NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    ₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா
    ரூ.500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா

    ₹500 கோடியை அதிகம் அறியப்படாத நபருக்கு உயில் எழுதி வைத்த ரத்தன் டாடா; யார் இந்த மோகினி மோகன் தத்தா

    எழுதியவர் Sekar Chinnappan
    Feb 07, 2025
    11:09 am

    செய்தி முன்னோட்டம்

    சமீபத்தில் வெளியிடப்பட்ட மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடா உயில் அவரது நெருங்கிய கூட்டாளிகளை திகைக்க வைத்துள்ளது.

    இதற்கு காரணம் அவர் ₹500 கோடி, அதாவது தனது எஞ்சிய சொத்துக்களில் மூன்றில் ஒரு பங்கை, தன்னுடன் இருந்தவரும், அதிகம் அறியப்படாத பயணத் துறையில் தொழில்முனைவோருமான மோகினி மோகன் தத்தா என்பவருக்கு கொடுத்துள்ளதுதான்.

    ஜாம்ஷெட்பூரை சேர்ந்த மோகினி மோகன் தத்தா, டாடாவுடன் நீண்டகால உறவுகளைக் கொண்டிருந்தார்.

    அவரது குடும்பம் முன்பு ஸ்டாலியன் என்ற பயண நிறுவனத்தை நடத்தி வந்தது. இது பின்னர் 2013இல் தாஜ் குழும ஹோட்டல்களின் ஒரு பகுதியான தாஜ் சர்வீசஸ் உடன் இணைக்கப்பட்டது.

    இணைவதற்கு முன்பு, தத்தாவின் குடும்பம் 80% ஸ்டாலியன் பங்குகளை கட்டுப்படுத்தியது, டாடா இண்டஸ்ட்ரீஸ் மீதியை வைத்திருந்தது.

    பின்னணி

    மோகினி மோகன் தத்தாவின் பின்னணி

    முன்பு தாமஸ் குக்குடன் இணைந்த டிசி டிராவல் சர்வீசஸ் நிறுவனத்தில் இயக்குனராகவும் மோகினி மோகன் தத்தா பணியாற்றினார்.

    தத்தா ரத்தன் டாடாவுடன் ஆறு தசாப்த கால பந்தத்தை பகிர்ந்து கொண்டதாக டாடா இன்சைடர்ஸ் கூறியதாக தி எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

    டாடாவை முதன்முதலில் ஜாம்ஷெட்பூரில் 24 வயதில் தத்தா சந்தித்தார், பின்னர் அவர் ரத்தன் டாடாவின் நம்பிக்கைக்குரியவராக மாறினார்.

    அக்டோபர் 2024ல் நடந்த டாடாவின் இறுதிச் சடங்கில் தத்தா பகிரங்கமாகப் பேசினார், மேலும் டிசம்பரில் நடந்த டாடாவின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளுக்கும் அழைக்கப்பட்டார்.

    அறக்கட்டளை

    அறக்கட்டளை பணிகள்

    இந்த எதிர்பாராத உயில் இருந்தபோதிலும், அறக்கட்டளை நற்பணிகள் டாடாவின் உயிலில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

    ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளை மற்றும் ரத்தன் டாடா எண்டோமென்ட் டிரஸ்ட் மூலம் அவரது செல்வத்தின் பெரும்பகுதி தொண்டு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    பயனாளிகள் என பெயரிடப்பட்டுள்ள அவரது ஒன்றுவிட்ட சகோதரிகள், தங்கள் பங்குகளை தொண்டு நிறுவனங்களுக்கு வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்தியாவின் செல்வாக்கு மிக்க வணிகத் தலைவர்களில் ஒருவரான ரத்தன் டாடா, அக்டோபர் 2024 இல் தனது 86வது வயதில் காலமானார்.

