NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்
    பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்

    பா.ஜ.க.,வில் இணைந்தார் ராஜாஜியின் கொள்ளுப்பேரன் கேசவன்

    எழுதியவர் Nivetha P
    Apr 08, 2023
    05:19 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவிலேயே முதன்முதலாக கவர்னர்ஜெனரல் பதவியினை வகித்தவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.ராஜகோபாலாச்சாரி.

    இவரது கொள்ளுப்பேரனான சி.ஆர்.கேசவன் காங்கிரஸ் கட்சியில் ஒரு அங்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 23ம்தேதி கட்சிலிருந்து விலகினார்.

    இதுகுறித்து அவர் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் ஒன்றினையும் எழுதியுள்ளார்.

    அதில்அவர், காங்கிரஸ் கட்சியில் எண்ணற்ற பதவிகளை வகித்ததற்காக கட்சிக்கும், சோனியா காந்திஜிக்கும் நன்றி.

    அர்ப்பணிப்புடன் கடந்த 2 தசாப்தங்களாக நான் கட்சியில் பணியாற்றியதற்கான மதிப்பிற்குரிய விஷயங்களின் அடையாளங்கள் தற்போது இல்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.

    அதனால் தான் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்காமல் ஒதுங்கியிருந்தேன்.

    ஒரு அரசியல் தளத்தின் மூலம் நாட்டுக்கு சேவையாற்றவேண்டும் என நல்ல நம்பிக்கையில் முயற்சி செய்யவுள்ளேன் என்று தெரிவித்திருந்தார்.

    ட்விட்டரில் பதிவு

    பாஜக.வில் இணைந்தார் கேசவன்

    இதனையடுத்து தற்போது காங்கிரசில் இருந்து விலகிய ராஜாஜியின் கொள்ளு பேரனும், முன்னாள் காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான கேசவன் அவர்கள் இன்று(ஏப்ரல்.,8) பாஜக'வில் இணைந்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், உலகின் மிகப்பெரிய அரசியல் கட்சியான பா.ஜ.க.வில் என்னை சேர்த்துக்கொண்டதற்கு, அதுவும் மோடி தமிழகத்தில் இருக்கும் பொழுது, உங்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.

    முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய மந்திரியான ஏ.கே.அந்தோணியின் மகன் அணில் அந்தோணி அவர்களும் காங்கிரஸில் இருந்து விலகி பாஜக.வில் தன்னை இணைத்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    காங்கிரஸ்
    பாஜக

    சமீபத்திய

    ஐபிஎல் 2025 மீண்டும் தொடங்கினாலும் மிட்செல் ஸ்டார்க் வரமாட்டார் என இதர தகவல்; ஆஸ்திரேலிய வீரர்களும் தவிர்க்க வாய்ப்பு ஐபிஎல் 2025
    சிரஞ்சீவியுடன் நடிக்கும் படத்திற்கு நயன்தாராவின் சம்பளம் இவ்வளவா? நயன்தாரா
    போர் நிறுத்தத்திற்குப் பிறகு, வாரத்தின் முதல்நாளில் வளர்ச்சியுடன் தொடங்கிய இந்திய பங்குச் சந்தைகள் பங்குச் சந்தை
    எல்லை மற்றும் கடலோர கண்காணிப்புக்காக எந்நேரமும் இயங்கும் 10 செயற்கைக்கோள்கள்; இஸ்ரோ தலைவர் வெளியிட்ட தகவல் இஸ்ரோ

    காங்கிரஸ்

    வைரல்: ராகுல் காந்தி பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ இந்தியா
    பிரதமர் மோடி பற்றி பேசிய கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரெஸ்: காட்டத்தில் பாஜக இந்தியா
    முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள்: மாபெரும் எதிர்கட்சிகள் கூட்டமாக மாறுமா தமிழ்நாடு
    ராஜாஜியின் கொள்ளுப்பேரன் காங்கிரஸ் கட்சியிலிருந்து சி.ஆர்.கேசவன் விலகல் இந்தியா

    பாஜக

    ஜார்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநர் மாளிகை
    மேகாலயாவில் பிரதமர் மோடியின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு பிரதமர் மோடி
    சமூக அமைதியை கெடுப்பதே பா.ஜ.க.வின் நோக்கம் - 28ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் விசிக
    மீண்டும் எமர்ஜென்சி கதவு அருகில் அமர்ந்து பயணம் செய்த அண்ணாமலை தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025