NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு
    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    ஜம்மு காஷ்மீர் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் தயார்: உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்த மத்திய அரசு

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 31, 2023
    12:17 pm

    செய்தி முன்னோட்டம்

    "ஜம்மு காஷ்மீரில் எப்போது வேண்டுமானாலும் தேர்தலை நடத்தலாம், ஆனால் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில தேர்தல் குழுதான் அது பற்றி முடிவு எடுக்க வேண்டும்" என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு இன்று தெரிவித்துள்ளது.

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, அரசு தரப்பில் இது கூறப்பட்டது.

    ஜம்மு காஷ்மீர் தனித்துவமான மாநிலம் என்றும், அரசாங்க காரணங்களுக்காக அது பிரிக்கப்பட வேண்டும் என்பது மத்திய அரசு முன்வைத்த வாதம்.

    செவ்வாயன்று நடந்த கடைசி விசாரணையில், ஜூன் 2018 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் என்பது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இல்லை எனவும், அங்கிருக்கும் மக்களின் ஜனநாயகத்தை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியது.

    card 2

    மாநில அந்தஸ்து கோரும் லடாக் 

    இதுவரை நடைபெற்ற வாதங்களில், சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து, இந்த மாநிலத்தை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கும் போது சரியான நடைமுறை பின்பற்றப்பட்டதா என்பது தான் முக்கியமாக இடம்பெற்றது.

    லடாக் யூனியன் பிரதேசமாகவே இருக்கும் என்ற சொலிசிட்டர் ஜெனரலின் அறிக்கைக்கு லடாக்கைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் மனுதாரர்கள் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

    கடந்த இரண்டு ஆண்டுகளாக, லடாக் பகுதிக்கு மாநில அந்தஸ்து கோரி மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பதும் அங்கே குறிப்பிடப்பட்டது.

    சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, சரியான நேரத்தில் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதாக மத்திய அரசு கூறியிருந்தது. ஆனால் நேற்றைய விவாதத்திலும், இதற்கான காலக்கெடுவை மத்திய அரசு கூறவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஜம்மு காஷ்மீர்
    தேர்தல்
    மத்திய அரசு
    உச்ச நீதிமன்றம்

    சமீபத்திய

    ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 150 விக்கெட்டுகள்; எஸ்ஆர்எச் வீரர் ஹர்ஷல் படேல் சாதனை ஐபிஎல்
    ஆகஸ்ட் 29 அன்று நடிகர் விஷால்- நடிகை சாய் தன்ஷிகா திருமணம்; யோகி டா படவிழாவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விஷால்
    தேச நலனுக்காக செலிபி நிறுவனத்தின் உரிமம் ரத்து; டெல்லி உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதம் உயர்நீதிமன்றம்
    திடீர் உடல் எடை அதிகரிப்புக்கு பொதுவான காரணங்கள்; நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? எடை அதிகரிப்பு

    ஜம்மு காஷ்மீர்

    இந்தியா முழுவதும் பத்திரிகை சுதந்திரம் பறிபோகலாம்: அனுராதா பாசின் இந்தியா
    பயனவாதிகளுக்கு நிதி வழங்கல்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு இடங்களில் NIA ரெய்டு இந்தியா
    ஸ்ரீ நகரில் பிரதமர் அலுவலக உயரதிகாரி என கூறி இ இசட் பாதுகாப்போடு வந்தவர் கைது பிரதமர் மோடி
    ஜம்மு காஷ்மீர் - புனித குர்ஆனை 4 மாதங்களில் தனது கையால் எழுதி முடித்த கல்லூரி மாணவி வைரல் செய்தி

    தேர்தல்

    ஈரோடு இடைத்தேர்தல் - வாக்காளர்களுக்கு ஸ்மார்ட் வாட்ச் விநியோகம் ஈரோடு
    ஈரோடு இடைத்தேர்தலை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி - சென்னை உயர்நீதிமன்றம் ஈரோடு
    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ஈரோடு
    நாகாலாந்தின் முதல் பெண் எம்எல்ஏ: வரலாறு படைத்தார் ஹெகானி ஜகாலு இந்தியா

    மத்திய அரசு

    தக்காளியை அடுத்து வெங்காயத்தின் விலையும் உயர வாய்ப்பு  இந்தியா
    உயிரிழந்த பென்ஷன்தாரர்களுக்கு தவறுதலாக ரூ.2 கோடி ஓய்வூதியம் வழங்கிய மத்திய அரசு  இந்தியா
    வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைக்காததற்கான அபராதம்: ரூ.21,000 கோடி வசூல்  வங்கிக் கணக்கு
    ஆன்லைன் கேமிங் வரி விதிப்பு தொடர்பான புதிய சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது அமைச்சரவை ஜிஎஸ்டி

    உச்ச நீதிமன்றம்

    அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் தலையிட உச்ச நீதிமன்றம் மறுப்பு  செந்தில் பாலாஜி
    தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலை - கழிவுகளை அகற்றும் பணி துவங்கியது  தூத்துக்குடி
    இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பதவிக் காலம் நீட்டிப்பு  இந்தியா
    மணிப்பூர் கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரு வார அவகாசம் வழங்கியது உச்சநீதிமன்றம்  மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025