NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு 
    உதவி தேவைப்படும் மக்கள் கீழுள்ள தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

    சென்னையில் கனமழை, வெள்ளம்: பள்ளிகள் மூடல், அவசர கால எண்கள் அறிவிப்பு 

    எழுதியவர் Sindhuja SM
    Nov 30, 2023
    08:35 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து, சென்னை, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும், திருவள்ளூரில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள பல தாழ்வான பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது.

    சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூரில் உள்ள பல தெருக்கள் முழங்கால் அளவு தண்ணீர் வெள்ளத்தால் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

    மேலும், தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

    மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவி பெற சென்னை மாநகராட்சி ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது.

    எனவே, உதவி தேவைப்படும் மக்கள் கீழுள்ள தொலைபேசி எண்களை உடனடியாக தொடர்பு கொள்ளலாம்.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை வெள்ளத்திற்கான ஹெல்ப்லைன் எண்கள்

    Dear #Chennaiites
    You can call us at 1913 for any grievance or flood related help.
    Also please note down the other landline numbers.
    We are #HereToServe you.#ChennaiCorporation#ChennaiRains#ChennaiRain pic.twitter.com/zoZIqyJCc3

    — Greater Chennai Corporation (@chennaicorp) November 29, 2023

    தவ்க்ப்கஜ்

    வங்கக்கடலில் உருவாகும் புயலால் சென்னை பகுதிகளில் கனமழை.

    தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது.

    அதன்பிறகு, அது டிசம்பர் 2-ம் தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் காரணமாக, சென்னை மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    டிசம்பர் 2 மற்றும் டிசம்பர் 3 ஆகிய தேதிகளில், சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் முன்பு தெரிவித்திருந்தது.

    ஜிப்பினையூக்கி

    தயார் நிலையில் பேரிடர் மீட்புப் படைகள் 

    புயல் எச்சரிக்கையை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 5 தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று அதிகாரிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற யூனியன் பிரதேசங்களிலும் அடுத்த ஐந்து நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 4 வரை இடியுடன் கூடிய மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    தண்ணீர் தேங்கியதால் மூடப்பட்டுள்ள சுரங்கப்பாதைகளின் விவரங்கள் 

    Dear #Chennaiites, excluding the Rangarapuram 2-wheeler subway, all other subways are now clear for traffic. #GCC shares it's gratitude to the dedicated workers who worked tirelessly last night to prevent waterlogging.#ChennaiCorporation | #ChennaiRains | #HereToServe pic.twitter.com/mhYlHapKFU

    — Greater Chennai Corporation (@chennaicorp) November 30, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு
    கனமழை
    வெள்ளம்

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    சென்னை

    தமிழக காங்கிரஸ் தலைவராக விரும்பும் கார்த்தி சிதம்பரம்  காங்கிரஸ்
    திரையுலகம் சார்பில் கலைஞர்100- ரஜினிக்கு நேரில் அழைப்பு விடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் கலைஞர் கருணாநிதி
    தனி நபருக்காக இயக்கப்பட்ட ரயில் - சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி  ரயில் நிலையம்
    இனி சென்னையில் போன்பே மூலமே மெட்ரோ ரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும், எப்படி? போன்பே

    தமிழ்நாடு

    காரணம் இல்லாமல் ஆளுநர் திருப்பி அனுப்பிய 10 மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றியது தமிழக சட்டசபை தமிழக அரசு
    11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி
    சூரசம்ஹாரம் 2023: திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவிந்த பக்தர்கள்  திருச்செந்தூர்
    12 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  புதுச்சேரி

    கனமழை

    திடீரென அதிகரித்த ஒக்கனேக்கல் நீர் வரத்து  கர்நாடகா
    13 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு  தமிழ்நாடு
    கன்னியாகுமரியில் கனமழை காரணமாக வெள்ளம் - பாதுகாப்பான இடத்திற்கு மக்கள் மாற்றம்  வெள்ளம்
    தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்  வானிலை ஆய்வு மையம்

    வெள்ளம்

    வெள்ளத்தில் இமாச்சலப் பிரதேசம்: கடும் மழையால் மக்கள் அவதி  ஹிமாச்சல பிரதேசம்
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  பருவமழை
    வட இந்தியாவில் தொடரும் கனமழை: இமாச்சல் மற்றும் உத்தரகாண்டுக்கு ரெட் அலெர்ட்  ஹிமாச்சல பிரதேசம்
    டெல்லி: யமுனை நீர்மட்ட உயர்வால் வெள்ளத்தில் தத்தளிக்கும் வீடுகள்  டெல்லி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025