NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO
    அடுத்த செய்திக் கட்டுரை
    EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO

    EPF வட்டி விகிதத்தை உயர்த்தியது EPFO

    எழுதியவர் Sindhuja SM
    Feb 10, 2024
    05:35 pm

    செய்தி முன்னோட்டம்

    ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) 2023-24 ஆம் ஆண்டிற்கான வருங்கால வைப்பு நிதியின்(EPF) வட்டி விகிதத்தை 8.25% ஆக உயர்த்தியுள்ளது.

    மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையிலான EPFO ​இன் மத்திய அறங்காவலர் குழு, அந்த அமைப்பின் 235வது குழு கூட்டத்தில் முன்மொழியப்பட்ட வட்டி விகிதத்திற்கு ஒப்புதல் அளித்தது.

    "இந்திய தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது " என்று அமைச்சர் பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இந்தியா

    நிதி அமைச்சகம் அங்கீகரித்த பின்பு EPF ​​வட்டி விகிதம் வழங்கப்படும் 

    2023-24ஆம் ஆண்டின் EPF டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதம் இனி ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும்.

    அரசாங்கத்தின் ஒப்புதலைத் தொடர்ந்து, 2023-24க்கான EPF வட்டி விகிதம் கிட்டத்தட்ட ஆறு கோடி EPFO ​​சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.

    நிதி அமைச்சகம் அங்கீகரித்த பின்பு தான் EPFO ​​வட்டி விகிதம் வழங்கப்படும்.

    EPF என்பது சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான கட்டாய வைப்பு நிதி கணக்காகும்.

    வேலை வழங்கும் முதலாளிகள் கண்டிப்பாக சம்பளத்துடன் சேர்த்து ஒரு ஊழியருக்கு EPF தொகையையும் வழங்க வேண்டும்.

    ஒரு ஊழியரின் வருவாயில் 12% அவரது EPF கணக்கில் செலுத்தப்படும். அப்படி ஒவ்வொரு மாதமும் சேரும் தொகை EPF கணக்கில் வைப்பு வைக்ப்படும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பங்களாதேஷில் ஷேக் ஹசீனா மீது மனித குலத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் பதிவு பங்களாதேஷ்
    வடகிழக்கு இந்தியாவில் பெய்துவரும் கனமழையால் 25 பேர் பலி; மீட்பு மற்றும் நிவாரண பணிகள் தீவிரம் கனமழை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜூன் 2) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றம்; கட்சியில் இரண்டு புதிய அணிகள் உருவாக்கம் திமுக

    இந்தியா

    இந்தியாவில் மேலும் 290 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 6 பேர் பலி கொரோனா
    பிரபல கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு: உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினார் ராகுல் காந்தி  காங்கிரஸ்
    அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை உத்தரப்பிரதேசம்
    இந்தியாவில் மேலும் 203 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025