NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்
    தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்

    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்திசிலை அருகே தான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா கொண்டாடப்படும்.

    ஆனால் இந்தாண்டு அங்கு மெட்ரோ ரயில் கட்டுமானபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதால் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறவுள்ளது.

    கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு இந்தாண்டு நடக்கும் இந்தவிழா பெருமளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதற்காக உழைப்பாளர் சிலை அருகே உள்ள பகுதிகளில் பிரம்மாண்டமான முறையில் பந்தல்கள் போடப்பட்டு வருகிறது. அங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பலமுக்கிய பிரமுகர்கள் அமருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

    இதனையடுத்து காலை 7.52 மணிக்கு முதல்வர் வருகை தருவார் என்று கூறப்படுகிறது.

    தேசியகீதம் இசைப்பு

    தேசிய கொடியை ஏற்றி வைக்கும் ஆளுநர் - மாலை ஆளுநர் மாளிகையில் குடியரசு தினவிழா

    அதனைதொடர்ந்து, 7.54மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தனது மனைவியுடன் வருகை தருவார், அவரை தமிழக முதல்வர் வரவேற்பார்.

    இதனைதொடர்ந்து, காலை 8மணிக்கு தேசியகொடியை, தேசியகீதம் இசைக்கப்படும் பொழுது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஏற்றி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது.

    அப்பொழுது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்துவந்து மலர் தூவும். பின்னர் பல்வேறு படை அணியினர் செலுத்தும் வணக்கங்களை ஆளுநர் ஏற்றுக்கொள்வார்.

    தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட படைபிரிவினர் அணிவகுத்து செல்வார்கள்.

    அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதக்கங்களை உரியவர்களுக்கு அளிப்பார்.

    இதனையடுத்து அன்று மாலை 4.30மணிக்கு ஆளுநர்மாளிகையில் குடியரசு தினவிழா நடைபெறும்.

    அங்கு அனைவரையும் ஆளுநரும் அவர் மனைவியும் வரவேற்பார்கள்.

    தேநீர்விருந்து முடிந்தபின்னர், ஆளுநர் சிலவிருதுகளை உரியவருக்கு வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குடியரசு தினம்
    மெரினா கடற்கரை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    குடியரசு தினம்

    குடியரசு தின விழா 2023: டெல்லியில் நடைபெறப்போகும் 'R-Day Parade','The Beating Retreat' விழா பற்றி தகவல்கள் இந்தியா

    மெரினா கடற்கரை

    மாண்டஸ் புயல்: மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பாதை உடைந்தது மகாபலிபுரம்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025