NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு
    அது அரசின் சொத்து எனவும், அதனால் அவற்றை அரசின் வசம் ஒப்படைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது

    சோனியா காந்தி வசம் இருக்கும் நேருவின் கடிதங்களை திரும்ப கேட்ட மத்திய அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Dec 16, 2024
    10:25 am

    செய்தி முன்னோட்டம்

    பிரதமர்கள் அருங்காட்சியகம் மற்றும் நூலகம் (PMML) கடந்த 2008 ஆம் ஆண்டு யுபிஏ ஆட்சியின் போது சோனியா காந்திக்கு அனுப்பிய இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு கைப்பட எழுதிய தனிப்பட்ட கடிதங்களை, மீண்டும் திரும்ப தருமாறு முறைப்படி கோரியுள்ளது.

    அது அரசின் சொத்து எனவும், அதனால் அவற்றை அரசின் வசம் ஒப்படைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து எழுதப்பட்ட கடிதத்தில், PMML உறுப்பினர் ரிஸ்வான் காத்ரி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், சோனியா காந்தியிடமிருந்து அசல் கடிதங்களை மீட்டெடுக்க வேண்டும் அல்லது புகைப்பட நகல் அல்லது டிஜிட்டல் நகல்களை வழங்குமாறு வலியுறுத்தினார்.

    செப்டம்பரில் சோனியா காந்தியிடமே இது போன்ற கோரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    விவரங்கள்

    கடந்த ஆட்சிக்காலத்தில் சோனியா காந்தியிடம் வழங்கப்பட்ட கடிதங்கள் அடங்கிய பெட்டி

    மாபெரும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் இந்த கடிதங்கள், 1971ஆம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு நினைவகத்தால் நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலகத்திடம் (தற்போது PMML) ஒப்படைக்கப்பட்டன.

    அவை 51 பெட்டிகளில் அடைக்கப்பட்டு, 2008 இல் சோனியா காந்திக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    எந்த காரணத்தினால் அவை சோனியா காந்தியிடம் ஒப்புவிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

    இந்த கடிதங்களில், பண்டித நேருவிற்கும், எட்வினா மவுண்ட்பேட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஜெயப்பிரகாஷ் நாராயண், பத்மஜா நாயுடு, விஜய லக்ஷ்மி பண்டிட், அருணா ஆசஃப் அலி, பாபு ஜக்கிவன் ராம் மற்றும் கோவிந்த் பல்லப் பந்த் போன்ற முக்கிய பிரமுகர்களுக்கு இடையேயான நடந்த கடிதப் பரிமாற்றங்கள் இந்தத் தொகுப்பில் அடங்கும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    சோனியா காந்தி
    பிரதமர்
    பிரதமர் மாளிகை

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    மத்திய அரசு

    100 நாள் வேலைத்திட்ட நாட்கள் அதிகரிப்பு; மத்திய அரசு தகவல் இந்தியா
    2025இல் சென்சஸ் கணக்கெடுப்பு தொடக்கம்; 2028க்குள் எம்பி தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டம் மக்களவை
    அக்டோபர் மாத ஜிஎஸ்டி வசூல் 8.9 சதவீதம் அதிகரிப்பு; மத்திய நிதியமைச்சகம் தகவல் ஜிஎஸ்டி
    நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும் எனத் தகவல் நாடாளுமன்றம்

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு கர்நாடகா

    பிரதமர்

    4 நாள் பயணமாக மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரதமர் மோடி
    நாளை தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி; முழு பயணம் திட்டம் பிரதமர் மோடி
    "நன்றி சென்னை.. இன்றைய நாள் சிறப்பான நாள்": சென்னை ரோடு ஷோ குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி பதிவு பிரதமர் மோடி
    சல்மான் கான் வீட்டில் துப்பாக்கி சூடு எதிரொலி: பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்த சினிமா தொழிலாளர்கள் அமைப்பு சல்மான் கான்

    பிரதமர் மாளிகை

    ஏப்ரல் 22: இந்தியாவில் டெஸ்லாவின் தொழில் திட்டங்களை பற்றி அறிவிக்கிறார் எலான் மஸ்க் டெஸ்லா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025