NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்
    இந்தியா

    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்

    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்
    எழுதியவர் Nivetha P
    Jan 24, 2023, 04:23 pm 1 நிமிட வாசிப்பு
    குடியரசு தின விழா - உழைப்பாளர் சிலை அருகே தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர்
    தேசியக்கொடி ஏற்றுகிறார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள காந்திசிலை அருகே தான் ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா கொண்டாடப்படும். ஆனால் இந்தாண்டு அங்கு மெட்ரோ ரயில் கட்டுமானபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பதால் மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே குடியரசு தின விழா நடைபெறவுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு பிறகு இந்தாண்டு நடக்கும் இந்தவிழா பெருமளவில் கொண்டாட முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக உழைப்பாளர் சிலை அருகே உள்ள பகுதிகளில் பிரம்மாண்டமான முறையில் பந்தல்கள் போடப்பட்டு வருகிறது. அங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், தலைமை நீதிபதிகள், வெளிநாட்டு தூதர்கள் உள்பட பலமுக்கிய பிரமுகர்கள் அமருவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து காலை 7.52 மணிக்கு முதல்வர் வருகை தருவார் என்று கூறப்படுகிறது.

    தேசிய கொடியை ஏற்றி வைக்கும் ஆளுநர் - மாலை ஆளுநர் மாளிகையில் குடியரசு தினவிழா

    அதனைதொடர்ந்து, 7.54மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தனது மனைவியுடன் வருகை தருவார், அவரை தமிழக முதல்வர் வரவேற்பார். இதனைதொடர்ந்து, காலை 8மணிக்கு தேசியகொடியை, தேசியகீதம் இசைக்கப்படும் பொழுது ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஏற்றி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. அப்பொழுது இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்துவந்து மலர் தூவும். பின்னர் பல்வேறு படை அணியினர் செலுத்தும் வணக்கங்களை ஆளுநர் ஏற்றுக்கொள்வார். தொடர்ந்து, 30க்கும் மேற்பட்ட படைபிரிவினர் அணிவகுத்து செல்வார்கள். அதன்பின்னர் அணிவகுப்பு மேடைக்கு சென்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் பதக்கங்களை உரியவர்களுக்கு அளிப்பார். இதனையடுத்து அன்று மாலை 4.30மணிக்கு ஆளுநர்மாளிகையில் குடியரசு தினவிழா நடைபெறும். அங்கு அனைவரையும் ஆளுநரும் அவர் மனைவியும் வரவேற்பார்கள். தேநீர்விருந்து முடிந்தபின்னர், ஆளுநர் சிலவிருதுகளை உரியவருக்கு வழங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    மெரினா கடற்கரை
    குடியரசு தினம்

    சமீபத்திய

    இந்த வாரம், வெள்ளித்திரையிலும், OTT தளத்திலும் வெளியாக போகும் படங்கள் என்னென்ன? ஓடிடி
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்: வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் சாதனை டி20 கிரிக்கெட்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் இந்தியா

    மெரினா கடற்கரை

    சென்னையில் கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் - கருத்து கேட்புக்கூட்டத்தில் சீமான் எச்சரிக்கை கருணாநிதி
    பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் 235 டன் குப்பைகள் அகற்றம் சென்னை
    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு கமலஹாசன்
    நம்ம சென்னையில், மெரினா கடற்கரையையும் பெசன்ட் நகரையும் இணைக்க வரப்போகிறது ரோப் கார் சென்னை

    குடியரசு தினம்

    74வது குடியரசு தினம்-புனரமைக்கப்பட்ட கர்தவ்யா பாதையில் முதல்முறையாக அணிவகுப்புகள் டெல்லி
    பிரதமர் மோடி மற்றும் எகிப்திய ஜனாதிபதியின் டெல்லி சந்திப்பு: முக்கிய முடிவுகளை எடுத்த இரு நாடுகள் நரேந்திர மோடி
    74வது குடியரசு தின கொண்டாட்டம்-டெல்லி ராஜபாதையில் ஜனாதிபதி தேசிய கொடியேற்றினார் பிரதமர் மோடி
    பத்ம விருதுகள் 2023: தமிழகத்தில் விருது பெற்றவர்கள் பற்றிய விவரங்கள் பத்மஸ்ரீ விருது

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023