான அரசின் புதிய திட்டம்!  இந்தியா
    சென்னை அருகே அமைச்சர் கார் மோதி மனைவி கண்முன்னே கணவர் பலி சென்னை
    சிவகாசி பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 2 பேர் பலி  காவல்துறை
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  காவல்துறை
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023