NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    குவாட்  நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்
    இந்தோ-பசிபிக் பகுதிகளில் சீனாவால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 03, 2023
    01:55 pm

    செய்தி முன்னோட்டம்

    குவாட் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று(மார் 3) புது டெல்லியில் வைத்து நடைபெற்றது.

    இதில் அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

    குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு இடையான உடன்படிக்கையாகும்.

    வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தலைமையில், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன், ஜப்பானிய வெளியுறவுத்துறை அமைச்சர் யோஷிமாசா ஹயாஷி மற்றும் ஆஸ்திரேலியாவின் பென்னி வோங் ஆகியோர் கலந்து கொண்ட கூட்டத்தில், அமைச்சர்கள், இந்தோ-பசிபிக் நிலவரங்கள் குறித்து விரிவான ஆய்வு நடத்தினர்.

    இந்தோ-பசிபிக் பகுதிகளில் சீனாவால் ஏற்படும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

    குவாட்

    இது உலகளாவிய நலனுக்கான சக்தி: குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள்

    குவாட் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, உக்ரைன் போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ரஷ்யாவின் அச்சுறுத்தலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தென் சீனக் கடலில் பதட்டத்தை அதிகரிக்கும் எந்தவொரு ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகளையும் தாங்கள் எதிர்ப்பதாகவும், சர்ச்சைக்குரிய பிரதேசங்களின் "இராணுவமயமாக்கல்" பற்றிய கவலைகளை வெளிப்படுத்துவதாகவும் அமைச்சர்கள் மேலும் தெரிவித்தனர்.

    குவாட், உலகளாவிய நலனுக்கான சக்தியாக செயல்படுவதாகவும், அதன் நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நிகழ்ச்சி நிரல் மூலம் இந்தோ-பசிபிக் பிராந்தியம் சிறந்த முறையில் வழிநடத்தப்படும் என்றும் வெளியுறவு அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    வெளியுறவுத்துறை
    ஜப்பான்
    ஆஸ்திரேலியா

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இந்தியா

    இந்தியாவின் ஒரு தெரு முனையில் நின்று டீ குடித்த ஜெர்மன் அதிபர் உலகம்
    மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் புதிய தலைவராக உத்திரபிரதேச மருத்துவர் பிரசாந்த் லாவனியா நியமனம் மதுரை
    தேசிய அறிவியல் தினம் 2023: அதன் வரலாறும், முக்கியத்துவமும் பற்றி தெரிந்து கொள்வோம் தொழில்நுட்பம்
    கூகுள் Pixel 7, Pixel 6a ஸ்மார்ட்போனுக்கு ஃபிளிப்கார்ட்டின் செம்ம தள்ளுபடி! கூகுள்

    வெளியுறவுத்துறை

    நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு உதவி செய்ய தயார்: பிரதமர் மோடி இந்தியா
    பெண்களுக்காக 50 மில்லியன் டாலர் நிதி வழங்குகிறார் ஹிலாரி கிளின்டன் இந்தியா
    துருக்கி நிலநடுக்கம்: ஒரு இந்தியரை காணவில்லை; 10 பேர் துருக்கியில் சிக்கி உள்ளனர் துருக்கி
    லிபியாவில் ஏஜென்டுகளால் அடிமைகளாக விற்கப்பட்டோம்: பஞ்சாப் இளைஞர்கள் இந்தியா

    ஜப்பான்

    கடல், மணல், பனி மூன்றும் சங்கமிக்கும் ஒரு சொர்க்கம்! ஜப்பான் கடல்
    நாயாக மாற 12.18 லட்சம் செலவு செய்த ஜப்பானியர் - நடந்தது என்ன? உலக செய்திகள்
    கிராமங்களுக்கு இடம்பெயர்ந்தால் உதவி தொகை: இது என்னப்பா புதுசா இருக்கு? உலகம்
    RRR புதிய சாதனை: ஜப்பான் திரையரங்குளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது திரையரங்குகள்

    ஆஸ்திரேலியா

    இரண்டாம் எலிசபெத்தின் படத்தை $5 நோட்டில் இருந்து மாற்றும் ஆஸ்திரேலியா உலக செய்திகள்
    பஜனைகளை நிறுத்துங்கள்: ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்து கோவிலுக்கு மிரட்டல் உலகம்
    ஆஸ்திரேலிய இந்து கோவில்கள் சேதம்: கடுமையான நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை உலகம்
    ஆஸ்திரேலியாவில் இருக்கும் இந்திய துணைத் தூதரகத்தில் காலிஸ்தானி ஆதரவாளர்கள் அட்டூழியம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025