NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை
    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை

    கனமழை காரணமாக டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை பாதிப்பு - விவசாயிகள் கவலை

    எழுதியவர் Nivetha P
    Feb 03, 2023
    03:14 pm

    செய்தி முன்னோட்டம்

    தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் தற்போது சம்பா அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக அப்பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதாக கூறப்படுகிறது.

    இதனையடுத்து, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் தலா 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்கதிர்களும், நாகை, தஞ்சாவூர் மாவட்ட பகுதிகளில் தலா 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்கதிர்களும் வயலில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    குறிப்பாக மயிலாடுதுறையில் சம்பா சாகுபடி கடந்த நவம்பர் மாதம் தொடங்கியபோதும் மிக கனமழை பெய்து பயிர்கள் சேதமடைந்தது. இந்நிலையில் தற்போது அறுவடை காலத்திலும் மழை பெய்து பாதிப்படைந்துள்ளது அப்பகுதி விவசாயிகள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

    கொள்முதல் பணி தேக்கம்

    நெல் பயிர்கள் பாதிப்பு குறித்து வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு

    இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறுகையில், வேளாண் துறை களப்பணியாளர்கள் தற்போது பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    ஆய்வுக்கு பின்னரே, பாதிப்பு குறித்த நிலவரம் தெரியவரும், பாதிப்பு இருந்தால் அதனை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று கூறினர்.

    இதனை தொடர்ந்து, மழை காரணமாக நேற்று பல இடங்களில் நெற்கதிர்களின் கொள்முதல் பணியும் நடைபெறவில்லை.

    இதனால் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்ட நெல்லை விவசாயிகள் தார்பாய் கொண்டு மூடி வைத்திருந்தனர்.

    இதனிடையே, மழையுடன் கடல் சீற்றமும் இருந்ததால் டெல்டா பகுதி மீனவர்கள் நேற்று(பிப்.,2) 3வது நாளாக மீன்பிடி தொழிலுக்கு செல்லவில்லை.

    மேலும் இந்த மழை காரணமாக வேதாரண்யத்தில் உப்பு உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மாவட்ட செய்திகள்
    வானிலை அறிக்கை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை
    13 வருட கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து விடைபெறும் கிளென் மேக்ஸ்வெல்: ODIகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி
    'ஒன்றரை வருட பிளானிங்': 40 ரஷ்ய ஜெட் விமானங்களை துவம்சம் ஆகிய உக்ரைனின் ட்ரோன்கள்  உக்ரைன்
    30 ஆண்டுகள் சிறை; சென்னை நீதிமன்றம் ஞானசேகரனுக்கு வழங்கிய தண்டனையின் முழு விபரம் பாலியல் வன்கொடுமை

    மாவட்ட செய்திகள்

    ராசிபுரம் பெருமாள் கோயிலில் சிறப்பு ஏற்பாடு - பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்க 50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு தமிழ்நாடு
    சாதிய ஒடுக்குமுறையைத் ஒழிக்க ஒரு சமத்துவ பொங்கல்! இந்தியா
    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! கோவை
    பழுதடைந்த சாலையால் உயிரிழந்த பெண்: Zoho நிறுவனர் ட்வீட்! தமிழ்நாடு

    வானிலை அறிக்கை

    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! சென்னை
    17ஆம் தேதி வரை வெளுத்து கட்டப்போகும் மழை! தமிழ்நாடு
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு
    தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை - கனமழைக்கு வாய்ப்பு! தமிழ்நாடு

    தமிழ்நாடு

    பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு 100% வரிச்சலுகை! தமிழ்நாடு அரசாணை வெளியீடு வாகனம்
    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் இந்தியா
    ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு இந்தியா
    ஊட்டியில் 1.6 செல்சியஸ் வெப்பநிலை பதிவு - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு ஊட்டி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025