NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை
    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை

    திருப்பூரில் வசிக்கும் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த கோரிக்கை

    எழுதியவர் Nivetha P
    Mar 02, 2023
    11:16 am

    செய்தி முன்னோட்டம்

    திருப்பூரில் தங்கி பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட ஆட்சியர் சு.வினீத்திடம், திருப்பூர் பனியன் ராக்ஸ் சங்க நிர்வாக தலைவர் லியாகத் அலி, துணை தலைவர் புகழ் வேந்தன் ஆகியோர் மனு அளித்துள்ளார்கள்.

    அந்த மனுவில், தங்கள் சங்கத்தில் 1,500க்கும் மேற்பட்ட மறுசுழற்சி முறையில் செயல்படும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது.

    இதில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பலர் பணிபுரிந்து வருகிறார்கள்.

    சமீபத்தில் வாட்ஸ் அப், முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் வடமாநில தொழிலாளர்களை தாக்குவது போன்ற வீடியோக்கள் அதிகமாக பரப்பப்பட்டு வருகிறது.

    இதனால் அச்சமடைந்த வடமாநிலத்தவர்கள் வேலையை விட்டுவிட்டு தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    கோரிக்கை மனு

    திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

    மேலும் இதனால் தங்கள் தொழில் பாதிக்கப்படுகிறது என்றும், தமிழக தொழிலாளர்கள், வடமாநில தொழிலாளர்களை தாக்குகிறார்கள் என்ற தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் அந்த மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்கள்.

    இதனை தொடர்ந்து, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழல் உள்ளது என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    அவர்கள் மத்தியில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, திருப்பூரில் வடமாநில தொழிலாளர்களை அழைத்து காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., அண்மையில் நடத்திய தொழிற்சங்க கூட்டம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அந்த கூட்டத்தில் மொழி பிரச்சனை காரணமாக வடமாநிலத்தவர் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்படுகிறார்கள் என்று பொருளாளர் கோபால்சாமி பேசியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திருப்பூர்
    சமூக வலைத்தளம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திருப்பூர்

    திருமணத்துக்கு வற்புறுத்தல்: காதலியை உயிரோடு தீ வைத்து கொளுத்திய காதலன் தமிழ்நாடு
    திருப்பூரில் வாடகை வீடு எடுத்து கள்ளநோட்டு அச்சடிப்பு-வனத்துறை அதிகாரியாக நடித்தவர் கைது காவல்துறை

    சமூக வலைத்தளம்

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை
    சித்தமருத்துவர் ஷர்மிகா மீது புகார்-இந்திய மருத்துவ இயக்குனரகம் நோட்டிஸ் மருத்துவ ஆராய்ச்சி
    சித்த மருத்துவர் ஷர்மிகா விசாரணைக்காக கல்லூரி அலுவலகத்தில் நேரில் ஆஜர் சென்னை
    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் உணவு மிக அருமை! சமூகவியலாளர் சால்வடோர் பாபோன்ஸ் பதிவு! ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025