NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை
    இந்தியா

    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை

    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை
    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023, 11:16 am 0 நிமிட வாசிப்பு
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை

    திருப்பூரில் தங்கி பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், திருப்பூர் பனியன் ராக்ஸ் சங்க நிர்வாக தலைவர் லியாகத் அலி, துணை தலைவர் புகழ் வேந்தன் ஆகியோர் மனு அளித்துள்ளார்கள். அந்த மனுவில், தங்கள் சங்கத்தில் 1,500க்கும் மேற்பட்ட மறுசுழற்சி முறையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபத்தில் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வீடியோக்கள் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது. இதனால் அச்சமடைந்த வடமாநிலத்தவர்கள் வேலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

    மேலும் இதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது என்றும், தமிழக தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குகிறார்கள் என்ற தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்கள். இதனை தொடர்ந்து, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும். அவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை அழைத்து காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., அண்மையில் நடத்திய தொழிற்சங்க கூட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அந்த கூட்டத்தில் மொழி பிரச்சனை காரணமாக வடமாநிலத்தவர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று பொருளாளர் கோபால்சாமி பேசியது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    திருப்பூர்
    சமூக வலைத்தளம்

    திருப்பூர்

    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை
    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறுவது ஹோலி பண்டிகைக்காக, வேறு பிரச்சனை இல்லை தமிழ்நாடு
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை

    சமூக வலைத்தளம்

    பழைய இந்திய நாணயங்களின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட ஐஏஎஸ் அதிகாரி வைரல் செய்தி
    தன் பெற்றோருக்கு பெரியளவு உருவப்படத்தை பரிசளித்த இளம்பெண் - வைரல் வீடியோ வைரல் செய்தி
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு! ரயில்கள்
    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சென்னை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023