NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    மோப்ப நாய்கள் கொண்டு வாகன சோதனை

    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023
    04:17 pm

    செய்தி முன்னோட்டம்

    நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

    இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாத கூட்டம் சதி திட்டம் தீட்டுவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது என்று கூறப்படுகிறது.

    இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் பெருமளவில் எடுக்கப்பட்டு வருகிறது.

    விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, தலைநகர் டெல்லி முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இது குறித்து குடியிருப்பு மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய போலீசார், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்கள்.

    அதன்படி, வாடகைதாரர்கள், வேலையாட்கள் போன்றோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன.

    மோப்பநாய்கள் கொண்டு சோதனை

    சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு 19ம் தேதி முதல் அமலில் உள்ளது

    ஆங்காங்கே தொடர்சோதனைகள் நடத்தப்படுவதோடு, எல்லை பகுதிகளில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு கடந்த 19ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

    விமான நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மோப்ப நாய்கள் உதவியோடு சோதனை செய்யப்படுகிறது.

    துப்பாக்கி ஏந்திய போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடக்டர்களுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள்.

    மேலும், விமான எரிபொருள் நிரப்பும் இடத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் 24,25,26ம் தேதிகளில் 5 அடுக்கில் இருந்து 7அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படுவதோடு, 30ம்தேதி நள்ளிரவுவரை இந்த பாதுகாப்புகள் அமலில் இருக்கும் என்றும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி 55% உயர்ந்து, பெட்ரோலியம், வைர விற்பனையை முந்தியது ஸ்மார்ட்போன்
    2005 பெங்களூரு, 2006 நாக்பூர் தாக்குதல்கள் உட்பட இந்தியாவின் 3 பெரிய தாக்குதல்களுக்குக் காரணமான லஷ்கர் பயங்கரவாதி கொலை லஷ்கர்-இ-தொய்பா
    சாப்ட்வேர் என்ஜினீயர்களின் ஊதிய ஆதிக்கம் நீடிக்காது என்று எச்சரிக்கும் ஜோஹோவின் ஸ்ரீதர் வேம்பு செயற்கை நுண்ணறிவு
    அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது: IMD  வானிலை ஆய்வு மையம்

    இந்தியா

    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் தமிழ்நாடு
    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு தமிழ்நாடு
    தொடர்ந்து இரண்டாவது நாளில் தங்கம் விலை சரிவு! வாங்க சரியான நேரம்; வணிக செய்தி
    ஓடும் பைக்கில் காதல் செய்த ஜோடி: வீடியோ வைரலானதால் போலீஸில் சிக்கினர் இந்தியா

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025