NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை
    இந்தியா

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை
    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023, 03:14 pm 0 நிமிட வாசிப்பு
    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை
    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்கதிர்களும், நாகை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் தலா 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்களும் வயலில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். குறிப்பாக மயிலாடுதுறையில் சம்பா சாகுபடி கடந்த நவம்பர் மாதம் தொடங்கியபோதும் மிக கனமழை பெய்து பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் தற்போது அறுவடை காலத்திலும் மழை பெய்து பாதிப்படைந்துள்ளது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    நெல் பயிர்கள் பாதிப்பு குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

    இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண் துறை களப்பணியாளர்கள் தற்போது பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். ஆய்வுக்கு பின்னரே, பாதிப்பு குறித்த நிலவரம் தெரியவரும், பாதிப்பு இருந்தால் அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினர். இதனை தொடர்ந்து, மழை காரணமாக நேற்று பல இடங்களில் நெற்கதிர்களின் கொள்முதல் பணியும் நடைபெறவில்லை. இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லை விவசாயிகள் தார்பாய் கொண்டு மூடி வைத்திருந்தனர். இதனிடையே, மழையுடன் கடல் சீற்றமும் இருந்ததால் டெல்டா பகுதி மீனவர்கள் நேற்று(பிப்.,2) 3வது நாளாக மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை. மேலும் இந்த மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    வானிலை அறிக்கை
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    ஐபிஎல் 2023 : புதிய கேப்டன் ஷிகர் தவான் தலைமையில் கொடி நாட்டுமா பஞ்சாப் கிங்ஸ்? ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஐபிஎல் 2023
    ஐபிஎல் 2023 : தோனியின் கடைசி சீசன்! மீண்டெழுமா சென்னை சூப்பர் கிங்ஸ்! சென்னை சூப்பர் கிங்ஸ்
    உலகம் முழுவதிலும், மனிதனால் உருவாக்கப்பட்ட, பிரமிப்பூட்டும் பாலங்கள் சில! சுற்றுலா

    தமிழ்நாடு

    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை
    ஐஸ்வர்யா வீட்டின் கொள்ளை விவகாரத்தில் புதிய ட்விஸ்ட்: காணாமல் போனதோ 60 சவரன்; மீட்கப்பட்டதோ 100 சவரன்! தமிழக காவல்துறை
    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வீட்டின் கொள்ளை வழக்கில் சிக்கிய மூன்றாவது ஆள் யார்? வைரல் செய்தி

    வானிலை அறிக்கை

    வானிலை அறிக்கை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை தமிழ்நாடு
    தமிழகத்தின் கடலூர் மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரமாக கனமழை தமிழ்நாடு
    வானிலை அறிக்கை: மார்ச் 23- மார்ச் 27 தமிழ்நாடு
    சர்வதேச வானிலை தினம்: இந்த நாளை பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் உலகம்

    மாவட்ட செய்திகள்

    காஞ்சிபுரம் - ஸ்ரீ பெரம்பத்தூரில் தேசிய அளவிலான அறிவியல் மாநாடு தமிழ்நாடு
    காஞ்சிபுர பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு தமிழ்நாடு
    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் கோவை
    அரசு பள்ளியில் ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.24.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023