    இந்தியாவின் மிகப்பெரிய கூட்டு நிறுவனங்களில் ஒன்றான டாடா குழுமம், ஆண்டு வருவாயாக $100 பில்லியனுக்கும் மேல் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ரத்தன் டாடா
    இந்தியா
    டாடா
    வணிக செய்தி

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் தொடர்புடைய உளவு வழக்கு தொடர்பாக எட்டு மாநிலங்களில் 15 இடங்களில் என்ஐஏ சோதனை என்ஐஏ
    தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரி 2025 ஆம் ஆண்டின் உலக அழகியாக தேர்வு மிஸ் வேர்ல்ட்
    11 ஆண்டுகளுக்குப் பிறகு அண்ணன் அழகிரி வீட்டிற்குச் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; செங்கோல் வழங்கி வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்

    ரத்தன் டாடா

    "ரத்தன் டாடா ஜி என்னுடைய தனிப்பட்ட ஹீரோ": ரத்தன் டாடா மறைவிற்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன் கமல்ஹாசன்
    ரத்தன் டாடா மறைவுக்குப் பின் டாடா குழுமத்தை வழிநடத்தப் போவது யார்? சூடுபிடித்த வாரிசு விவாதம் டாடா
    இந்தியா-சீனா போரால் காதலியை இழந்த ரத்தன் டாடா; திருமணம் செய்யாததன் பின்னணி இதுதான் டாடா
    'நல்ல கல்வி... ஓய்வு வரை சம்பளம்': 26/11 பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ரத்தன் டாடா உதவியது எப்படி? இந்தியா

    இந்தியா

    புல்வாமாவில் உள்ள டிரயல் சவுக்கில் முதன்முறையாக குடியரசு தினத்தில் இந்தியக் கொடியேற்றம் குடியரசு தினம்
    உலக நாடுகளை விட 44% அதிக சைபர் கிரைம்களை எதிர்கொள்ளும் இந்தியா சைபர் கிரைம்
    ஒரே நாடு ஒரே நேரத்திற்கான வரைவு விதிகளை வெளியிட்டது மத்திய அரசு மத்திய அரசு
    இந்திய இசையில் மேற்கு-கிழக்கை ஒருங்கிணைத்த வயலின் இசைக்கலைஞர்; பத்ம விபூஷன் விருது வென்ற எல் சுப்ரமணியம் விருது

    டாடா

    ஆப்பிளின் இலக்கை எட்ட ஓசூர் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்யும் டாடா எலெக்ட்ரானிக்ஸ் ஆப்பிள்
    வைரலாகும் நாராயண மூர்த்தியின் டீப்ஃபேக் வீடியோ, பொதுமக்களை எச்சரிக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
    ரூ.11 லட்சத்துக்கு இந்தியாவில் வெளியானது டாடா பஞ்ச் EV டாடா மோட்டார்ஸ்
    இந்தியாவில் பஞ்ச் EVயின் டெலிவரிகளை தொடங்கியது டாடா மோட்டார்ஸ்  டாடா மோட்டார்ஸ்

    வணிக செய்தி

    Blinkit '10 நிமிடங்களில் ஆம்புலன்ஸ்' சேவையைத் தொடங்கியது; இந்த நகரத்தில் தான் முதல் அறிமுகம்  வணிகம்
    இந்தியாவில் ஹெல்த் இன்சூரன்ஸ் க்ளெய்ம் நிராகரிப்புகள் 50% உயர்வு: மறுப்புக்கான முக்கிய காரணங்கள் இன்ஷூரன்ஸ்
    பொருளாதார பின்னடைவு இருந்தாலும் இந்தியாவின் வளர்ச்சி தொடரும்; டாடா குழும தலைவர் என்.சந்திரசேகரன் நம்பிக்கை டாடா
    இனி ஓயோ நிறுவன ஹோட்டல்களில் திருமணமாக ஜோடிகளுக்குத் தடை; இந்த நகரில் மட்டும் ஹோட்டல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025