NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தகுதி நீக்கம் வாபஸ்: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி
    அடுத்த செய்திக் கட்டுரை
    தகுதி நீக்கம் வாபஸ்: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆனார்

    தகுதி நீக்கம் வாபஸ்: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி

    எழுதியவர் Sindhuja SM
    Aug 07, 2023
    10:54 am

    செய்தி முன்னோட்டம்

    மோடி குடும்பப்பெயர் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்பளித்ததை அடுத்து, மக்களவை செயலகம் இன்று(ஆகஸ்ட் 7) அவரது தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றுள்ளது.

    இதனையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆனார்.

    கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார்.

    எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் அப்போது கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

    இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ்-மோடி அவதூறு வழக்கினை பதிவு செய்திருந்தார்.

    சிலேஜ்வ்ன்

    ராகுல் காந்தியின் சிறை தணடனைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம் 

    இந்த வழக்கை விசாரித்த சூரத்-நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். ஆனால், அதற்கு குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.

    அதற்கு பிறகு, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

    அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறைத்தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

    ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய உச்சநீதிமன்றம், மக்களையும் அவரது தொகுதியையும் கருத்தில் கொண்டு அவரது சிறைத்தண்டனைக்கு தடை விதித்தது.

    இந்நிலையில், தற்போது அவரது எம்பி பதிவியும் அவருக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மக்களவை
    ராகுல் காந்தி

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    மக்களவை

    அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு இந்தியா
    மதுரை எய்ம்ஸ்: நாடாளுமன்றத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திமுக
    குரங்கு கடியால் இறந்தவர்கள் பற்றிய பதிவுகள் இல்லை: மத்திய அரசு நாடாளுமன்றம்
    ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் அமளி தொடரும்: பாஜக காங்கிரஸ்

    ராகுல் காந்தி

    ராகுல் காந்தி விவகாரம்; இடைதேர்தலை நடத்த அவசரம் இல்லை: தேர்தல் ஆணையம் இந்தியா
    ராகுல் காந்தியை எதிர்த்து இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர இருக்கும் லலித் மோடி இந்தியா
    ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பிய பாட்னா நீதிமன்றம் காங்கிரஸ்
    2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி இன்று மேல்முறையீடு காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025