Page Loader
தகுதி நீக்கம் வாபஸ்: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி
ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆனார்

தகுதி நீக்கம் வாபஸ்: மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி

எழுதியவர் Sindhuja SM
Aug 07, 2023
10:54 am

செய்தி முன்னோட்டம்

மோடி குடும்பப்பெயர் வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சாதகமாக உச்ச நீதிமன்றம் தீர்பளித்ததை அடுத்து, மக்களவை செயலகம் இன்று(ஆகஸ்ட் 7) அவரது தகுதி நீக்கத்தை திரும்ப பெற்றுள்ளது. இதனையடுத்து, ராகுல் காந்தி மீண்டும் எம்பி ஆனார். கடந்த 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் கர்நாடக மாநில கோலார் பகுதியில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்து பேசியிருந்தார். எப்படி அனைத்து திருடர்களும் 'மோடி' என்னும் பெயரினை பொதுவாக வைத்துள்ளார்கள் என்று அவர் அப்போது கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து குஜராத் பாஜக எம்எல்ஏ புனரேஷ்-மோடி அவதூறு வழக்கினை பதிவு செய்திருந்தார்.

சிலேஜ்வ்ன்

ராகுல் காந்தியின் சிறை தணடனைக்கு தடை விதித்த உச்ச நீதிமன்றம் 

இந்த வழக்கை விசாரித்த சூரத்-நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதனால், அவரது எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. இந்த தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல் முறையீடு செய்தார். ஆனால், அதற்கு குஜராத் உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. அதற்கு பிறகு, அவர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அவரது மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகால சிறைத்தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது. ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய உச்சநீதிமன்றம், மக்களையும் அவரது தொகுதியையும் கருத்தில் கொண்டு அவரது சிறைத்தண்டனைக்கு தடை விதித்தது. இந்நிலையில், தற்போது அவரது எம்பி பதிவியும் அவருக்கு திரும்ப கொடுக்கப்பட்டுள்ளது.