NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் விலை மதிப்பற்ற சிலைகள் மீட்பு! இது முதல் முறையல்ல!
    அடுத்த செய்திக் கட்டுரை
    அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் விலை மதிப்பற்ற சிலைகள் மீட்பு! இது முதல் முறையல்ல!
    3-வது முறையாக 14 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது

    அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் வீட்டில் விலை மதிப்பற்ற சிலைகள் மீட்பு! இது முதல் முறையல்ல!

    எழுதியவர் Arul Jothe
    May 16, 2023
    01:24 pm

    செய்தி முன்னோட்டம்

    அமெரிக்காவில் வசிக்கும் பெண்ணின் சென்னை வீட்டில்14 சிலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன, இது மூன்றாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    சென்னை ராஜாஅண்ணாமலைபுரம் பகுதியில் வசிக்கும் சோபா துரைராஜனின் கணவர் அமெரிக்காவில் வேலை செய்கிறார்.

    இவரும் அமெரிக்காவில் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதம், பழங்கால சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

    உடனே வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது 17 பழங்கால சிலைகள் கைப்பற்றப்பட்டது.

    மீண்டும் 2-வது முறையாக ஏப்ரல் 19-ந்தேதி அதே வீட்டில் 55 கற்சிலைகள் கைப்பற்றப்பட்டன.

    3-வது முறையாக நேற்று முன்தினம் போலீசார் அடங்கிய தனிப்படையினர் சோதனை மேற்கொண்டனர். அதில், 14 உலோகச் சிலைகள், தஞ்சாவூர் ஓவியங்கள் மற்றும் மரச்சிற்பங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.

    Idols Scam

    சென்னைக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும்

    இந்த பழங்கால சிலைகளை, தீனதயாளன் என்ற பிரபல சிலைக்கடத்தல் குற்றவாளியிடம் வாங்கியதாக தெரியவந்துள்ளது.

    கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை விலை கொடுத்து சிலைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்கியதாகவும், இதை வெளிநாடுகளுக்கு கடத்தி சென்று விற்பது நோக்கமல்ல என்றும் சோபா துரைராஜன் தெரிவித்துள்ளார்.

    அமெரிக்காவில் இருக்கும் அவர் சென்னைக்கு வந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் ஆஜராக வேண்டும், என்று அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

    இவற்றை விற்பனை செய்த தீனதயாளன் தற்போது இறந்துவிட்டார்.

    அதனால் இவை எந்த கோவில்களில் திருடப்பட்டவை என்பது குறித்த விவரங்கள் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    சோபா துரைராஜன் சென்னை வந்த பிறகு விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    அமெரிக்கா

    சமீபத்திய

    அனுஷ்கா ஷெட்டி- விக்ரம் பிரபுவின் 'காட்டி' ஜூலை 11 அன்று வெளியாகிறது திரைப்படம்
    அமெரிக்காவில் தற்காலிகமாக மின்சார வாகன உற்பத்தியை நிறுத்திய வால்வோ கார் நிறுவனம்; காரணம் என்ன? மின்சார வாகனம்
    நாங்களும் அனுப்புவோம் என இந்தியாவிற்கு போட்டியாக வெளிநாடுகளுக்கு பிரதிநிதிகளை அனுப்பிய பாகிஸ்தான் பாகிஸ்தான்
    முழு விளம்பர பிரச்சாரங்களை உருவாக்கும் மெட்டாவின் AI கருவி அடுத்த ஆண்டு வெளியாகிறது! மெட்டா

    இந்தியா

    தேசிய தொழில்நுட்ப தினம்: ரூ.5,800 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி  பிரதமர் மோடி
    ஒரே பாலின உறவுகள் குற்றமற்றது: இந்தியாவை முன்னுதாரணமாக எடுத்துக்கொண்ட இலங்கை இலங்கை
    சத்தீஸ்கரில் திருமண மேடையில் நடனம் ஆடிக்கொண்டிருந்தவர் மயக்கமிட்டு மரணம்  மாரடைப்பு
    உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டி : கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றது இந்தியா! உலக கோப்பை

    அமெரிக்கா

    அமெரிக்க பண்ணையில் பெரும் தீ விபத்து: 18,000+ மாடுகள் உயிரிழப்பு உலகம்
    டைட்டானிக் நினைவு தினம்: தெரிந்ததும் தெரியாததும் உலகம்
    வடகொரியாவுக்கு பதிலடி: தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான் இணைந்து நடத்தும் ஏவுகணை பயிற்சிகள் உலகம்
    கறுப்பின சிறுவனை துப்பாக்கியால் சுட்ட அமெரிக்கர்: தவறான கதவை தட்டியதால் நேர்ந்த விபரீதம் உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025