NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    இந்தியா

    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    எழுதியவர் Nivetha P
    Jan 21, 2023, 04:17 pm 0 நிமிட வாசிப்பு
    நாட்டின் 74வது குடியரசு தின விழா கொண்டாட்டம் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
    மோப்ப நாய்கள் கொண்டு வாகன சோதனை

    நாட்டின் 74வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி மிக சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்க தீவிரவாத கூட்டம் சதி திட்டம் தீட்டுவதாக மத்திய உளவுத்துறைக்கு தகவல் வந்துள்ளது என்று கூறப்படுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் நாடு முழுவதும் பெருமளவில் எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தலைநகர் டெல்லி முழுவதும் பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது குறித்து குடியிருப்பு மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய போலீசார், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்துள்ளார்கள். அதன்படி, வாடகைதாரர்கள், வேலையாட்கள் போன்றோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்படுகின்றன.

    சென்னை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு 19ம் தேதி முதல் அமலில் உள்ளது

    ஆங்காங்கே தொடர்சோதனைகள் நடத்தப்படுவதோடு, எல்லை பகுதிகளில் போராட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்று டெல்லி போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலும் 5 அடுக்கு பாதுகாப்பு கடந்த 19ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. விமான நிலையங்களுக்கு வரும் வாகனங்கள் அனைத்தும் மோப்ப நாய்கள் உதவியோடு சோதனை செய்யப்படுகிறது. துப்பாக்கி ஏந்திய போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடக்டர்களுடன் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளார்கள். மேலும், விமான எரிபொருள் நிரப்பும் இடத்தில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 24,25,26ம் தேதிகளில் 5 அடுக்கில் இருந்து 7அடுக்கு பாதுகாப்பாக அதிகரிக்கப்படுவதோடு, 30ம்தேதி நள்ளிரவுவரை இந்த பாதுகாப்புகள் அமலில் இருக்கும் என்றும் விமானநிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    இந்தியா
    சென்னை

    சமீபத்திய

    ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த பொன்னியின் செல்வன் 2 ட்ரைலர், வெளியானது திரைப்பட அறிவிப்பு
    ஆண்டுக்கு ரூ.5000 முதலீட்டில் 66,000 லாபம்! சிறந்த 5 மியூச்சுவல் ஃபண்ட்கள் சேமிப்பு திட்டங்கள்
    ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தி திணிப்பு - தமிழக முதல்வர் எச்சரிக்கை இந்தியா
    இன்ஸ்ட்டாகிராமில் பிரபலமான 9 வயது சிறுமியின் விபரீத முடிவு இன்ஸ்டாகிராம்

    இந்தியா

    UPI கட்டணம்: வாடிக்கையாளர்கள் பணம் செலுத்த வேண்டாம்! NPCI நிறுவனர் விளக்கம் தொழில்நுட்பம்
    நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைக்கு பிறந்த 4 குட்டிகள் மத்திய பிரதேசம்
    'சீக்கியர்களே ஒன்றுபடுங்கள்': வீடியோவை வெளியிட்ட அம்ரித்பால் சிங் காலிஸ்தான் ஆதரவாளர்கள்
    2021 வரை 472 கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது: மத்திய அரசு நாடாளுமன்றம்

    சென்னை

    சென்னையில் மது அருந்தாதவரை அருந்தியதாக காட்டிய ப்ரீத் அனலைசர் மிஷின் விவகாரம் - போக்குவரத்து கூடுதல் ஆணையர் விளக்கம் போக்குவரத்து காவல்துறை
    மதுரை மெட்ரோ - விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது மதுரை
    சென்னையில் 1 கோடி மதிப்பிலான நகைகளை பறித்து சென்ற வழக்கு - உண்மை அம்பலமானது தமிழ்நாடு
    மீண்டும் உயர்வை நோக்கி சென்ற தங்கம் விலை - விலை விபரங்கள் தங்கம் வெள்ளி விலை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023