NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்'
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்'
    பி.வி.சதீஷ் தனது 77 வயதில் காலமானார்.

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்'

    எழுதியவர் Sindhuja SM
    Mar 26, 2023
    11:00 am

    செய்தி முன்னோட்டம்

    டெக்கான் டெவலப்மென்ட் சொசைட்டியின்(DDS) நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குனரான 'தெலுங்கானாவின் சிறுதானிய மனிதர்' பெரியபட்னா வெங்கடசுப்பையா சதீஷ் உடல் நலக்குறைவால் 19 மார்ச் 2023அன்று காலமானார்.

    பி.வி.சதீஷ் ஹைதராபாத்தில் உள்ள ஒரு பெரிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 77 வயதில் உயிரிழந்தார்.

    மறுநாள் காலை, தெலுங்கானாவின் ஜஹீராபாத் பகுதியில் உள்ள சங்கரெட்டி மாவட்டத்தின் (முன்னர் மேடக் மாவட்டத்தின் ஒரு பகுதி) பாஸ்தாபூர் கிராமத்தில் அவரது இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

    1980களின் முற்பகுதியில், சதீஷ், இரண்டு நண்பர்களுடன் சேர்ந்து, தெலுங்கானாவின் கிராமப்புற பகுதியான ஜஹீராபாத்தில் DDSஐ நிறுவினார்.

    அதன்மூலம், 75 கிராமங்களில் உள்ள தலித் மற்றும் ஆதிவாசி சமூகங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அவர் முக்கிய பங்கு வகித்தார்.

    இந்தியா

    சோள பயிர்களை மீட்டெடுத்த அமைப்பு

    இந்தப் பெண்களை 'சங்கங்களாக' ஒன்றிணைத்த, DDS அமைப்பானது, பசி, ஊட்டச்சத்து குறைபாடு, பல்லுயிர் பாதுகாப்பு, பாலின நீதி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பை மேம்படுத்தும் பல்வேறு திட்டங்களை முன்மொழிந்தது

    சோள பயிர்களை மீட்டெடுப்பதையே இந்த திட்டங்கள் அடிப்படையாக கொண்டிருந்தன. அதிக லாபம் தரும் அரிசி, கோதுமை மற்றும் கரும்பை விட சோளம் மிகவும் ஆரோக்கியமானது. மேலும், இது தெலுங்கானாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தனியமாகும்.

    சதீஷ், நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த இலாப நோக்கற்ற அமைப்பிற்கு தலைமை தாங்கி வந்தார்.

    காலப்போக்கில், இவர் நிலையான விவசாயம், பல்லுயிர் பெருக்கம் மற்றும் சிறுதானியத்தை ஊக்குவித்தல் போன்ற காரணங்களுக்காக MINI, SAGE, SANFEC போன்ற பல தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களை வழிநடத்தினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    தெலுங்கானா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    மல்லையாவிடம் கடனை அடைக்க தேவையான ரூ. 7,500 கோடி இருந்தது: CBI இந்தியா
    தடை செய்யப்பட்டும் இந்தியர்களின் தகவல்களை திருடுகிறதா? டிக்டாக்! தொழில்நுட்பம்
    எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்படுவாரா: நிபுணர்களின் கருத்து ராகுல் காந்தி
    ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பிற்கான கால அவகாசம் நீட்டிப்பு ஆதார் புதுப்பிப்பு

    தெலுங்கானா

    முதலமைச்சருக்கு ஷூவை பரிசாக வழங்கி சவால் விட்ட பெண் ஆந்திரா
    தெலுங்கானா-புதிதாக கட்டப்பட்ட தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து ஆந்திரா
    மதுபான ஊழலில் தெலுங்கானா முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் ஒருவர் கைது ஆந்திரா
    ஹைதெராபாத்தில் 5 வயது சிறுவனை கடித்து கொன்ற தெரு நாய்கள் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025