NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்?
    பூமியின் சராசரி வெப்பநிலை 1.1°Cஆக உயர்ந்துள்ளது

    காலநிலை மாற்றம்: தமிழகம் எப்படி பாதிக்கப்படும்?

    எழுதியவர் Sindhuja SM
    Mar 27, 2023
    06:59 pm

    செய்தி முன்னோட்டம்

    காலநிலை மாற்றத்தால் பூமி அதிகமாக பாதிப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், இதனால் தமிழகத்தில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பற்றி ஆராய்ச்சியாளர் அஞ்சல் பிரகாஷ் கூறியுள்ளார்.

    காலநிலை மாற்றத்திற்கான பன்னாட்டுக் குழுவால் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கை, புதைபடிம எரிபொருள் பயன்பாட்டாலும், பசுமை இல்ல வாயுவின் உமிழ்வாலும் பூமியின் சராசரி வெப்பநிலை 1.1°Cஆக உயர்ந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

    இந்த வெப்பநிலை உயர்வால் வெள்ளம், வறட்சி, கனமழை, புயல் போன்ற பேரழிவுகள் அடிக்கடி ஏற்பட்டு உலக சூழலையும் மக்களையும் பாதிக்கும் என்று இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.

    இந்த அறிக்கையை உருவாக்குவதில் பங்களித்த பாரத் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் பாசிலி என்ற நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான அஞ்சல் பிரகாஷ், காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசி இருக்கிறார்.

    இந்தியா

    ஆராய்ச்சியாளர் அஞ்சல் பிரகாஷ் கூறி இருப்பதாவது:

    தமிழகத்தில் ஏற்கனவே தண்ணீர் தட்டுப்பாடு அதிகம் இருக்கும் நிலையில், காலநிலை மாற்றத்தால் இது இன்னும் அதிகரிக்கக்கூடும். இதனால் விவசாயமும் மனித வாழ்க்கையும் பெரிதளவில் பாதிக்கப்படும்.

    காலநிலை மாற்றத்தால் இனி அடிக்கடி புயல், வெள்ளம் போன்ற பேரிடர்கள் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது, இதனால், உள்கட்டமைப்பு வசதிகளில் அதிக சேதம் ஏற்படும்.

    தமிழகம் விவசாய தொழில் சார்ந்த மாநிலமாக இருப்பதால், மழைப்பொழிவு இல்லாமல் விவசாயிகள் அதிகம் சிரமப்பட வாய்ப்பிருக்கிறது.

    தமிழகத்தில் அதிக கடலோர மாவட்டங்கள் இருக்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படும், கடல் மட்ட உயர்வு, கடல் அரிப்பு போன்றவற்றால் கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். உள்கட்டமைப்பு வசதிகளும் சேதப்படுத்தப்படும். என்று தெரிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    தமிழ்நாடு

    வானிலை அறிக்கை: மார்ச் 21- மார்ச் 25 புதுச்சேரி
    தமிழக வேளாண் பட்ஜெட்'டினை தாக்கல் செய்தார் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் பட்ஜெட் 2023
    விழுப்புரம் அன்புஜோதி ஆசிரம வழக்கு - ஜாமீன் கோரி 7 நிர்வாகிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் விழுப்புரம்
    ஈரோடு இடைத்தேர்தல் அதிகாரி உள்பட முக்கிய அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு ஈரோடு

    இந்தியா

    கிரிசில் ரேட்டிங் வெளியிட்ட சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் முதலீட்டு திட்டங்கள்
    வாட்ஸ்அப் டெஸ்க்டாப் வீடியோ கால் வசதி! புதிய அம்சங்கள் என்ன? வாட்ஸ்அப்
    ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம்: அடுத்து என்ன நடக்கும் ராகுல் காந்தி
    கடும் பனி மற்றும் குளிரில் ரோந்து சென்ற BSF வீரர்: இணையவாசிகள் பாராட்டு ஜம்மு காஷ்மீர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025