NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
    அடுத்த செய்திக் கட்டுரை
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை
    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

    மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்த அரிய வகை குரங்குகள் - திருப்பியனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

    எழுதியவர் Nivetha P
    Mar 22, 2023
    02:26 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமானநிலையத்துக்கு மலேசிய தலைநகரான கோலாலம்பூரில் இருந்து பயணிகள் விமானம் வந்தது.

    அதில் வந்த பயணிகளை சுங்கஇலாகா அதிகாரிகள் பரிசோதனை செய்துகொண்டிருந்த போது தமிழகத்தை சேர்ந்த 2 பயணிகளை கண்டு சந்தேகப்பட்டுள்ளார்கள்.

    இதனால் அவர்களை நிறுத்தி விசாரணை செய்துள்ளனர்.

    அப்போது அவர்கள் அதிகாரிகளிடம் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்கள்.

    இதனையடுத்து அவர்கள் உடமைகளை சோதனைசெய்தனர்.

    அப்போது அவர்கள் வைத்திருந்த கூடையில் உயிருள்ள பொருள் ஏதோ அசைவதுபோல் தெரியவந்துள்ளது.

    அந்த கூடையை திறந்துப்பார்த்தப்பொழுது அதில் அரியவகை உயிரினங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    அதில் மத்தியஆப்ரிக்காவிலுள்ள சதுப்புநில காடுகளில் வசிக்கும் டி பிரஸ்ஸாவின் குரங்கு, நைஜீரியா, கென்யா, உகாண்டா போன்ற நாடுகளில் வாழும் சிலந்தி குரங்கு என கூறப்படும் 4அரியவகை குரங்குக்குட்டிகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்கள்.

    அதிகாரிகள் முடிவு

    அனுமதி உள்ளிட்ட எந்தவகை சான்றிதழும் வைத்திருக்கவில்லை என தகவல்

    இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, அந்த குரங்குக்குட்டிகளை வளர்க்க எடுத்து வந்துள்ளதாக கூறியுள்ளார்கள்.

    ஆனால் அதற்கான அனுமதி சான்றிதழோ, விலங்குகளுக்கு மருத்துவ சோதனை செய்ததற்கான சான்றிதழோ அவர்களிடம் இல்லை.

    மேலும் இதுபோன்று வெளிநாட்டுகளில் இருந்து விலங்குகளை கொண்டு வர சர்வதேச வனவிலங்குகள் பாதுகாப்பு துறையின் தடையில்லா சான்றிதழும்வேண்டும், ஆனால் அதுவும் இல்லை.

    இந்திய வனவிலங்கு துறை அனுமதி வழங்கிய சான்றிதழும் இருக்க வேண்டும் என கூறப்படும் நிலையில் எந்த ஆவணங்களும் இல்லை.

    இதனால் அந்த 4 குரங்கு குட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

    இது அரிய வகை குரங்கு வகையினை சேர்ந்தது என்பது தெரியவந்த நிலையில், அதனை மீண்டும் மலேசியாவிற்கே திருப்பியனுப்ப அதிகாரிகள் முடிவு செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    சென்னை
    விமானம்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    இந்தியா

    உலகளவில் அதிகார பொறுப்பில் இருந்த பெண் தலைவர்கள் ஓர் பார்வை உலகம்
    பிஎஸ்என்எல்-இன் அற்புதமான ரூ. 87 திட்டம் - இவ்வளவு சலுகைகளா? பிஎஸ்என்எல்
    இந்திய-ஜப்பான் உச்சிமாநாடு: டெல்லிக்கு வந்திருக்கும் ஜப்பான் பிரதமர் ஜப்பான்
    இனி மஹிந்திரா ஆட்டம் தான் - அடுத்தடுத்து வெளியாகும் புதிய கார்கள் மஹிந்திரா

    சென்னை

    தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன் மு.க ஸ்டாலின்
    சென்னையில் இணையதளத்தை பயன்படுத்தி ஸ்டாம்ப் போதை பொருள் விற்பனை - 4 பேர் கைது சமூக வலைத்தளம்
    சென்னை மற்றும் கொல்கத்தாவில் கடல்மட்டம் உயரும் அபாயம் தமிழ்நாடு
    VIT பல்கலைக்கழகத்தின் விழா ஒன்றில் பங்கேற்ற பாடகர் பென்னி தயாள், ட்ரோன் தாக்கி காயம் பாடகர்

    விமானம்

    இந்திய விமானப்படையின் இரண்டாவது பெண் பைலட்-உத்தரப்பிரேதேசத்தை சேர்ந்த சானியா மிர்ஸா தேர்வு இந்தியா
    டுகாட்டி மோட்டார் சைக்கிள்கள் விலை, ஜனவரி 1, 2023 முதல் உயரும் மோட்டார்
    கிறிஸ்துமஸ் சிறப்பு சாண்டா விமானம்! எமிரேட்ஸின் ஏ-380 விமானம் ரெய்ண்டீரால் இயக்கப்படும் வீடியோ வைரல் வானூர்தி
    கனவா நிஜமா: 2023 இல் வருகிறது eVTOL இன் புதிய பறக்கும் எலக்ட்ரிக் கார் எலக்ட்ரிக் கார்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025