NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு
    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு

    கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கை ஓய்வுபெற்ற நீதிபதி விசாரிக்க கோரிக்கை - மாணவியின் தாயார் மனு

    எழுதியவர் Nivetha P
    Feb 22, 2023
    06:31 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழக மாநிலம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்த 12ம்வகுப்பு மாணவி மர்மமான முறையில் கடந்த 2022ம்ஆண்டு ஜூலை 13ம்தேதி மரணமடைந்தார்.

    இவரது மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

    இதனால் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்திவருகிறது.

    இந்நிலையில், இந்த வழக்கினை ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தனி புலனாய்வுகுழு அமைக்கப்பட்டு விசாரிக்கவேண்டும் மரணமடைந்த மாணவியின் தாயார் செல்வி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

    அந்த மனுவில், சிபிசிஐடி போலீசார் நடத்தும் விசாரணை நியாயமாக இல்லை என்றும், கொலை குற்றச்சாட்டின்கீழ் இன்னும் இந்த வழக்கு பதிவிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

    கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஆதாரங்களை அவர்கள் மறைப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    வழக்கு ஒத்திவைப்பு

    காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விளக்கம்

    மேலும் அந்த மனுவில், கண்காணிப்பு கேமரா பதிவுகளை தனக்கு காண்பிக்கவில்லை என்றும், சம்பவம் நடந்த இடம், அதன் ஆதாரங்கள் அனைத்தும் தடையம் தெரியாத அளவிற்கு முழுமையாக மாற்றப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்னே விசாரணைக்கு வந்தது.

    அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவியின் செல்போன் தடயவியல் ஆய்வு அறிக்கையை பெற்ற பின்னர் இறுதி அறிக்கை தாக்கல் செய்வதற்கு இந்த நீதிமன்றம் நான்கு வார கால அவகாசம் வழங்கியுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

    இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி மாணவியின் தாயார் தாக்கல் செய்த மனுவை ஏற்கனவே நிலுவையில் உள்ள மனுவோடு இணைத்து விசாரணையை அடுத்த மாதம் 8ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை உயர் நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    தமிழ்நாடு

    திருத்தணியில் வனத்துறையினர் சார்பில் வளர்க்கப்படும் 45,000 மரக்கன்றுகள் மாவட்ட செய்திகள்
    மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பொதுமக்கள் தரிசனத்திற்கு தடையில்லை மதுரை
    ஒரு மில்லியன் டாலர் நிதியை திரட்டும் வீட்டு உணவு சந்தையான குக்ர் நிறுவனம் சென்னை
    இன்று கோவை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு கோவை

    சென்னை உயர் நீதிமன்றம்

    மின் வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு இந்தியா
    மனநலம் பாதித்தவர்களுக்கான 55 மறுவாழ்வு மையங்கள்-நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    கள்ளக்குறிச்சி பள்ளியில் 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இயங்க அனுமதி இந்தியா
    கொடைக்கானலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை - ஆட்சியருக்கு உத்தரவு இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025