NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

    மணிப்பூரில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 21, 2024
    10:48 am

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் உள்ள 11 வாக்குச் சாவடிகளில் ஏப்ரல் 22ஆம் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என மணிப்பூர் தலைமைத் தேர்தல் அதிகாரி ந்தெரு அறிவித்தார்.

    ஏப்ரல் 19-ம் தேதி இந்த வாக்குச் சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் செல்லாது என்று அறிவித்த தேர்தல் ஆணையம், புதிய வாக்குப்பதிவை திட்டமிட உத்தரவிட்டதை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    குரை தொகுதியில் உள்ள மொய்ராங்காம்பு சஜேப் மற்றும் தொங்கம் லைகாய் வாக்கு சாவடிகள், இம்பால் கிழக்கு மாவட்டத்தில் உள்ள நான்காவது வாக்கு சாவடி, தோங்ஜுவில் உள்ள ஒரு வாக்குச் சாவடி, உரிபோக்கில் உள்ள மூன்று வாக்கு சாவடிகள் மற்றும் இம்பால் மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் நாளை மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

    மணிப்பூர் 

    47 வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் 

    ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் போது, துப்பாக்கிச் சூடு, மிரட்டல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேதம் மற்றும் வாக்குச்சாவடி கைப்பற்றப்பட்டது போன்ற வன்முறை சம்பவங்கள் மணிப்பூரில் நடந்ததால் இந்த 11 வாக்கு சாவடிகளில் மீண்டும் வாக்கு பதிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி உள் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு மக்களவைத் தொகுதிகளில் 72 சதவீத வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.

    மணிப்பூரில் 47 வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டதாகவும், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும் கூறி மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    மணிப்பூர்

    'இத்தனை நாட்களாக காவல்துறை என்ன செய்து கொண்டிருந்தது?': மணிப்பூர் விவகாரம் குறித்து உச்சநீதிமன்றம் கேள்வி  மத்திய அரசு
    'மணிப்பூரில் சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது': உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    மணிப்பூர் விவகாரம்: எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க ஒப்புக்கொண்டார் குடியரசு தலைவர் முர்மு  திரௌபதி முர்மு
    மணிப்பூர் வன்முறை: 3 மாதங்களில் காணாமல் போன 30 பேர்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025