NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள்
    செய்தி அறிந்து விரைந்து வந்த களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் பிற காவலர்கள், மூதாட்டியிடம் விசாரித்தனர்.

    உயிருள்ள மூதாட்டியை சுடுகாட்டில் வீசிச் சென்ற உறவினர்கள்

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    06:28 pm

    செய்தி முன்னோட்டம்

    நெல்லை மாவட்டத்தில் உள்ள களக்காடு என்ற ஊரில் உயிருடன் இருந்த மூதாட்டியை உறவினர்களே சுடுகாட்டில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் மூணாற்று பிரிவில் சுடுகாடு ஒன்று இருக்கிறது.

    நேற்று அந்த சுடுகாடு அருகே ஒரு வயதான மூதாட்டி கட்டிலில் உட்கார்ந்திருந்தது பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

    அந்த பகுதி மக்கள் இது குறித்து விசாரித்த போது, மூதாட்டியின் உறவினர்களே அவரை சுடுகாட்டில் விட்டு சென்றது தெரிய வந்திருக்கிறது.

    இதை அறிந்த அப்பகுதி மக்கள், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    செய்தி அறிந்து விரைந்து வந்த களக்காடு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி மற்றும் பிற காவலர்கள், மூதாட்டியிடம் விசாரித்தனர்.

    நெல்லை

    மூதாட்டியை அடித்து லோடு ஆட்டோவில் ஏற்றிய உறவினர்கள்

    அப்போது, அந்த மூதாட்டி களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரத்தை சேர்ந்தவர் என்பதும் அவரது பெயர் இசக்கியம்மாள் (80) என்பதும் தெரியவந்தது.

    இசக்கியம்மாளின் கணவர் உயிரிழந்ததால் அவர் தனது மகன் கந்தசாமியின் பராமரிப்பில் இருந்திருக்கிறார்.

    திடீரென்று அவரது மகனும் உயிரிழந்துவிடவே, இசக்கியம்மாளை அவரது மகனின் இரு மனைவிகள் கவனித்து வந்தனர்.

    இசக்கியம்மாளும் அவரால் முடிந்த வேலையை பார்த்து பிழைத்த வந்திருக்கிறார்.

    ஆனால், வயதாக ஆக அவரால் உழைத்து உண்ண முடியவில்லை.

    மேலும், அவருக்கு உடல்நல குறைவும் ஏற்பட்டிருக்கிறது. இதனால் அவர் உறவினர்களால் கைவிடப்பட்டு சுடுகாட்டில் வீசப்பட்டார்.

    அவரது உறவினர்கள் அவரை அடித்து லோடு ஆட்டோவில் கட்டிலோடு ஏற்றி சுடுகாட்டில் வீசிவிட்டனர்.

    இதனை அறிந்த அப்பகுதி மக்கள் தாங்களே அந்த மூதாட்டியை கவனித்து கொள்வதாக தெரிவித்திருக்கின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திருநெல்வேலி

    சமீபத்திய

    சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு: இன்றைய சரிவுக்கு முக்கிய காரணங்கள் சென்செக்ஸ்
    ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு இப்போது கூகிளின் 100 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் இலவசமாகக் கிடைக்கிறது ஏர்டெல்
    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா

    தமிழ்நாடு

    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் பள்ளி மாணவர்கள்
    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும் கொரோனா
    ஐஸ்வர்யா வீட்டில் கொள்ளை அடித்த காரணத்தை கூறிய பெண்; அதிர்ச்சி அடைந்த போலீசார் தமிழக காவல்துறை
    எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழக வீராங்கனைக்கு நிதியுதவி வழங்கிய உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின்

    திருநெல்வேலி

    திருநெல்வேலியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் ஓட்டுநர் உரிமம் ரத்து - ஆர்.டி.ஓக்கு மாநகர போலீசார் பரிந்துரை மாவட்ட செய்திகள்
    திருநெல்வேலியில் காதல் திருமணம் செய்த இளம்பெண் கடத்தல் - பெற்றோருக்கு வலைவீச்சு தமிழ்நாடு
    வட மாநில தொழிலாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் ஸ்டாலின்
    நெல்லை மாவட்டத்தில் பங்குனி உத்திரத்திருவிழா முன்னிட்டு ஏப்ரல் 5ம் தேதி உள்ளூர் விடுமுறை உள்ளூர் செய்தி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025